India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டம்
புல்லந்தையில் உள்ள அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த பரமக்குடி தாலுகா காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ரவிச்சந்திரன் நேற்று நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து, அவர் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
முதுகுளத்தூர் அருகே முத்துவிஜயபுரத்தை சேர்ந்த ஆரோக்கிய பிரபாகர் மனைவி உமா, மூத்த மகளுடன் வசித்து வந்தார். மாமனார் சேதுவுக்கும், உமாவிற்கும் சொத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. உமா கடந்த மே 20 பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டார் என சேது தெரிவித்துள்ளார். போலீசார் விசாரணையில் சேது தூங்கிக் கொண்டிருந்த உமா மீது பெட்ரோலை ஊற்றி எரித்துள்ளார் என்பது தெரியவந்தது. இன்று சேது கைது செய்யப்பட்டார்.
ராமநாதபுரம் மாவட்டம் SDPI கட்சி சார்பில் நேற்று முதுகுளத்தூர் சர்வசாய் மஹாலில் “இதுதான் பாதை, இதுதான் வெற்றி” என்ற தலைப்பில் SDPI கட்சி அனைத்து மட்ட நிர்வாகிகளும் பங்கேற்ற அரசியல் ஆளுமைகளின் அரங்க கூட்டம் நடைபெற்றது. இதில் SDPI கட்சி இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர் நூருல் அமீன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக SDPI கட்சி மாநில தலைவர் நெல்லை முபாரக் சிறப்புரையாற்றினார்.
ராமநாதபுரம் மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ் தலைமையில் மாதாந்திர குற்றத்தடுப்பு கலந்தாய்வு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து ஏடிஎஸ்பி, ஏஎஸ்பி, டிஎஸ்பி மற்றும் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர். அனைவரும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு குற்றங்கள் நடைபெறாமல் பணி மேற்கொள்ள எஸ்பி உத்தரவிட்டார்.
பாம்பன் அண்ணா நகர் சாலை கடந்த 2 ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த மழைநீர் இச்சாலையில் காணப்படும் குழிகளில் நிரம்பி வழிந்தோட வழியின்றி உள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் நலன் கருதி இச்சாலையை பாம்பன் ஊராட்சி நிர்வாகம் சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே உள்ள செட்டியமடை கிராமத்தில் கடந்த 14ஆம் தேதி ஆலய திருவிழா நடந்தது. இதில் இருதரப்பினர் மோதிக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக நேற்று மீண்டும் இருதரப்பினரும் மோதிக்கொண்டனர். அப்போது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. திருவாடானை டிஎஸ்பி நிரேஷ் தலைமையிலான போலீசார் குவிக்கப்பட்டு சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து வருகின்றனர்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் சுயேச்சை வேட்பாளராகப் போட்டியிட்ட முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜூன் 4ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து திருவாடானை சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.மங்கலத்தில் ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில் பங்கேற்று நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார். தர்மர் எம்பி உள்பட பல நிர்வாகிகள் உடனிருந்தனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் 2024-க்கான வாக்கு எண்ணிக்கையின் போது மேற்கொள்ள வேண்டிய பணி குறித்த பயிற்சி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று நடந்தது. ஜூன் 4ல் நடைபெறும் இப்பணியில் மேற்பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள், பணியாளர்கள் என 400 பேர் ஈடுபடுவர் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்தார். டிஆர்ஓ கோவிந்தராஜலு, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) இளங்கோவன் உடனிருந்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் துறைமுகத்தில் தொலைதூர புயலை எச்சரிக்கும் வகையில் ஒன்றாம் எண் புயல் கூண்டை துறைமுக அதிகாரிகள் இன்று ஏற்றி உள்ளனர். இதனை அடுத்து ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் விசைப்படகு மற்றும் நாட்டுபடகுகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி பொதுத்தேர்தல் வாக்கு எண்ணும் பணி ஜூன் 4ல் நடைபெற உள்ளது. இதையொட்டி ராமநாதபுரம், திருவாடானை உள்ளிட்ட சட்டமன்ற தொகுதிகளின் வாக்கு எண்ணும் பணிக்கு முகவர்கள் நியமிக்கும் பணியை ராமநாதபுரம் மக்களவைத் தொகுதி வேட்பாளர் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று பார்வையிட்டார்.
Sorry, no posts matched your criteria.