India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி விகிதத்தில் ராமநாதபுரம் மாவட்டம் 11ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தமாக 89.47% தேர்ச்சி பதிவாகியுள்ளது. இதில் மாணவர்கள் 84.64 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவியர் 93.30 சதவீதத்தில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று (மே 14) வெளியாகியுள்ளன. அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் மாணவர்கள் 89.44% பேரும், மாணவியர் 95.80% பேரும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக 92.83% தேர்ச்சி விகிதம் பதிவாகியுள்ளது. மாநில அளவில் 13வது இடம். மாணவர்கள் www.tnresults.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் தேர்வு முடிகளை அறிந்து கொள்ளலாம்.
திருவாடானை ஓரியூர் சாலையில் டாஸ்மாக்
உள்ளது. இதன் எதிரே உள்ள அத்தாணி வயல் கண்மாயில் இன்று அதிகாலை சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று தண்ணீரில் மிதந்துள்ளது. இது குறித்து திருவாடானை கிராம நிர்வாக அலுவலர் நாகேந்திரன் அளித்த புகாரின்பேரில் திருவாடானை போலீசார் சடலத்தை மீட்டு திருவாடானை அரசு மருத்துவமனைக்கு
பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து விசாரணை நடத்தினர்.
மண்டபம் மைக்குண்டு திருச்செந்திலாண்டவர் கோயில் 2ஆம் ஆண்டு வைகாசி விசாகத்திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று துவங்கியது. இதையடுத்து நேற்று மாலை சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த திருச்செந்திலாண்டவரை கிராம மக்கள் தரிசனம் செய்தனர். இங்கு மே 22இல் வெகுவிமரிசையாக நடைபெறவுள்ள விசாகத் திருவிழாவில் பக்தர்கள் காவடி எடுத்து ஊர்வலம் வந்து நேர்த்திக் கடன் செலுத்த உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று (மே.12) மழைப்பொழிவு பதிவான விவரத்தை சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மண்டபம் 7 செ.மீட்டரும், தங்கச்சிமடம் பகுதியில் 3செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவாகியுள்ளது. சமீபமாக கோடையில் தமிழகத்தில் ஆங்காங்கு மழைபெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
ராமேஸ்வரம் துணை மின் நிலையம் ராமநாதசுவாமி கோயில் மின் பாதையில் நாளை வேலை நடைபெற உள்ளது. இதனால் காட்டு பிள்ளையார் கோவில் தெரு, தீட்சிதர் கொல்லை, பெரியார், சிவகாமி நகர், சல்லிமலை, லட்சுமண தீர்த்தம், சீதா தீர்த்தம், ராமர் தீர்த்தம், முருங்கை வாடி, தம்பியான் கொல்லை, வெண்மணி நகர், போஸ்ட் ஆபிஸ் லைன், பணிமனை
பகுதிகளில் மே 14 காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.13) மாலை 4 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
பெருங்குளத்தைச் சேர்ந்தவர் கதீஷ் குமார், (24). இவரது நண்பர் காளீஸ்வரன் (20). இவர்கள் 2 பேரும் நதிப்பாலம் – உச்சிப்புளிக்கு நேற்று மாலை டூவீலரில் வந்தனர். பெருங்குளம் அங்கன்வாடி மையம் அருகே வந்தபோது ராமேஸ்வரம் – ராம்நாடு சென்ற கார் மோதியதில் 2 பேரும் இறந்தனர். இது குறித்து உச்சிப்புளி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் இருவரும் மது போதையில் இருந்தது தெரிய வந்தது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.13) நண்பகல் 1 மணி வரை மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம் மாவட்டத்தில், லேசான இடி மற்றும் மின்னலுடன், லேசானது முதல் மிதமானது வரை மழைப் பொழிவு பதிவாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடையில் வெப்பம் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஆங்காங்கு மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.