India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பரமக்குடி அருகே எமனேஸ்வரத்தில் வில்லேஜ் ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில் இன்று 6ம் ஆண்டு மாநில அளவிலான மாபெரும் ஐவர் கால்பந்தாட்ட போட்டிகள் நடைபெற்றன. இதில் சிறப்பு விருந்தினராக இந்திய கால்பந்தாட்ட வீரர் சிவசக்தி நாராயணன் கலந்துகொண்டார். இந்நிகழ்வில் மானாமதுரை எம்எல்ஏ தமிழரசி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். தமிழகம் முழுவதுமிருந்து 32 அணிகள் கலந்துகொண்டன. பின் வெற்றிபெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேற்படிப்பு படிக்க புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழி கல்வியில் பயின்ற மாணவிகள் இத்திட்டத்தில் கடந்த ஆண்டில் 42 கல்லூரிகளில் 3083 மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்ற மாணவிகள் மேற்படிப்பு படிக்க புதுமைப்பெண் திட்டத்தில் மாதம் ரூ.1000 வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வரை தமிழ் வழி கல்வியில் பயின்ற மாணவிகள் இத்திட்டத்தில் கடந்த ஆண்டில் 42 கல்லூரிகளில் 3083 மாணவிகள் பயன்பெற்றுள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மத்திய மாவட்டம் தமுமுக நகர் சார்பாக நேற்று பாலஸ்தீன் மக்களுக்கு ஆதரவாகவும், இஸ்ரேல் ராணுவத்தைக் கண்டித்தும் மாவட்ட தலைவர் பிரீமியர் இப்ராஹிம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமுமுக மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் சலிமுல்லாஹ்கான்
கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். இதில் ஏராளமான ஆண்களும், பெண்களும் கலந்து கொண்டனர்.
பரமக்குடியில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில், இன்று காலை முதல் வெயில் வாட்டி வதைத்தது. இந்த நிலையில் மாலை திடீரென கரு மேகங்கள் சூழ்ந்து பரமக்குடி மற்றும் நகர் பகுதிகளில் அரை மணி நேரத்துக்கு மேலாக கனமழை கொட்டி தீர்த்தது. நகர் பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (31.05.2024) மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் தலைமையில் ராமநாதபுரம் பாராளுமன்ற பொதுத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடும் தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு மற்றும் அலுவலர்கள் இருந்தனர்.
ராமநாதபுரம் தாமரை ஊரணியை சேர்ந்தவர் ராஜபாண்டி மகன் மணிகண்டன்(32). டிரைவரான இவர் மலேசிய குடியுரிமை பெற்ற, கேரளத்தை சேர்ந்த சிறுமியை(16) திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். ராமநாதபுரம் அனைத்து மகளிர் போலீசார் சிறுமியை மீட்டு அரசு மருத்துவமனை குழந்தைகள் காப்பகத்தில் சேர்த்தனர். போக்சோ, சிறுமி திருமண தடை சட்ட பிரிவுகளின் கீழ் மணிகண்டன் மீது வழக்கு பதிந்து(மே 29) விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (மே.30) இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் எனத் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், தற்போது கோடை மழை முடிவடைந்து, ஆங்காங்கே வெப்பம் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் (காவிரி), திருச்சி முத்தரசநல்லூர், தலைமை நீரேற்று நிலையத்தில் இருந்து நீரேற்றம் செய்யும் பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் இராமநாதபுரம் மாவட்டத்தில் 31.05.2024 மற்றம் 01.06.2024 ஆகிய இரண்டு தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு சந்திரன் அறிவித்துள்ளார்.
திருவாடானை தாலூகா எஸ்.பி. பட்டினம் அருகே அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் மாரிமுத்து. இவருக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவருடைய இரண்டாவது மகன் நரசிங்கம் (9) நேற்று வீட்டில் குழந்தைக்கு சேலையால் கட்டப்பட்டிருந்த தொட்டிலில் படுத்துக்கொண்டு சுற்றி வந்துள்ளான். அப்போது சேலை இறுகிய நிலையில் மூச்சுத் திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தான். எஸ். பி. பட்டினம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.