India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை கருவேப்பிலான் ரயில்வே கேட் அருகே போலீசார் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் சென்னை தண்டையார்பேட்டையில் இருந்து வந்த தனியார் ஆம்னி பேருந்தில் சோதனை செய்ததில் ரூ 20 லட்சம் ஹவாலா பணம் கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து காவல் ஆய்வாளர் வழக்கு பதிவு செய்து அமீர் உசேன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விராலிமலை, வேளாண்மை துறையில் டிஜிட்டல் சர்வே பணிக்கு ஆட்சேர்ப்பு நடைபெற உள்ளதாக வேளாண் உதவி இயக்குநர் மணிகண்டன் அழைப்பு விடுத்துள்ளார். இதில் ஸ்மார்ட் போன் மற்றும் இருசக்கர வாகனம் கொண்ட ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மேலும் விவரங்களுக்கு விராலிமலை, நீர்பழனி வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தை (9944018168, 9442100380) தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் சூழலில், நாம் பலரும் பேக்கரி மற்றும் உணவகங்களில் இனிப்பு உணவு வகைகளை வாங்குவது வழக்கம். இந்நிலையில் அப்படி வாங்கப்படும் பொருட்கள் தரமில்லாமல் இருந்தால் என்ன செய்வதென்று பலருக்கும் தெரியாது. இதுபோன்ற சூழல் உங்களுக்கு ஏற்பட்டால் ‘94440 42322’ என்ற வாட்ஸ்அப் எண்ணின் வாயிலாக தமிழக உணவுப் பாதுகாப்பு துறையிடம் உங்களால் வீட்டிலிருந்தே புகார் அளிக்க முடியும். ஷேர் பண்ணுங்க!

திருமயம் அருகே வெங்களூரிலிருந்து அம்மாபட்டிக்கு கலியபெருமாள்(75), ரோகினி (18) ஆகிய இருவரும் பைக்கில் சென்றுள்ளனர். அப்போது அம்மாபட்டி அரசு கலைக்கல்லூரி அருகே உள்ள சாலையில் அவருக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த ரகு (55) மோதியதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. இதில் ரோகினி படுகாயமடைந்து மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்

அகரப்பட்டியை சேர்ந்தவர் சசிகலா, இவர் இன்று வேலையின் காரணமாக மோட்டார் சைக்கிளில் மேட்டுதெரு முக்கம் அருகே சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் சசிகலாவின் கழுத்தில் இருந்த 3 பவுன் தங்க செயினை அறுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்ட நிலையில் செயினை பறித்த திருக்கோகர்ணம் கோவில்பட்டியை சேர்ந்த விக்னேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று(அக்.13) இரவு 10 மணி முதல் இன்று(அக்.14) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனைமற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவல்கத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அருணா தலைமையில் இன்று(அக்.13) நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் திருமால் மற்றும் பல்துறை அரசு அலுவலர்கள் பங்கேற்று பொதுமக்களின் மனுக்களை பெற்றுக் கொண்டனர். இதில், முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு பெயர் மாற்றம், பட்டா மாற்றம், கடன் உதவி உள்ளிட்ட மனுக்கள் பெற்று, அதற்கான தீர்வுகான அலுவர்களுக்கு உத்திரவுட்டார்.

புதுகை மக்களே, 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். <

திருமயம் அருகே துளையானூர் தேசிய நெடுஞ்சாலை பகுதியில் இன்று இருசக்கர வாகனத்தில் சென்ற நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் படுகாயமடைந்தார். திருமயம் மருத்துவமனையில் முதலுதவி அளித்த பின் ஆபத்தான நிலையில் இருக்கும் அவரை புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று காலை 6 மணி முதல் இன்று (அக்.,14) காலை 6 மணி வரை பெய்த மழையின் அளவை மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ளத். அதன்படி, மழையூர் பகுதியில் 1.20 மி.மீ., கீழாநிலை 7.20 மி.மீ, திருமயம் 6.20 மி.மீ, அறந்தாங்கி 18.40 மி.மீ, ஆயங்குடி 82.40 மி.மீ, நாகுடி 18 மி.மீ, மணமேல்குடி 15.60 மி.மீ பதிவாகியுள்ளது. இந்த மழையால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.