Pudukkottai

News October 19, 2025

புதுக்கோட்டை: தேனி வளர்ப்பு பயிற்சிக்கு அழைப்பு

image

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் குடுமியான்மலையில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தில், 26 நாட்கள் 25 நபர்களுக்கு தேனீ வளர்ப்பு தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் பங்குபெற விரும்புபவர்கள் அக்.,22 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை கல்லூரியை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News October 19, 2025

புதுகை மக்களே இந்த எண்களை SAVE பண்ணுங்க!

image

பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க. மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News October 19, 2025

புதுகையில் சட்டவிரோத மது விற்பனை

image

புதுக்கோட்டையில் பல பகுதிகளில் நேற்று (அக்.19) புதுக்கோட்டை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். புதுகை அடுத்த சோலகம் பட்டியில் மாரியாயி (50), முத்துலட்சுமி (35) நாயக்கம்பட்டியில் சக்திவேல் (50), ரவி (60) தச்சங்குறிச்சியில் அண்ணாமலை (65) என்பவரும் சட்டவிரோத மது விற்பனை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 130 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.

News October 19, 2025

புதுகை: ஊராட்சி செயலர் வேலை அறிவிப்பு !

image

புதுகை மாவட்டத்தில் 83 ஊராட்சி செயலர் காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1.கல்வி தகுதி: குறைந்து 10-ம் வகுப்பு
2.சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400
3.தேர்வு முறை: நேர்காணல் மட்டும்; தேர்வு கிடையாது!
4.வயது வரம்பு: 18-32 (SC/ST-37, OBC-34)
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <>CLICK <<>>செய்க.
6. சொந்த ஊரில் அரசு வேலை எதிர்பார்க்கும் நபர்களுக்கு இதை ஷேர் பண்ணுங்க!

News October 19, 2025

புதுகை: சிறுமிக்கு பாலியல் தொல்லை!

image

புதுகையை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென வீட்டிலிருந்து மாயமானார். இதுகுறித்து அவரது பெற்றோர் அளித்த புகாரில் மாத்தூர் போலீசார் விசாரித்து வந்தனர். இந்நிலையில் மாணவி தஞ்சாவூரில் இருந்து தனது பெற்றோரை செல்போனில் தொடர்பு கொண்டு ஒரு வாலிபர் தன்னிடம் பாலியல் தொல்லையில் ஈடுபடுவதாக தெரிவித்தார். இதையடுத்து திருச்சியை சேர்ந்த கஜேந்திரன் (20) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

News October 19, 2025

புதுகை: பேருந்து சக்கரத்தில் சிக்கி பரிதாப பலி

image

புதுகையிலிருந்து பெருங்களூர் நோக்கி நேற்று மாலை அரசு டவுன் பஸ் ஒன்று சென்றது. அப்போது பஸ்சின் முன்பக்க சக்கரத்தில் அடையாளம் வாலிபர் ஒருவர் திடீரென விழுந்ததில் அவரது உடல் மீது பஸ் ஏறி இறங்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த கணேஷ்நகர் போலீசார் இறந்த வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

News October 19, 2025

புதுகை: குளத்தில் மூழ்கி பரிதாப பலி

image

அன்னவாசல் அருகே முதலிப்பட்டியை சேர்ந்தவர் சக்திவேல், கூலி தொழிலாளியான இவர் இன்று மாங்குடி குவாரியில் உள்ள குளத்தில் குளிக்க சென்றபோது எதிர் பாராத விதமாக தண்ணீரில் மூழ்கி பலியானார். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த சிப்காட் தீயணைப்புத் துறையினர் சக்திவேலின் உடலை மீட்டனர். தொடர்ந்து இதுகுறித்து அன்னவாசல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர

News October 19, 2025

புதுக்கோட்டை: இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.18) இரவு 10 மணி முதல் இன்று (அக்.19) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News October 18, 2025

புதுகை: ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கிய ஆட்சியர்

image

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் வட்டாரத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் நலம் காக்கும் ஸ்டாலின் உயர் மருத்துவ சேவை முகாம் இன்று நடைபெற்றது. அதனை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா இன்று (அக்.,18) துவக்கி வைத்து பார்வையிட்டு, கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.

News October 18, 2025

புதுகை: பட்டாவில் பெயர் மாற்ற புதிய வசதி!

image

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் <>eservices.tn.gov.in <<>>என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!

error: Content is protected !!