India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
திருச்சி முத்தரசநல்லூர் தலைமை நீரேற்று நிலையத்தில் வரும் 20ஆம் தேதி மாதாந்திர மின் நிறுத்தம் மற்றும்பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரி செய்ய இருப்பதால் இராமநாதபுரம் மாவட்டத்தில் 20 மற்றும் 21 ஆகிய 2 தினங்கள் காவிரி கூட்டுக் குடிநீர் விநியோகம் இருக்காது என மாவட்டஆட்சித்தலைவர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் இன்று (ஆக.14) அறிவித்துள்ளார்.
செகந்திராபாதில் இருந்து இராமநாதபுரத்திற்கு சிறப்பு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் திருச்சி, சென்னை, நெல்லூர் வழியாக செகந்திராபாத் சென்றடைகிறது. இந்நிலையில், தற்போது பயணிகளின் வசதிக்காக வரும் 21ஆம் தேதியில் இருந்து அடுத்த மாதம் 27ஆம் தேதி வரை ரயில் சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் வருகிற (ஆக 15) சுதந்திர தினத்தன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் காலை 11 மணியளவில் நடைபெறும் என மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் ஐஏஎஸ் தெரிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறுமாறு தெரிவித்துள்ளார்.
நிதி மோசடி வழக்கில் தேவநாதன் யாதவ் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். யார் இவர்? வின் டிவியின் நிறுவனரான இவர் யாதவ மகா சபையின் தலைவராகவும், இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக நிறுவன தலைவராகவும் உள்ளார். பாஜக கூட்டணியில் 2016 ஆம் ஆண்டு ராமராதபுரம், திருவாடணை சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு 11,842 வாக்குகள் பெற்றார். 2024 மக்களவை தேர்தலில் சிவகங்கை தொகுதியில் போட்டியிட்டு 1,95,788 ஓட்டுகள் பெற்றார்.
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் ஊழியர்கள், 89 பேரின் வருங்கால வைப்பு நிதியில் கடந்த 2019ல் ரூ.91 லட்சம் மோசடி நடைபெற்றது. இதில் கோயில் முன்னாள் இணை ஆணையர் உட்பட 4 பேர் மீது சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிந்து 2000 பக்க குற்ற பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று ராமநாதபுரம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது வழக்கை அடுத்த மாதம் 13க்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள தமிழ்நாடு ஆளுநர் ரவி இன்று காலை விருந்தினர் மாளிகைக்கு வந்தார். அங்கு தங்கியிருந்த அவரை தேவேந்திர சேனா சமூகம் மற்றும் கலாச்சார அறக்கட்டளையின் பிரதிநிதிகள் நேரில் சந்தித்து, “தேவேந்திரகுல வேளாளர் மக்களை பட்டியலில் இருந்த வெளியேற்ற வேண்டும்” என கோரிக்கை மனுவை அளித்தனர்.
இராமநாதபுரம் விருந்தினர் மாளிகையில் நாட்டுப்படகு மீனவர்கள் இன்று (ஆக.12) தமிழக ஆளுநரை நேரில் சந்தித்து 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தில் 6வது சரத்தில் உள்ள மீன்பிடி உரிமையை செயல்படுத்த மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தக்கோரியும், இலங்கை கடற்படை இந்திய நாட்டுப்படகுகளை பிடிப்பதை தடுக்கவும், பிடிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் நாட்டுப்படகுகளை மீட்க நடவடிக்கை எடுக்ககோரியும் மனு அளித்தனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் வரும் 27ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று இராமநாதபுரம் கோட்டம் செயற்பொறியாளர் அலுவலகத்தில் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை பொறியாளர் சஹர்பான் தலைமையில் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற இருக்கிறது. எனவே மின் நுகர்வோர்கள் தங்கள் குறைகளை மனுக்களாக வழங்கி பயன்படலாம் என செயற்பொறியாளர் சஹர்பான் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இருந்து 2021 இல் சட்டவிரோதமாக கனடா, ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்ல 38 பேரிடம் தலா 1 லட்சம் பெற்றுக்கொண்டு கள்ளத்தோணியில் தனுஷ்கோடி கடல் வழியாக மண்டபம் அழைத்து வரப்பட்டனர். அங்கிருந்து சாலை மார்க்கமாக மங்களூர் அழைத்துச் சென்ற நிலையில் 13 பேரை மங்களூர் போலீசார் கைது செய்தனர். இவர்களை மங்களூருக்கு அனுப்பிய சீனி அபுல் கான் என்பவரை நேற்று என்.ஐ.ஏ அதிகாரிகள் கைது செய்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பாம்பன் நாட்டு படகு மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போரட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவித்துள்ளனர். குறிப்பாக கடந்த (ஆக,8) இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட பாம்பன் மீனவர்கள் 35 பேரையும் நான்கு நாட்டு படகுகளையும் உடனடியாக விடுதலை செய்ய கோரி பாம்பன் மீனவர்கள் இன்று முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போரட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.