India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரத்தைச் சேர்ந்த நலிவடைந்த பெண்கள், கணவனால் கைவிடப்பட்டோர், விதவைகள், ஏழ்மை நிலையில் உள்ள பெண்களுக்கு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் ஒரு பயனாளிக்கு 40 கோழிக்குஞ்சுகள் வீதம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் பயனாளிகள் அருகிலுள்ள கால்நடை மருந்தகத்தில் விண்ணப்பங்களை பெற்று பயனடையலாம் என இராமநாதபுரம் என ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் கலோன் தெரிவித்துள்ளார்.
உலக வனவிலங்குகள் வாரத்தை முன்னிட்டு இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை ராமநாதபுரத்தில் உள்ள வைல்ட் லைப் ரேஞ்ச் அலுவலகத்தில் 6 முதல் 12 வயது வரை மன்னார் வளைகுடாவில் உள்ள வன விலங்கினங்கள் பற்றிய தலைப்பிலும் 13 முதல் 18 வயது வரை உள்ளோருக்கு மன்னர் வளைகுடாவில் உள்ள அரிய வகை உயிரினங்கள் பற்றிய தலைப்பிலும் ஓவியப்போட்டி நடைபெற உள்ளது. பேச்சுப் போட்டி தலைப்பு சகவாழ்வு மூலம் வன விலங்குகளை பாதுகாப்போம்.
தமிழ்நாடு அரசின் துணை முதல்வராக பொறுப்பேற்று இருக்கும் திமுக இளைஞர் அணி செயலாளர் தமிழக அரசின் விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்தை சார்ந்த மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் இன்பா ரகு பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.
ராமநாதபுரத்தில் அக்டோபர் 13 ஞாயிற்றுக்கிழமை அன்று மாபெரும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. 12 வயதுக்கு உட்பட்டோருக்கு 2km, 18வயதுக்கு உட்பட்டோருக்கு 5km மீட்டரும், பொதுப் பிரிவினருக்கு 10km போட்டி நடைபெறும். இதில் வெற்றி பெறுபவருக்கு மிதிவண்டியும், ரொக்கமும் வழங்கப்படுகிறது. இதற்கு 99946-14800 என்ற எண்ணை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
நடிகை கவுதமியிடம் உதவியாளராக இருந்த பைனான்சியர் அழகப்பன், கவுதமிக்கு முதுகுளத்தூரில் நிலம் வாங்கி தருவதாக கூறி ரூ.3.16 கோடி வாங்கி ஏமாற்றியுள்ளார். இது குறித்த கவுதமி புகாரின்பேரில் ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு போலீசார் அழகப்பனை கைது செய்தனர். தொடர்ந்து, இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்ததாக அழகப்பனின் மேலாளரான மதுரையை சேர்ந்த ரமேஷ் சங்கர்(55) என்பவரை சென்னையில் போலீசார் கைது செய்துள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயிலில் நவராத்திரி விழாவையொட்டி ஸ்ரீ சக்கரம் சுவாமிக்கு அபிஷேகம், பூஜை நடந்தது. கோயிலில் நவராத்திரி விழா அக்.2-ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்பு கட்டி தொடங்கியது. 2ம் நாள் விழாவான நேற்று(அக்.,4) அம்மன் சன்னதி அருகில் ஸ்ரீ சக்கரம் சுவாமிக்கு 11 வகை அபிஷேகம் நடந்தது. நேற்று இரவு நிறைநிலை திருமகள் மகாலட்சுமி அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
வயது மூப்பு & இயலாமை காரணமாக முதியவர்களுக்கு மருத்துவம் பராமரிப்பு தேவைப்படுவதால் ராமநாதபுரம் அரசு மருத்துவக் கல்லூரியில் முதியோர் பராமரிப்பு உதவியாளர் சேவை சான்றிதழ் படிப்பு தொடங்கப்படவுள்ளது. இதற்கு 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும். ராமநாதபுரத்தை சேர்ந்தவராக இருக்க வேண்டும். 3 மாத இலவச படிப்பு. இதன் விண்ணப்பத்தை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரிக்கு நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம். SHARE IT.
ராநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் நேற்று (அக்.4) ஒருவர் மேலே ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த நபரை தீயனைப்பு மற்றும் மீட்பு துறையினர் மீட்டு சாயல்குடி காவல்துறையினர் வசம் ஒப்படைத்தனர். தற்கொலை முயற்சிக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மதுரை ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (அக்.4) மது போதையில் வந்த ஒரு நபர் திடீரென சாலையில் படுத்து உறங்கி அட்டகாசம் செய்தார். இதனால் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து இடையூறு ஏற்பட்டது. பின்னர் நகர் காவல் துறையினர் மது போதையில் இருந்த நபரை குண்டு கட்டாக தூக்கி எச்சரித்து அனுப்பினர். இச்சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 117வது பிறந்த நாள் விழா மற்றும் 62வது குருபூஜை விழாவையொட்டி மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் இன்று (அக்.4) நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், மாவட்ட வருவாய் அலுவலர் கோவிந்தராஜுலு, சார் ஆட்சியர் அபிலஷா கவுர் உடன் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.