Ramanathapuram

News August 7, 2024

வெளியுறவு அமைச்சரை சந்தித்த மீனவ பிரதிநிதிகள்

image

‌ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவ பிரதிநிதிகள் இன்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை தடுக்க கோரியும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தமிழக எம்பிக்கள் கனிமொழி ஆ.ராசா, நவாஸ்கனி ஆகியோர் சந்தித்து இன்று கோரிக்கை விடுத்தனர்.

News August 7, 2024

மீனவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு

image

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் மாயமான மீனவர் ராமசந்திரன் உடலை 6 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

News August 6, 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கடந்த ஜூன் 23ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளது. மேலும், படகு ஓட்டுநர்களுக்கு தலா ரூ.40 லட்சம் அபராதமும் அதனை கட்டத் தவறினால் தலா ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனத் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News August 6, 2024

வக்பு சட்ட முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் – நவாஸ்கனி

image

டெல்லியில் நேற்று ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ்கனி செய்தியாளர்களை சந்தித்தார். வக்பு சொத்துக்கள் தொடர்பாக சட்டத்தில் 40 திருத்தங்களை கொண்டு வர மத்திய மந்திரி சபையில் ஒப்புதல் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் பாஜக ஆட்சிக்கு பேராபத்து உருவாகும். இந்தியா கூட்டணி கட்சி, பிற கட்சிகள் ஆதரவோடு அதனை நாங்கள் தோற்கடிப்போம். இந்த முடிவை பாஜக பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

News August 6, 2024

ராமநாத சாமி கோவில் தேரோட்டம்

image

ராமேஸ்வரத்தில் உலக புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாணம் ஜூலை.29 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவில் தினமும் காலை, மாலை அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. 6 ஆம் நாள் திருவிழாவான இன்று(ஆக.6) காலை 9 மணிக்கு அம்பாள் தேரோட்டம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான ஆக.8 அம்பாள் மாலை மாற்று நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

News August 6, 2024

மீனவர் குடும்பத்தினருடன் கட்சித் தலைவர்கள் சந்திப்பு

image

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவர் மலைச்சாமி‌ குடும்பத்தினரை, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் செரிப், விடுதலை தமிழ் புலிகள் தலைவர் குடந்தை அரசன், மே 17 சார்பில் திருமுருகன் காந்தி, தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற தலைவர் பாண்டியன், தேசிய மீனவர் கட்சியின் சார்பில் சின்னதம்பி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

News August 5, 2024

வெளியுறவு துறை அமைச்சருடன் மீனவ சங்கத்தினர் சந்திப்பு

image

ராமேஸ்வரம் மீனவ சங்கத்தினர் இன்று (ஆக.05) டெல்லியில் வெளியுறவுதுறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையின் தொடர் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை உடனே நிறுத்த கோரியும், இலங்கையில் உள்ள படகுகளை உடனடியாக விடுவிக்ககோரியும், சிறையில் உள்ள மீனவர்களை விடுவிக்க கோரியும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் தரணி முருகேசன் தலைமையில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.

News August 5, 2024

மத்திய அமைச்சரிடம் தமிழக மீனவர்கள் முறையீடு

image

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை தலைமையில், மாநில மீனவரணி தலைவர் முனுசாமி, ராமநாதபுரம் மாவட்ட தலைவர் தரணி முருகேசன் & நாட்டுப்படகு, விசைப்படகு மீனவ சங்க பிரதிநிதிகள் புதுடில்லியில் இன்று மாலை சந்தித்தனர். ஆக.1 ல் இலங்கை கடற்படை படகு மோதி மாயமான மீனவர் ராமச்சந்திரன், இலங்கை கடற்படை சிறை பிடித்துச் சென்ற தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க கோரினர்.

News August 5, 2024

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரகத்தில் குறைதீர்ப்பு கூட்டம்

image

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (05/08/24) மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் கலோன் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலர் தகோவிந்தராசு ஆகியோர் தலைமை வகித்தனர். பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று உரிய நடவடிக்கை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர். மேலும் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

News August 5, 2024

ராமநாதபுரம் மாவட்ட மக்களுக்கு ஜில் நியூஸ்

image

தமிழகத்தில் 22 மாவட்டங்களுக்கு இன்று (ஆக.05) இரவு 10 மணி வரை இடியுடன் கூடிய மிதமானது முதல் லேசான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இடியுடன் கூடிய மிதமான மழையும், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 10 மாவட்டங்களுக்கு லேசான மழையும் இரவு 10 மணி வரை பெய்யும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!