India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (26.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள மணவாளன் கரையில் நேற்று (ஏப்.25) ஜெயஅற்புதம் என்ற இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில் ஜெய அற்புதம் தாயார் மாரிக்கண்ணு கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கு துண்டியதாக வழக்கு பதிவு செய்து ஜெயா அற்புதம் மாமியார் வள்ளிக்கண்ணு மற்றும் அவரது கணவர் வீரமணி ஆகிய இருவரையும் திருமயம் காவல்துறையினர் கைது செய்தனர்.
இளநிலை உதவியாளர், விஏஓ உள்ளிட்ட பணியிடங்களுக்காக நடத்தப்படும் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. வரும் ஜூலை12 ஆம் தேதி தேர்வு நடைபெற உள்ளது. இதில் மொத்தம் 3935 பணியிடங்கள் நிரப்பப்படும் என TNPSC தெரிவித்துள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் மே 24 ஆம் தேதிக்குள் https://www.tnpsc.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கவும். அரசு வேலை தேடும் நண்பர்களுக்கு ஷேர் செய்யவும்
புதுகை மாவட்டம், பேரையூரில் உள்ள நாகநாதசாமி கோயிலில் நாகநாதசுவாமி, பிரகதாம்பாள் அருள்பாலிக்கின்றனர். 18 மாதத்திற்கு ஒருமுறை நடைபெறும் பெயர்ச்சியில் இன்று மாலை 4:20 மணிக்கு ராகு கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளனர். இத்தலத்தில் வழிபட்டால் ராகு, கேது தோஷம் நிவர்த்தி அடையும். இதை உறவினர், நண்பர்களுக்கு SHARE செய்யுங்கள்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஏப்.25) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது
பட்டா, சிட்டா ஆன்லைனில் பெற அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு செல்லுங்கள். பட்டா, சிட்டா நில அளவைப் பதிவேடு <
தமிழ்நாட்டில் உள்ள 1,299 எஸ்.ஐ காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பாணை வெளியாகியுள்ளது. அதன்படி தாலுகாவில் 933 பணியிடங்களும், ஆயுதப்படையில் 366 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளது. அதன்படி ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் முடித்தவர்கள் வரும் மே 3ஆம் தேதிக்குள் அதிகாரப்பூர்வ<
கீரனூர் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா (18), இவர் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் தாயாருடன் புதுக்கோட்டை சென்று விட்டு திரும்பியுள்ளார். பின்னர் அருகிலிருந்த ஸ்கூட்டரை தள்ளிக்கொண்டு ரோட்டை அவர் கடக்க முயன்றபொழுது அந்த வழியாக சென்ற வாகனம் அவர் மீது மோதியதில் பிரியங்கா படுகாயமடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியங்கா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடல் இருப்பதே சிலருக்கு தான் தெரியும். அந்த கடலில் கரையை ஒட்டி, சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் மீன் முள் வடிவில் அலையாத்தி காடுகள்,, அதிகளவிலான வெளிநாட்டு பறவைகள் மற்றும் பறவை இனங்கள் தங்குகின்றன மேலும் அலையத்தி காடுகளுக்கு நடுவில் படகு சவாரி செய்யவும் தமிழகஅரசு ஏற்ப்பாடு செய்யப்பட்டுள்ளது,நம்ம புதுக்கோட்டையில் உள்ள இந்த இடத்தை MISS பண்ணாதீங்க!
உங்களுக்கு அருகில் உள்ள அரசு இ-சேவை மையங்களில் பிறப்பு, இறப்பு, வாரிசு, வருவாய், இருப்பிடம், சாதி, முதல் பட்டதாரி, வருமானம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட சான்றிதழ்களை வெறும் 60 ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் மாவட்ட நிர்வாகத்திடம் மக்கள் புகார் அளிக்கலாம். இந்த தகவலை இப்போதே ஷேர் பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.