India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் திமுக தலைமையிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் போட்டியிட்ட நவாஸ் கனி 1,66,782 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். 2வது முறையாக தொகுதியை தக்கவைத்த நவாஸ் கனி, முதல்வர் ஸ்டாலினை நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். இயூமு லீக் தலைவர் காதர் மொய்தீன், அமைச்சர் தங்கம் தென்னரசு, காதர்பாட்ஷா முத்துராமலிங்கம் எம்எல்ஏ உள்பட பலர் இருந்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாவில் நிஷா பவுண்டேசன் மாநில நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது.
இதில் கந்தர் ராசிக் தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு நிஷா பவுண்டேசன் கெளரவ ஆலோசகரும், முன்னாள் காவல் துறை சார்பு ஆய்வாளருமான சீனிமுஹம்மது பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். மேலும் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
ராமநாதபுரம் அருகே உள்ள கூரியூர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்மணி (29). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த இவர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்திருந்தார். இந்நிலையில் ஊரில் உள்ள குளத்தின் கரையில் அமர்ந்திருந்த அவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டுள்ளது.இதில் நிலை தடுமாறி குளத்திற்குள் விழுந்த தமிழ்மணி தண்ணீரில் மூழ்கி மூச்சுத் திணறி பலியானார்.
கருணாநிதி நூற்றாண்டு நிறைவு விழா மற்றும் 101வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 27வது வார்டு செயலாளர் முனியாண்டி ஏற்பாட்டில் நகர்மன்ற தலைவர் கார்மேகம் 101 தென்னை மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினார். உடன் நகர்மன்ற உறுப்பினர்கள் காளிதாஸ், இராமநாதன், நகர துணைச்செயலாளர் நாகநாதன், மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளர் பிரதீப், பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தொடர்ந்து இரண்டாவது முறையாக மக்கள் நலப் பணி ஆற்றிட கே.நவாஸ்கனிக்கு ஆதரவு அளித்த மக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து இந்திய யூனியன் முஸ்லீம் லீக் தென்மண்டல இளைஞரணி துணை அமைப்பாளர் அன்சாரி தலைமையில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இளைஞரணியினர் நகர் பகுதியில் பல இடங்களில் ப்ளக்ஸ் பேனர் வைத்து நன்றி தெரிவித்து வருகின்றனர்.
இராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் நாம் தமிழர் சார்பில் சந்திரபிரபா ஜெயபால் போட்டியிட்டார். இந்நிலையில் இவர் 4 சட்டமன்றத் தொகுதியில் 3வது இடத்தை பிடித்தார். இராமநாதபுரம், பரமக்குடி (தனி), திருவாடானை, அறந்தாங்கி ஆகிய 4 சட்டமன்றத் தொகுதியிலும் அதிமுக வேட்பாளரை பின்னுக்குத் தள்ளி 3வது இடத்தை பிடித்தார். நேற்று வெளியான இறுதி பட்டியலில் நாடாளுமன்ற தொகுதியில் 8.8% வாக்குகள் பெற்றுள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில் திமுக கூட்டணியில் நவாஸ்கனியும், பாஜக கூட்டணியில் ஓ. பன்னீர் செல்வமும் களமிறங்கி கவனத்தை ஈர்த்தனர்.இதில் நவாஸ்கனி வெற்றியை தனதாக்கினார். நவாஸ் கனி இத்தொகுதியில் 2ஆவது முறையும், ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து பிரிந்து சந்திக்கும் முதல் தேர்தலாகும். மேலும் இவரின் முதல் மக்களவைத் தேர்தலும் இதுவே. இத்தொகுதியில் திமுக 3 முறையும், காங்கிரஸ் 6 முறையும், அதிமுக 4 முறையும் வென்றுள்ளது.
தேசிய கால்நடை நோய் தடுப்புத் திட்டத்தின் கீழ் காணை நோய் தடுப்பூசி 5-வது சுற்று பணி ஜூன் 10 முதல் 21 நாள், விடுபட்ட கால்நடைகளுக்கு ஜூலை 10 வரை தடுப்பூசி பணி முகாம் ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் நடைபெறவுள்ளது. தங்கள் கிராமத்தில் முகாம் நடைபெறும் நாளில்
கால்நடை வளர்ப்போர் தங்கள் மாட்டினங்களை அழைத்துச் சென்று தடுப்பூசி செலுத்தி பயன்பெறலாம் ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை (ஜுன் 6) நாட்டு படகுகள் ஆய்வு செய்யப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குநர் கோபிநாத் தெரிவித்துள்ளார். மேலும் ஆய்வின் போது படகுகளின் தரம், உறுதி, தயாரிக்கப்பட்ட தேதி, கடலுக்குள் சென்று ஆபத்தில்லாமல் மீன் பிடிக்க தகுதியானதா என சரிபார்க்கப்படும். படகு உரிமையாளர்கள் பதிவு சான்று, மீன்பிடி உரிமம் உள்ளிட்ட ஆவணங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரத்தில் நடந்து முடிந்த மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர், முன்னாள் (இன்னாள்) எம்பி உட்பட 25 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் நவாஸ்கனி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றார். ஓபிஎஸ், அதிமுக, நாதக அடுத்தடுத்த இடங்களை பிடித்த நிலையில் நோட்டா 6295 வாக்குகள் பெற்று 8வது இடத்தை பிடித்தது. இதனால் போட்டியிட்ட 18 வேட்பாளர்களை பின்னுக்கு தள்ளியது.
Sorry, no posts matched your criteria.