India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ராமநாதபுரம் மக்களே, இந்த மழைக்காலத்தில் வீட்டில் கரண்ட் இல்லையா? வோல்டேஜ் பிரச்சனையா? EB ஆபிஸ் எங்கு இருக்கிறது என்று தேடி அலைய வேண்டியதில்லை. வீட்டில் இருந்தே WHATSAPP மூலம் 94458 50811, 94431 11912 இந்த நம்பரில் புகைப்படத்துடன் உங்கள் புகாரை பதிவு செய்யலாம். மேலும், கால் செய்து புகார் அளிக்க, 94987 94987 இந்த நம்பரை தொடர்பு கொள்ளலாம். அதிக பயனுள்ள இந்த தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணி உதவுங்க.
ராமநாதபுரம் மாவட்டத்தில், தமிழக முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ், திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் யூனியன்களில் உள்ள ஊரக ஏழை கால்நடை விவசாயிகளின் சினையுற்ற கறவை பசுக்களுக்கு 50% மானியத்தில் ஊட்டச்சத்து தீவனம் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தை பயன்படுத்தி பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் விவசாயிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
ராமநாதபுரம், உங்களுடைய 10th, 12th , Diploma Certificate, தொலைந்தாலோ, கிழிந்தாலோ, இனி கவலை வேண்டாம். சான்றிதழ் எளிதாக பெற தமிழக அரசு ஒரு திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது இ-பெட்டகம் என்ற <
பாம்பன் சாலை பாலத்தில் நேற்று (ஆகஸ்ட் 10) இரவு காரும் இருச்சக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இன்று (ஆகஸ்ட் 10) இரவு 11.00 மணி முதல் நாளை காலை 6.00 மணி வரை காவல் அதிகாரிகள் ராமநாதபுரம், பரமக்குடி, கமுதி, ராமேஸ்வரம், கீழக்கரை, திருவாடானை மற்றும் முதுகுளத்தூர் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுகின்றனர். அதற்கான அட்டவணை வெளியிடப் பட்டுள்ளது. அவசர உதவிக்கு அட்டவணையில் உள்ள எண்ணை அழைக்கவும் என காவல்துறை தனது X வலைத்தள பக்கத்தில் அறிவித்துள்ளது.
பாம்பன், தங்கச்சிமடம் பகுதிகளை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படை கள் சிறை பிடிக்கப்பட்ட இலங்கை சிறையில் உள்ளனர். அவர்களின் குடும்பத்தினரை இன்று (ஆகஸ்ட் 10) ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம் சந்தித்தார். அப்போது, முதல்வரிடம் கொண்டு சென்று, விடுதலை செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.
இந்த சுய வேலைவாய்ப்பு பயிற்சியானது தமிழ்நாடு டாக்டர் ஜே. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மூலம் வழங்கப்படுகிறது. 7 நாட்கள் பயிற்சி வகுப்பு. கல்வி தகுதி: 8ஆம் வகுப்பு. ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரை சார்ந்த சுற்றுலா மேம்படுத்தப்பட்டு வரும் சூழலில், இந்த பயிற்சி உதவியாக அமையும். இதன்மூலம், படகு ஓட்டுநர் உரிமத்திற்கு தகுதி பெறலாம். மேலும் விவரங்களுக்கு <
தொடர்ச்சியாக இலங்கை கடற்படையால் ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்யப்படுவதை கண்டித்து நாளை முதல் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக ராமேஸ்வரத்தில் நடைபெற்ற விசைப்படகு மீனவர் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், எதிர்வரும் 13 ஆம் தேதி அன்று தங்கச்சி மடத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் எனவும் 19ஆம் தேதி அன்று ரயில் மறியல் நடைபெறும் என்றும் அறிவிப்பு செய்துள்ளனர்.
ராமநாதபுரம் மக்களே.. இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் (IOB) காலியாக உள்ள 750 அப்ரண்டிஸ் (Apprentices) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு எதாவது ஒரு பட்டப்படிப்பு பெற்றிருக்க வேண்டும். சம்பளம் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது. விண்ணப்பதாரர்கள் இன்று (ஆக.10) முதல் விண்ணப்பிக்கலாம். இந்த லிங்கை <
ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடற்கரை காவல் நிலைய சார்பு ஆய்வாளர் தாரிக் அமீன் தலைமையில் காவலர்கள் சரவணன், முத்துக்குமார் ஆகியோர் வேதாளை கடற்பகுதியில் வாகன தணிக்கை நடத்தினர். அப்போது, சரக்கு வாகனத்தில் இலங்கைக்கு கடத்தப்படவிருந்த 1,000 கிலோ சுக்கு மூடைகள் கண்டுபிடிக்கப்பட்டன. வாகனமும், சுக்கும் பறிமுதல் செய்யப்பட்டு நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டன. தப்பியோடியவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
Sorry, no posts matched your criteria.