India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் உழவன் செயலியை பயன்படுத்தி மானிய திட்டங்களில் வேளாண் இடுபொருட்கள் ஆகியவற்றை பெறுவதற்கு முன்பதிவு செய்யுமாறும், அனைத்து விவசாயிகளும் உழவன் செயலியை பயன்படுத்துமாறும் மாவட்ட ஆட்சியர் அருணா கேட்டுக்கொண்டார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தொழில் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் PM YASASVI என்ற திட்டத்தின் கீழ் மேல் படிப்பிற்காக கல்வி உதவித் தொகை பெற https://umis.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். உங்களுக்குத் தெரிந்த மாணவர்களுக்கு SHARE பண்ணுங்க..
புதுக்கோட்டை அருகே உள்ள நார்த்தாமலை ஸ்ரீமுத்து மாரியம்மன் கோயில் திருவிழா அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, (பங்குனி மாதம்) பூச்சொரிதல் – மார்ச்.23ஆம் தேதியும், காப்புக்கட்டுதல் – மார்ச்.30, பொங்கல் விழா- ஏப்.,06, திருத்தேர்- ஏப்.,07, தீர்த்தம்- ஏப்.,08ஆம் தேதியும் நடைபெற உள்ளன. இதில் கலந்துகொள்ள பக்தர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. முத்துமாரி அருள் பெற பக்தர்களுக்கு SHARE பண்ணுங்க…
புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று நடைபெற உள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இம்முகாமில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in பதிவு செய்யலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மற்றவர்கள் பயன்பெற SHARE பண்ணுங்க..
புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 21.03.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10.30 மணி அளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து விவசாய சங்க பிரதிநிதிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை மட்டும் கேட்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் இலுப்பூரில் இருந்து கீரனூர் சென்ற அரசு பேருந்து ஒன்று சற்று முன் விபத்துக்குள்ளானது. இதில் பஸ்ஸில் பயணம் 20க்கும் மேற்பட்டோர் காயம் என அடைந்துள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது. காயம் அடைந்தவர்களை மீட்பதற்காக இலுப்பூரில் இருந்து ஆம்புலன்ஸ்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. சம்பவ இடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் 3,274 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. புதுக்கோட்டையில் 110 ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் நாளை முதல் ஏப்.,21ஆம் தேதி வரை https://www.arasubus.tn.gov.in/ இணையத்தில் விண்ணப்பிக்கலாம். வேலை தேடும் உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க.
புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (மார்ச்.21) நடைபெற உள்ளது. இதில் 15க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கு தேவையான நபர்களை தேர்வு செய்ய உள்ளனர். இதில் கலந்து கொள்ள www.tnprivatejobs.tn.gov.in இணையதளத்தில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். வேலைதேடும் உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..
புதுக்கோட்டை அருகே முத்துடையான்பட்டி பகுதியில் திருச்சி ராமேஸ்வரம் நெடுஞ்சாலையில் தனியார் பள்ளி பேருந்து மீது அரசு பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 21 மாணவர்கள் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு அப்பகுதி மக்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள மாணவர்களை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.
* குடைவரைக் கோயில்கள் – சித்தன்னவாசல், குடிமியான் மலை, குன்றாண்டார்கோயில், மலையடிப்பட்டி, திருமயம், திருக்கோகர்ணம், நர்த்தமலை
* காளியப்பட்டி சிவன் கோயில் – விஜயநகர பாணியில் கட்டப்பட்ட இளஞ்சிவப்பு கிரானைட் கோயில்
*சைவ கிராமமான வாடிமனைப்பட்டி.
* நரிமேடு பகுதியில் பல வருடங்களாக அரிக்காமல் இருக்கும் அதிசய கல் மரம்.
நம்ம மாவட்டத்தில் அதிசியங்களை SHARE பண்ணுங்க. பெருமை கொள்வோம்.
Sorry, no posts matched your criteria.