India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வட தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், தென் தமிழக உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் மழை பெய்து வருகிறது. அதன்படி நாளை(ஆக.11) ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று உங்கள் பகுதியில் மழை பெய்தால் கமெண்ட் செய்யவும். SHARE IT
ராமநாதபுரம் மாவட்டத்திற்கு இன்று (ஆக.10) இரவு 7 மணி வரை இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, ராமநாதபுரம், தேனி, மதுரை, நெல்லை, விருதுநகர், குமரி உள்ளிட்ட 32 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில், விவசாயிகள் சாகுபடி பணிகளை துவங்கியுள்ளனர்.
இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் வர்த்தினி மஹால் லெட்சுமண தீர்த்தம் அருகில் வரும் ஆகஸ்ட் 12 மற்றும்13 ஆகிய இரு தினங்கள் 35 ஆம் ஆண்டு கம்பன் தொடக்க விழா நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினா்களாக தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பங்கேற்க இருக்கின்றனர். இதில் மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா மற்றும் நாட்டியாஞ்சலி, பட்டிமன்றம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கிறது.
கொச்சி அம்ருதா மருத்துவமனை சார்பில் ராமநாதபுரம் ஆர்.எஸ்.மடை அம்ருதா வித்யாலயத்தில் இருதய நோய் பாதித்த 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கான இலவச மருத்துவ முகாம் வரும் ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் சிகிச்சை பெற விரும்புவோர் 8921508515 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தங்களது குழந்தைகளின் பெயரை முன்பதிவு செய்து பயன் பெறலாம் என அம்ருதா மருத்துவமனை மருத்துவர் பாலாஜி முருகன் தெரிவித்துள்ளார்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேரை ஆகஸ்ட் 22ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க இலங்கை புத்தளம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மன்னார் கடற்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் மீனவர்கள் 35 பேரை நேற்று முன்தினம் இலங்கை கடற்படை கைது செய்தது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் 429 கிராம ஊராட்சிகளிலும் ஆக.15ஆம் தேதி காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. வேண்டும். இதில் பொது நிதி செலவு, தூய குடிநீர் விநியோகம், 100 நாள் வேலை, தூய்மை பாரத இயக்கம், ஜல் ஜீவன் இயக்கம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்க மக்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை பதிவு செய்யலாம் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை இன்று கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு தொடர்பான துண்டு பிரசுரங்களையும் வெளியிட்ட கலெக்டர் குடிநீர் பரிசோதனை ஆய்வகத்தையும் பார்வையிட்டார். இதில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, உதவி ஆட்சியர் முகம்மது இர்ஃபான், விவசாய இணை இயக்குனர் கண்ணையா ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்டு தங்களின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்தனர்.
ராமநாதபுரம் குளத்தூர் பகுதியைச் சேர்ந்த லெனின் என்பவர் தனக்கு வந்த குறுஞ்செய்தியை நம்பி, தனது வங்கி கணக்கில் இருந்து ரூ.95 ஆயிரம் முதலீடு செய்துள்ளார். இதன் பிறகு தனக்கு லாபமாக வந்த பணத்தை எடுக்க முடியாமல் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து cybercrime.gov.in இணையதளத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து விசாரித்த சைபர் கிரைம் போலீசார் ரூ.95,000 பணத்தை மீட்டு உரியவரிடம் எஸ்.பி. முன்னிலையில் ஒப்படைத்தனர்.
இராமநாதபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணிபுரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் நிலையில் பணிமாறுதல் வழங்கி மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் இன்று (ஆக.08) உத்தரவிட்டுள்ளார். அதன்படி ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் மற்றும் ஊராக வளர்ச்சி முகமையில் பணியாற்றிய 48 பேர் பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.