Ramanathapuram

News June 15, 2024

குவைத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு நிதியுதவி

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த நிலையில் அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்பு இன்று தமிழக அரசு சார்பில் ஐந்து லட்சம் ரூபாய் நிதி உதவிக்கான காசோலையை மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜலு, பரமக்குடி எம்எல்ஏ முருகேசன் ஆகியோர் அவரது குடும்பத்திற்கு வழங்கி ஆறுதல் தெரிவித்தனர்.

News June 15, 2024

குவைத்தில் இறந்தவரின் உடலுக்கு இறுதி சடங்கு நிகழ்ச்சி

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே தென்னவனூர் கிராமத்தைச் சேர்ந்த ராமு என்பவர் குவைத் தீ விபத்தில் உயிரிழந்தார். இந்நிலையில் அவரது உடல் நேற்று நள்ளிரவு அவரது சொந்த ஊரான தென்னவனூருக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டுவரப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று காலை அவரது உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் ‌ பொதுமக்கள் உறவினர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்து இறுதி சடங்கு நிகழ்ச்சி செய்து வருகின்றனர்.

News June 14, 2024

ராம்நாடு: மாணவர்கள் கவனத்திற்கு

image

திருவாடானை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதல் கலந்தாய்வு நடைபெற்று வருகிறது. காலியிடங்கள் உள்ளதால் இணைய வழியாக விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தற்போது நேரடியாக விண்ணப்பம் பெற்று சேரலாம். ஜூன் 19ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இரண்டாம் கட்ட கலந்தாய்வு 25.06.2024 அன்று நடைபெறும் என கல்லூரி முதல்வர் பழனியப்பன் தெரிவித்துள்ளார்.

News June 14, 2024

ராம்நாடு: புதுப்பிக்கப்பட்ட யூனிமோனி கிளை துவக்கம்

image

இராமநாதபுரத்தில் Unimoni Financial Services Ltd எனும் அந்நியச் செலாவணி மற்றும் பணப் பரிமாற்ற சேவை வழங்கும் நிறுவனம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை எதிரில் தனது புதுப்பிக்கப்பட்ட கிளையைத் துவங்கியது. இதனை தலைமை மக்கள் அதிகாரி ரத்தீஷ் திறந்து வைத்தார்.
திருநெல்வேலி மண்டல தலைவர் கார்த்திகேயன், கிளை மேலாளர் கார்த்திக்ராஜா முன்னிலை வகித்தனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டது.

News June 13, 2024

சூறாவளி: மீனவர்களுக்கு எச்சரிக்கை

image

ராமநாதபுரம் மாவட்ட கடலோர பகுதிகளில் ஐந்து நாட்களுக்கு (13 ஜூன் – 17 ஜூன்) சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் இன்று முதல் அடுத்த ஐந்து நாட்களுக்கு கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News June 13, 2024

ராம்நாட்டை சேர்ந்தவர் குவைத் தீ விபத்தில் பலி

image

குவைத் நாட்டின் மங்காப் என்ற இடத்தில் தொழிலாளர்கள் தங்கியிருந்த கட்டடத்தில், நேற்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக 53 நபர்கள் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது‌. தீ விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என்ற தகவலும் வந்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் தென்னவனூர் பகுதியைச் சேர்ந்த கருப்பண்ணன் ராமு என்பவர் உயிரிழந்தார்.

News June 13, 2024

நீதிமன்றத்தில் பெண்ணின் கன்னத்தில் அறைந்த வக்கீல்

image

திருவாடானை: தேளூரை சேர்ந்தவர் அழகம்மாள். இவரது இட பிரச்சனை தொடர்பாக திருவாடானை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இவரது வக்கீல் வழக்கை சரியாக நடத்தாததால். நேற்று நீதிமன்றத்தில் அவரது வழக்கு ஆவணங்களை கேட்டு மனு செய்துள்ளார். அப்போது வந்த வக்கீல் அழகம்மாவை அசிங்கமாக பேசி கன்னத்தில் அறைந்துள்ளார். புகாரின்பேரில் திருவாடானை போலீசார் வக்கீல் சுவாமிநாதன் மீது வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

News June 13, 2024

ராம்நாடு: முன்னாள் ராணுவ வீரர் விபத்தில் பலி

image

திருவாடானையைச் சேர்ந்தவர் கருமொழிஜோசப் (54), Ex ராணுவ வீரர். இவர் நேற்று மாலை திருச்சி- ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில்
வாக்கிங் சென்றார். அப்போது பின்னால் வந்த கார் இவர் மீது மோதியது. இதில் காயமடைந்த அவரை தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதித்த டாக்டர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். தகவலறிந்த திருவாடானை போலீசார் அவரது உடலை மீட்டு வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர்.

News June 12, 2024

கோடை உழவு சாகுபடி: விவசாயிகளுக்கு பயிற்சி

image

உச்சிப்புளி வட்டார வேளாண்துறை சார்பில் மானாங்குடியில் அட்மா கிராம வேளாண் முன்னேற்றக் குழு விவசாயிகளுக்கு காரிப் (கோடை) பருவ பயிற்சி இன்று நடந்தது. முதல்வரின் மண்ணுயிர் காப்போம் திட்டம், கோடை உழவு, மண் பரிசோதனை, உழவன் செயலி பயன்பாடு குறித்து உச்சிப்புளி வட்டார தொழில்நுட்ப மேலாளர் பானுமதி, உதவி மேலாளர் பவித்ரன் பேசினர். உச்சிப்புளி வேளாண் வட்டார அட்மா திட்ட அலுவலர்கள் ஏற்பாடு செய்தனர்.

News June 12, 2024

எஸ்பி அலுவலகத்தில் குறைதீர்க்கும் கூட்டம்

image

ராமநாதபுரம் மாவட்டம் எஸ்பி அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று எஸ்பி சந்தீஷ் தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மக்கள் தங்களது குறைகளை மனுக்களாக எஸ்பியிடம் கொடுத்தனர். குறிப்பாக குடும்ப பிரச்சனை, பணம் தகராறு உள்ளிட்ட மனுக்கள் கொடுக்கப்பட்டன. மனுக்களை பெற்ற எஸ்பி சம்பந்தப்பட்ட காவல் நிலையங்களுக்கு அனுப்பி விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்.

error: Content is protected !!