India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் பள்ளிக் கல்வித் துறை சார்பில் யோகா ஒலிம்பியாட் மாவட்ட அளவிலான மாணவர்கள் தேர்வு நேற்று (ஜூன் 11) நடந்தது. முதன்மை கல்வி அலுவலர் பிரின்ஸ் ஆரோக்யராஜ் துவக்கி வைத்தார். உடற்கல்வி ஆய்வாளர் வசந்தி, உடற்கல்வி இயக்குநர் ராஜசேகர், உடற்கல்வி ஆசிரியர்கள் ரமேஷ், கோபி லட்சுமி, சிவக்குமார், வின்சென்ட் சேவியர், பாலசுந்தரம் தேர்வு செய்தனர். இதில் தேர்வாகும் மாணவர்கள் மாநில போட்டிக்கு தகுதி பெறுவர்.
பெருங்குளம் துணைமின் நிலையத்திற்குட்பட்ட கீழநாகாச்சி
பீடரில் உள்ள பழுதடைந்த மின் கம்பங்கள், மின்வயர்களை மாற்றி அமைக்கும் பணிக்காக இன்றுமுதல் (ஜூன் 12) நாளை மறுநாள்வரை (ஜூன் 14) 3 நாள்களுக்கு உச்சிப்புளி, துத்திவலசை, என்மனம்கொண்டான், காமராஜர் நகர், மரம் வெட்டிவலசை, அரசு ஆரம்ப சுகாதர நிலையம், மெயின்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் காலை 10 முதல் 5 மணிவரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரமக்குடி வைகை நகரில் வசிப்பவர் முருகானந்தம் (45) கடந்த 2021ம் ஆண்டு பரமக்குடியிலிருந்து வீட்டிற்கு சித்தனேந்தல் மலைச்சாமி என்பவர் ஆட்டோவில் சென்றார். அப்போது 23 பவுன் நகைகளுடன் கைப்பையை ஆட்டோவில் விட்டு சென்றுள்ளார். ஆட்டோ டிரைவர் இல்லை என மறுக்கவே முருகானந்தம் ராம்நாடு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நீதிமன்றம் உத்தரவின்படி எமனேஸ்வரம் போலீசார் இன்று வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள BC, MBC, சீர்மரபினர் விடுதிகளில் சேரத்தகுதி உடைய பள்ளி, கல்லூரி மாணாக்கர் தங்களது
பெற்றோர் (அ) காப்பாளரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும். பூர்த்தி செய்த விண்ணப்பத்தை பள்ளி விடுதிகளில் சேர ஜூன் 14ஆம் தேதிக்குள், கல்லூரி விடுதிகளில் சேர ஜூலை 15ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
மண்டபம் முகாம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணாக்கர் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு துவக்க விழா நேற்று (ஜூன் 10) நடந்தது. மண்டபம் பேரூராட்சி ராஜா துவக்கி வைத்தார். தலைமை ஆசிரியர் மகேஸ்வரன், வட்டார வள மைய மேற்பார்வையாளர் வனிதா முன்னிலை வகித்தனர். பள்ளி மேலாண் குழு உறுப்பினர் சைவ.சரவணன், உதவி தலைமை ஆசிரியர் அக்சல்யா, ஆசிரியர்கள்
ஜெயக்குமார், இருதய ஆரோக்யமேரி, ரமேஷ் (உடற்கல்வி) இப்பணியில் ஈடுபட்டனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள கடற்கரை கிராமங்களில் இன்று மாலை 05.30 மணி முதல் ஜூன் 12 இரவு 11.30 மணி வரை கடலில் 2.7 மீட்டர் முதல் 3.0 மீட்டர் உயரம் வரை பேரலைகள் எழும்பக்கூடும். மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகம் வரை பலத்த காற்று வீசப்படும் என இந்திய வானிலை மையத்தால் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, கடற்கரையை சுற்றியுள்ள சுற்றுலா தலங்கள் மக்கள் செல்ல வேண்டாம் என கலெக்டர் அறிவித்துள்ளார்.
கமுதி அருகே உள்ள கே.பாப்பங்குளம் அரசு தொடக்கப்பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றுபவர் கண்ணன் (51). இவர் இன்று காலை தனது இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கு சென்றபோது மர்ம நபர்கள் வழிமறித்து அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து டிஎஸ்பி இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வு 146 மையங்களில் 165 அறைகளில் நடைபெற்றது. இதில் 41,445 நபர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில் 32,863 பேர் மட்டும் தேர்வு எழுதினர். தேர்வு முடிந்தவுடன் விடைத்தாள்கள் நகர்வு குழுக்கள் மூலம் காவல்துறை பாதுகாப்புடன் கருவூலங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டன. ஆட்சியர் விஷ்ணு சந்திரன் நேரில் பார்வையிட்ட ஆய்வுசெய்தார்.
திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலராக (கி. ஊ) பணியாற்றிய கே.சந்திரமோகன், சமுதி வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (கி. ஊ) திருப்புல்லாணி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (தணிக்கை) பி.ஆரோக்கியமேரி சாராள் பதவி உயர்வு பெற்று திருவாடானை வட்டார வளர்ச்சி அலுவலர் கிராம ஊராட்சியாகவும் பணி மாறுதல் செய்து மாவட்ட ஆட்சியர் விஷ்ணு சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 1433-ம் பசலி ஜமாபந்தி ஜூன் 11 முதல் 20 வரை (சனி, ஞாயிறு, திங்கள் தவிர) தாலுகா வருவாய் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.
இதில் கோரிக்கை மனுக்களை ஜமாபந்தி அலுவலர் & https://cmhelpline.tnega.org/support/iipgcms/ என்ற இணையதளம், இ-சேவை மையம் மூலம் ஜூன் 11 முதல் 20 வரை பதிவேற்றம் செய்து உரிய தீர்வு பெறலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.