India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் தனியார் திருமண மண்டபத்தில் 1997 ஆம் ஆண்டின் முதல் பேஜ் காவல்துறை நண்பர்களின் சங்கமம் கடல் புறா குழுவினரின் இரண்டாம் ஆண்டு காவலர்கள் ஒன்று கூடல் விழா இன்று நடைபெற்றது. இவ்விழாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்திஷ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அனைவரையும் வாழ்த்தினார்.
ராமேஸ்வரம் தீவை இணைக்கும் புதிய பாம்பன் ரயில்வே பாலத்தில் பதினோரு கூட்ஸ் பெட்டிகளைக் கொண்ட லோடு டெஸ்ட் எனும் சோதனை ஓட்டம் இன்று(ஆக.,21) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. புதிய ரயில்வே பாலம் தொடக்கம் முதல் சின்னப்பாலம் ரயில்வே கேட் வரை 20 கிலோ மீட்டர் வேகம் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரையிலான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
ராமேஸ்வரம் தீவை இணைக்கும் புதிய பாம்பன் ரயில்வே பாலத்தில் பதினோரு கூட்ஸ் பெட்டிகளைக் கொண்ட லோடு டெஸ்ட் எனும் சோதனை ஓட்டம் இன்று(ஆக.21) காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெற உள்ளது. புதிய ரயில்வே பாலம் தொடக்கம் முதல் சின்னப்பாலம் ரயில்வே கேட் வரை 20 கிலோ மீட்டர் வேகம் முதல் 60 கிலோ மீட்டர் வேகம் வரையிலான சோதனை ஓட்டம் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் வெளிபட்டணம் சார்பதிவாளராக (பொறுப்பு) பணியாற்றிய பெத்துலட்சுமி லஞ்சம் வாங்குவதாக எழுந்த புகாரின் படி 19.10.23 இல் இடைத்தரகர்களிடம் ரூ.1,84,500 பெற்ற போது லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் பெத்துலட்சுமி வீட்டில் கணக்கில் வராத பல லட்சம் ரூபாய், ஆவணங்களை கைப்பற்றினர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த பெத்துலட்சுமி மீது இன்று மேலும் ஒரு வழக்கு பதிவவாகியுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் கல்வி கடன் மேளா திட்டமானது ஆக. 21, 22, 23, 27 ஆகிய தேதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. ஆக.21 அன்று செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியிலும், ஆக.22 ராமநாதபுரம் அண்ணா பல்கலைக்கழகம், ஆக.23 முகமது சதக் பொறியியல் கல்லூரி கீழக்கரை, ஆக.27ம் கணபதி செட்டியார் பொறியியல் கல்லூரி பரமக்குடியிலும் நடைபெறவுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக தமிழ்நாட்டில் ஆக.25 வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இன்று ராமநாதபுரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வேலைநாடும் இளைஞர்கள் பயன்பெறும் பொருட்டு தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது. இதில் தனியார்துறை நிறுவனங்கள் கலந்துகொண்டு தங்கள் நிறுவனத்திற்கு தேவையான நபர்களை தெரிவு செய்ய இருப்பதால், தகுதிவாய்ந்த நபர்கள் இந்த முகாமை பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் தபால் துறையில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் MERIT பட்டியல் வெளியாகியிருக்கிறது. ராமநாதபுரம் தபால் துறையில் கிளை போஸ்ட் மாஸ்டர், உதவி கிளை போஸ்ட் மாஸ்டர், கிராமின் டாக் சேவக் ஆகிய 110 பணியிடங்களை நிரப்ப அண்மையில் அறிவிப்பு வெளியாகியிருந்தது. இப்பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது என்பதால், ஏராளாமானோர் விண்ணப்பித்திருந்தனர். <
மண்டபம் தென் கடல் விசைப்படகுகளுக்கு நாளை (ஆக. 20) மீன்பிடி அனுமதி சீட்டு வழங்கப்படும். காற்றின் வேகம் அதிகம் என்பதால் தொழிலுக்குச் செல்லும் மீனவர்கள் உயிர் காப்பு மிதவை, உயிர் காக்கும் சட்டை, படகு பதிவு, காப்பீடு சான்றுகள், மீன்பிடி உரிமம், மீன்பிடி அனுமதி சீட்டு, மீனவர் அடையாள அட்டை, ஆதார் கார்டு ஆகியற்றை எடுத்துச்செல்லுமாறு மண்டபம் மீன்வளத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம், திருச்சி முத்தரசநல்லூர் தலைமை நீரேற்று நிலையத்தில் நாளை(ஆக.,20) மாதாந்திர மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. தொடர்ந்து, நீர் செல்லும் பிரதான குழாய்களில் உள்ள கசிவுகள் சரிசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்டத்தில் நாளை(ஆக.,20 ), நாளை மறுநாள்(ஆக.,21) காவிரி குடிநீர் விநியோகம் இருக்காது என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார். SHARE IT.
Sorry, no posts matched your criteria.