India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மக்களே உங்க கேஸ் எண் ஒரு சில நேரத்தில் உபோயகத்தில் இல்லை (அ) ஒரே நேரத்தில் சிலிண்டர்கள் புக் செய்வதால் வர தாமதமாகுதா? இனி அந்த கவலை இல்லை (Indane: 7588888824, Bharat Gas: 1800224344, HP Gas: 9222201122) இந்த எண்ணில் வாட்ஸ்அப்பில் “HI” என ஒரே ஒரு மெசேஜ் அனுப்புங்க. REFILL GAS BOOKING OPTION -ஐ தேர்ந்தெடுங்க அவ்வளவுதான் உங்க வீட்டுக்கே உடனே கேஸ் வந்துடும். இதை SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டம் கரம்பக்குடி அடுத்த கருக்காக்குறிச்சி பிள்ளையார் கோவில் அருகே, வீரபத்திரன் (33) என்பவர் மாட்டு வண்டியில் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து கருக்கா குறிச்சி சரக விஏஓ ரமேஷ் குமார் அளித்த புகாரின் பேரில் வடகாடு காவல் துறையினர் அவர் மீது வழக்கு பதிந்து மேலும் அவரிடமிருந்து 1/4 யூனிட் மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விராலிமலை பகுதியில் நடைபெறும் குற்ற சம்பவங்களை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேகுப்தா அறிவுறுத்தலின் பேரில் செக்போஸ்ட், காமராஜர் நகர் 2 இடங்களில் திறக்கப்பட்டுள்ளது. இதில் ஷிப்ட் அடிப்படையில் 4 காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இவர்கள் அப்பகுதியில் கூடும் கூட்டங்களை கண்காணித்து சட்ட விரோத செயல்களில் யாரும் ஈடுபடுகிறார்களா என்று கண்காணிப்பார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த கொத்தமங்கலத்தை சேர்ந்தவர் சிவகுமார் (35). இவர் நேற்று அறந்தாங்கி அருகே உள்ள செட்டிக்காடு பகுதியில் டிராக்டர் மூலம் மணல் கடத்தலில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த அறந்தாங்கி போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு மேலும் அவரிடம் இருந்து ஒரு யூனிட் மணலுடன் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
5. வயது வரம்பு: 18-35(SC/ST-40, OBC-38)
6.ஆரம்ப தேதி: 21.10.2025
7.கடைசி தேதி: 20.11.2025
8. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <

மீமிசல் அடுத்துள்ள கடற்கரை பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்து அப்பகுதி பொதுமக்கள் மீமிசல் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆண் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரித்து வருகின்றனர்.

புதுக்கோட்டை, தட்டாம்பட்டியில் இருந்து கீரனூருக்கு பழனிவேல்(57), கார்த்திகா (21), லக்ஷ்சனா ஸ்ரீ (3), இவர்களது 3 மாத குழந்தை பிரகதீஷ் 4 பேரும் சென்றுள்ளனர். அப்போது இளையாவயல் பேருந்து நிறுத்தம் அருகே அவர்களுக்கு பின்னால் காரில் வந்த சுப்பிரமணியன் (58) மோதியதில் 3 மாத ஆண் குழந்தை பிரகதீஸ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்த புகாரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை காலங்களில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்த தகவல்களை 24 மணி நேரமும் செயல்படக்கூடிய மாவட்ட அவசர கட்டுப்பாட்டு அறை எண்:1077 மற்றும் அவசர கால உதவி எண்:04322-222207 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தகவல் தெரிவித்துள்ளார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.15 இரவு 10 மணி முதல் இன்று (அக்.16) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனைமற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுகா, கருகாக்குறிச்சி கீழத்தெரு குரும்பிவயல் கிராமத்தில் அக்னி ஆற்றில் தொடர் மணல் திருட்டு தொடர்பாக வரப்பெற்ற புகாரின் அடிப்படையில், வட்டாட்சியர் ஜமுனா நேற்று இரவு நேர திடீர் தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது ஆற்று மணலை திருட்டு தனமாக மாட்டு வண்டியில் அள்ளிக் கொண்டிருந்த நபர் தப்பி ஓடிவிட்டார். மணலுடன் மாட்டு வண்டி வடகாடு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.
Sorry, no posts matched your criteria.