India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று பெய்த மழை அளவு ராமநாதபுரத்தில் 11 மி.மீ., மண்டபம் 12.20 மி.மீ., ராமேஸ்வரம் 45 மிமீ,பாம்பன் 8.30 மிமீ, தங்கச்சிமடம் 11.40மிமீ, திருவாடானை 33.80 மி.மீ., தொண்டி50 மி.மீ., ஆர்.எஸ்.மங்கலம் 16 மி.மீ., முதுகுளத்தூர் 4.20 மி.மீ., வாலிநோக்கம் 4 மி.மீ., கமுதி 7.60 மி.மீ. அளவில் மழை பதிவாகியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் சராசரியாக 19.52 மி.மீ., அளவில் மழை பதிவாகியுள்ளது.
தமிழகத்தில் இன்று 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இராமநாதபுரம் மாவட்டத்தில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது. உங்கள் பகுதியில் மழை பெய்தால் உடனே பகிரவும்.
இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை உமாதேவி DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு வரும் அக்.,15 அன்று அவரது நினைவிடத்தில் காலை 5:30 மணி அளவில் மாரத்தான் போட்டி நடக்கவிருக்கிறது. பள்ளி குழந்தைகளுக்கு 5 கிலோமீட்டர், பெண்களுக்கு 10 கிலோமீட்டர், ஆண்களுக்கு 21 கிலோமீட்டரும் போட்டி நடக்கவிருக்கிறது.
கேரள மாநிலம் கோட்டயத்தில் கேரளா மாநில விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒருங்கிணைப்பில் நடைபெறும் தலித் – ஆதிவாசி கூட்டமைப்பின் மாநாட்டில் கலந்து கொள்ள தொல் திருமாவளவன் சென்றார். அப்போது, ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை விடுதலை சிறுத்தை கட்சியின் நகர் செயலாளர் ஹிதாயத்துல்லா சந்தித்து பொன்னாடை போர்த்தி வாழ்த்து பெற்றார்.
ராம்நாடு எம்பி நவாஸ்கனி உயர்கல்வி பயிலும் 700க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் விழா வருகிற (அக்.19) கேணிக்கரை யாஃபா மஹாலில் நடைபெற இருக்கிறது. இதில் சிறப்பு அழைப்பாளராக மதுரை எம்.பி வெங்கடேசன் தென்சென்னை எம்.பி தமிழச்சி தங்கபாண்டியன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொகிதீன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டு கல்வி உதவித்தொகை வழங்குகின்றனர்.
இன்று இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை திரு. சபரிநாதன் DSP தலைமையில் காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல் துறை தெரிவித்துள்ளது.
இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் முன்னாள் எம்எல்ஏ மலேசியா பாண்டியன் கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது அதிமுகவில் இணைந்தார். அவருக்கு அதிமுகவில் அதிமுக எம்ஜிஆர் மன்ற இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர் இன்று (அக்-12) அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி யை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக்.12) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவல்துறை அதிகாரிகளின் பெயர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் உள்ள அட்டவணை இராமநாதபுரம் காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ளது. காவல்துறை உதவி தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று (அக்.12) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் தென் மாவட்டங்கள் உட்பட பல்வேறு மாவட்டங்களில் 6 நாட்களுக்கு கனமழை பெய்யும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது. மழையால் சில இடங்களில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. வெளியில் செல்வோர் முன் பாதுகாப்புடன் செல்வது நல்லது. SHARE IT.
Sorry, no posts matched your criteria.