Ramanathapuram

News August 7, 2024

இராமநாதபுரம் புதிய டிஐஜி பதவி ஏற்பு

image

ராமநாதபுரம் மாவட்ட சரக காவல்துறை துணைத் தலைவராக பணியாற்றி வந்த துரை ஐபிஎஸ் கடந்த வாரம் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து புதிய டிஐஜியாக டாக்டர் அபிநவ் குமார் ஐபிஎஸ் இன்று (ஆக.07) பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

News August 7, 2024

ராம்நாடு கடற்கரை பகுதியில் எச்சரிக்கை

image

தென் தமிழக கடல் பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் ராம்நாடு மாவட்ட மீனவர்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News August 7, 2024

விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் அறிவிப்பு

image

இராமநாதபுரம் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகிற 9ம் தேதி காலை 10.30 மணி அளவில் இராமநாதபுரம் ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தப்பட்ட குறைகள் மற்றும் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என ஆட்சியர் சிம்ரன்ஜித் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.

News August 7, 2024

ராமநாதபுரத்தில் தலைமை மருத்துவர் பணியிடமாற்றம்

image

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நேற்று காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மாவட்ட தலைமை மருத்துவமனையில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் இருந்ததால் கோபமடைந்த அமைச்சர் ஜெயலலிதா தான் உங்கள் முதலமைச்சரா என கேள்வி எழுப்பி, தலைமை மருத்துவர் முத்தரசனை பணியிடமாற்றத்துக்கு உத்தரவிட்டார்.

News August 7, 2024

வெளியுறவு அமைச்சரை சந்தித்த மீனவ பிரதிநிதிகள்

image

‌ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் மீனவ பிரதிநிதிகள் இன்று வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து தமிழக மீனவர்கள் பாதிக்கப்படுவதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க கோரியும் இலங்கை கடற்படையின் தொடர் கைது நடவடிக்கையை தடுக்க கோரியும் தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தலைமையில் தமிழக எம்பிக்கள் கனிமொழி ஆ.ராசா, நவாஸ்கனி ஆகியோர் சந்தித்து இன்று கோரிக்கை விடுத்தனர்.

News August 7, 2024

மீனவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் வழங்க முதல்வர் உத்தரவு

image

இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் மாயமான மீனவர் ராமசந்திரன் உடலை 6 நாட்கள் ஆகியும் கண்டுபிடிக்க முடியவில்லை. எனவே குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு அவரது குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

News August 6, 2024

ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேர் விடுதலை

image

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி, ராமேஸ்வரம் மீனவர்கள் 15 பேர் கடந்த ஜூன் 23ம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், ராமேஸ்வரம் மீனவர்கள் 13 பேரை இலங்கை நீதிமன்றம் நிபந்தனையுடன் விடுதலை செய்துள்ளது. மேலும், படகு ஓட்டுநர்களுக்கு தலா ரூ.40 லட்சம் அபராதமும் அதனை கட்டத் தவறினால் தலா ஓராண்டு சிறை தண்டனையும் விதிக்கப்படும் எனத் எச்சரிக்கை விடுத்துள்ளது.

News August 6, 2024

வக்பு சட்ட முடிவை பரிசீலனை செய்ய வேண்டும் – நவாஸ்கனி

image

டெல்லியில் நேற்று ராமநாதபுரம் தொகுதி எம்.பி நவாஸ்கனி செய்தியாளர்களை சந்தித்தார். வக்பு சொத்துக்கள் தொடர்பாக சட்டத்தில் 40 திருத்தங்களை கொண்டு வர மத்திய மந்திரி சபையில் ஒப்புதல் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. இதனால் பாஜக ஆட்சிக்கு பேராபத்து உருவாகும். இந்தியா கூட்டணி கட்சி, பிற கட்சிகள் ஆதரவோடு அதனை நாங்கள் தோற்கடிப்போம். இந்த முடிவை பாஜக பரிசீலனை செய்ய வேண்டும் என்றார்.

News August 6, 2024

ராமநாத சாமி கோவில் தேரோட்டம்

image

ராமேஸ்வரத்தில் உலக புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலில் ஆடி திருக்கல்யாணம் ஜூலை.29 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழாவில் தினமும் காலை, மாலை அம்பாள் வீதி உலா நடைபெற்று வருகிறது. 6 ஆம் நாள் திருவிழாவான இன்று(ஆக.6) காலை 9 மணிக்கு அம்பாள் தேரோட்டம் நடைபெற உள்ளது. முக்கிய நிகழ்ச்சியான ஆக.8 அம்பாள் மாலை மாற்று நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

News August 6, 2024

மீனவர் குடும்பத்தினருடன் கட்சித் தலைவர்கள் சந்திப்பு

image

ராமேஸ்வரத்திலிருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர்களின் படகு மீது இலங்கை கடற்படையின் ரோந்து கப்பல் மோதியதில் உயிரிழந்த மீனவர் மலைச்சாமி‌ குடும்பத்தினரை, தமிழக மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் செரிப், விடுதலை தமிழ் புலிகள் தலைவர் குடந்தை அரசன், மே 17 சார்பில் திருமுருகன் காந்தி, தேவேந்திரகுல மக்கள் முன்னேற்ற தலைவர் பாண்டியன், தேசிய மீனவர் கட்சியின் சார்பில் சின்னதம்பி ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர்.

error: Content is protected !!