Pudukkottai

News August 12, 2025

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை

image

புதுக்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு இன்று (ஆக., 12) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதுக்கோட்டை, சிவகங்கை, விழுப்புரம், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தர்மபுரி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதனால், பொதுமக்கள் முன்னெச்சரிக்கையோடு இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

News August 12, 2025

32 பதக்கங்களை வென்று புதுகை மாணவர்கள் சாதனை

image

புதுக்கோட்டை சிவபுரத்தில் நேற்று பள்ளி கல்வித்துறை நடத்திய ஆண்கள் பிரிவிலான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது. இந்த குத்துச்சண்டை போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்கள் 10 தங்க பதக்கங்கள், 10 வெள்ளி பதக்கங்கள், 12 வெண்கல பதக்கங்கள் என மொத்தம் 32 பதக்கங்களை வென்று புதுக்கோட்டை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார்கள். மேலும் தங்கப்பதக்கம் பெற்ற 10 பேர் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்.

News August 12, 2025

புதுக்கோட்டை: B.E முடித்தவர்களுக்கு வேலை!

image

பொதுத்துறை நிறுவனமான ‘தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ்’ காப்பீடு நிறுவனத்தில் பல்வேறு துறைகளின் கீழ் காலியாக உள்ள இன்ஜினீயர்கள், ஐ.டி நிபுணர்கள் உள்ளிட்ட 550 பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E / B.Tech மற்றும் ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் <>இங்கே க்ளிக்<<>> செய்து வரும் ஆக.30-க்குள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.50,925 முதல் ரூ.96,765 வரை வழங்கப்படும். இதனை மறக்காம ஷேர் பண்ணுங்க!

News August 12, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

புதுக்கோட்டையில் பல்வேறு துணை மின் நிலையங்களில் இன்று (ஆக.,12) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. அதன்படி, மாத்தூர், புதுப்பட்டி, செங்களாக்குடி, குளவாய்ப்பட்டி, திருமலை சமுத்திரம், நமணசமுத்திரம், திருவரங்குளம், லேணாவிளக்கு, இலுப்பூர், வீரப்பட்டி , மலைக்குடிபட்டி, கொடும்பாளூர், பாக்குடி, ராப்பூசல் மற்றும் புதுக்கோட்டை நகர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை SHARE பண்ணுங்க.

News August 12, 2025

புதுக்கோட்டை இரவு ரோந்து பணி போலீசார் விபரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (ஆகஸ்ட் 11) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்களை மாவட்ட காவல் துறை  மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. தேவையுள்ளவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்ணை தொடர்ப்பு கொண்டு புகார்களை தெரிவிக்கலாம். அல்லது 100ஐ அழைக்கலாம். மற்றவர்களுக்கும் இதனை ஷேர் செய்யுங்கள்!

News August 11, 2025

புதுகை அரசு ஐடிஐகளில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

image

புதுகை அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் (31.08.2025) வரை மாணவர்கள் சேரலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் 2025-2026 ஆம் ஆண்டுக்கான நேரடி சேர்க்கைக்கு www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கவும். தற்போது நேரடி சேர்க்கையானது வருகின்ற 31.08.2025 வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

News August 11, 2025

புதுகை: ரேஷன் கார்டு ONLINEல் விண்ணப்பிப்பது எப்படி?

image

✅இங்கு <>க்ளிக் <<>>செய்து ரேஷன் கார்டு படிவத்தை DOWNLOAD பண்ணுங்கள்.
✅படிவத்தில் பெயர், விவரங்கள் நிரப்புங்கள்.
✅ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை, வீட்டு வரி ரசீது ஸ்கேன் செய்து இணையுங்கள்.
✅பூர்த்தி செய்யபட்ட படிவம், ஆவணங்களை இணையுங்கள்.
✅விண்ணப்ப நிலையை சரி பாருங்க.. 60 நாட்களில் ரேஷன் கார்டு உங்க கையில…
இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 11, 2025

புதுகை: TNPSC Group 2 & 2A பிரிவில் வேலை! Don’t miss

image

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2 மற்றும் 2A பிரிவில் காலியாக உள்ள 645 பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. உதவியாளர், வனவர், கீழ்நிலைப் பிரிவு எழுத்தர் உள்ளிட்ட பணிகளுக்கு 13.08.2025 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கல்வித்தகுதி டிகிரி முடித்திருக்க வேண்டும். மாத சம்பளம் ரூ.22,800 முதல் ரூ.1,19,500 வரை வழங்கப்படும். விரும்பமுள்ளவர்கள் <>இங்கே கிளிக் <<>>செய்து விண்ணப்பிக்கலாம். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News August 11, 2025

புதுக்கோட்டை: குண்டர் சட்டத்தில் 3 பேர் கைது

image

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் காவல் நிலைய சரக கொலை முயற்சி வழக்கில் கைதான நகர்ப்புற வாழ்வியல் மேம்பாட்டு குடியிருப்பில் வசிக்கும் பதிவேடு குற்றவாளிகள் பூபதி (30), மணி (எ) பாட்டில் மணி (27), கார்த்திகேயன் (21) ஆகியோர் மீது எஸ்.பி பரிந்துரையில் பேரில் கலெக்டர் அருணா உத்தரவிட்டதைத் தொடர்ந்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

News August 11, 2025

புதுக்கோட்டை: BHEL நிறுவனத்தில் வேலை.. கடைசி வாய்ப்பு

image

BHEL நிறுவனத்தில் காலியாக உள்ள ‘515’ கைத்திறத் தொழிலாளர் (Artisans) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி திருச்சி பெல் நிறுவனத்தில் காலியாக உள்ள 75 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணியிடங்களுக்கு 10th மற்றும் ITI/NAC முடித்த, விருப்பம் இங்கே<> க்ளிக் செய்து<<>> விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க நாளை (ஆக.,12) கடைசி தேதியாகும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க…

error: Content is protected !!