Ramanathapuram

News August 2, 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்

image

ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று மீன் பிடிக்க சென்ற நிலையில், நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் மீனவர்களின் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில் ஒரு மீனவர் உயிரிழந்த நிலையில், சிலர் மீட்கப்பட்டனர். இந்நிலையில், மீனவர்களை கைது செய்து தாக்குதல் நடத்தும் இலங்கை கடற்படையை கண்டித்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக தெரிவித்துள்ளனர்.

News August 2, 2024

ராமநாதபுரத்தில் ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம்

image

ராமநாதபுரம் ஆட்சியர் அலுவலகத்தில் அலுவலக கூட்ட அரங்கில் அரசுத்துறை ஓய்வூதியர் குறைதீர்க்கும் கூட்டம் ஆக.14ல் காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. ஓய்வூதியர்கள் & ஓய்வூதியர் சங்க பிரதிநிதிகள் தங்களது குறைகளை முன் மனுக்களாக ஓய்வூதியர் குறை தீர்க்கும் நாள் மனு என குறிப்பிட்டு ஆட்சியர், ராமநாதபுரம் என முகவரியிட்டு ஆக.9க்குள் அனுப்ப வேண்டும் என கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News August 2, 2024

இலங்கை போலீசார் மீதான வழக்கு ஒத்திவைப்பு

image

இலங்கை போலீஸ் நிலையத்தில் போதைப்பொருள் திருடி கடந்த 2020ம் ஆண்டு தப்பி வந்து தனுஷ்கோடியில் இலங்கை போலீஸ் பிரதீப்குமார் பண்டாரா(34) கைதானார். திருச்சி முகாமில் தங்கியுள்ள இவர் மீதான வழக்கு ராமநாதபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் நேரில் ஆஜராக முடியவில்லை என மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனால் நீதிபதி குமரகுரு வழக்கினை வரும் 16ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

News August 1, 2024

192 பாட்டில்கள் பறிமுதல்

image

தேவிபட்டினம் அருகே முடிவீரன்பட்டினம் சாலையில் ராமநாதபுரம் நகர் நெடுஞ்சாலை ரோந்து, தனிப்பிரிவு போலீசார் நேற்று மாலை வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதித்ததில் அதில் புதுச்சேரி மாநில மதுபானம் 192 பாட்டில்கள் இருந்தன. இதனை காரில் கடத்தி வந்த ஆக்கிடாவலசை பார்த்திபன், ஆண்டித்தேவன்வலசை துரைராஜ் ஆகியோர் மீது தேவிபட்டினம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News August 1, 2024

போக்குவரத்து முற்றிலும் முடக்கம்

image

ராமேஸ்வரம் மீனவர் படகினை இலங்கை கடற்படையினர் தங்கள் ரோந்து படகின் மூலம் மோதி மூழ்கடித்தனர். இதில் மீனவர் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றொரு மீனவரை காணவில்லை. இதனால் மீனவர்கள் இன்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ராமேஸ்வரத்தில் அரசு மற்றும் தனியார் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. அனைத்து போக்குவரத்தும் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.

News August 1, 2024

மீனவர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிவாரணம்

image

ராமேஸ்வரத்திலிருந்து நேற்று கார்த்திகேயன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் 4 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அப்போது இலங்கை ரோந்து கப்பல் மோதியதில் மலைச்சாமி என்பவர் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த மலைச்சாமியின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ரூ. 10 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.

News August 1, 2024

மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டம் நயினார் கோவில் ஊரகப் பகுதிகளில் இன்று மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இதில் வாணியவல்லம், நயினார் கோவில், தாளையடி கோட்டை, ராதாபுலி, கீழக்காவனூர் உள்ளிட்ட 5 ஊராட்சிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. இதில் 14 துறையை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடமிருந்து மனுக்களைப் பெற்று அதற்கான தீர்வு கண்டனர்.

News August 1, 2024

இலங்கை கப்பல் மோதி மீனவர் உயிரிழப்பு!

image

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 400 மீனவர்கள் விசைப்படகில் மீன் பிடிக்க சென்றிருந்தனர். அப்போது நெடுந்தீவு அருகே மீன் பிடித்து கொண்டிருந்தபோது இலங்கை கடற்படை கப்பல் மோதியதில் படகு கவிழ்ந்து மீனவர்கள் சிலர் மாயமாகினர். இந்நிலையில், அதில் மீனவர் மலைசாமி உயிரிழந்துள்ளார். சக மீனவர்களான மூக்கையா, முத்து, முனியாண்டி, ராமச்சந்திரன் ஆகியோர் மீட்கப்பட்டுள்ளனர்.

News August 1, 2024

மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

image

ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றனர். அப்போது கச்சத்தீவு அருகே மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து பணியின் இருந்த இலங்கை கடற்படை கப்பல் மோதியுள்ளது. இதில் படகு மூழ்கியதில் 4 மீனவர்கள் மாயமாகினர். அவர்களை சக மீனவர்கள் தேடி வருகின்றனர்.

News August 1, 2024

நம்ம ராம்நாட்டிற்கு ‘முகவை’ என்ற பெயரும் உண்டு!

image

1910 ஆம் ஆண்டு மதுரை மாவட்டத்தில் இருந்து ராமநாதபுரம் உருவாக்கப்பட்டது. ராமநாதபுரத்தின் முதல் கலெக்டராக இருந்தவர் ஜே.எப்.ப்ரைண்ட். பிரித்தானியர்கள் காலத்தில் இம்மாவட்டம் ‘ராம்நாடு’ என அழைக்கப்பட்டது. பின்னர் தமிழ் பெயராகிய ‘ராமநாதபுரம்’ என்றானது. ராம்நாட்டிற்கு ‘முகவை’ என்ற பெயரும் உண்டு. வைகையின் முகம் என்பது இதன் பொருள். ‘ராம்நாடு’ ‘ராமநாதபுரம்’ ‘முகவை’ இதில் உங்களுக்கு பிடித்த பெயர் எது?

error: Content is protected !!