Pudukkottai

News March 25, 2025

முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் 

image

புதுகை மாவட்ட முன்னாள் படை வீரர்களுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நாளை (மார்ச்.26) காலை 10 மணிக்கு பழைய அரசு மருத்துவமனை வளாகத்தில் CEMONC கூட்ட அறையில் நடைபெற உள்ளது. இதில் புதுகை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படை வீரர்கள், விதவைகள், படை வீரர்களை சான்றோர், மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News March 25, 2025

புதுக்கோட்டை மாணவர்களுக்கு நற்செய்தி

image

TAHDCO சார்பில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பிற இனத்தைச் சார்ந்த மாணவர்களுக்கு அகில இந்திய நுழைவுத் (JEE Mains) தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது. உணவு, தங்குமிடம் மற்றும் 11 மாதங்கள் பயிற்சிக்கான செலவை CPCL ஏற்கும் . இப்பயிற்சிக்கு www.tahdco.com இணையத்தில் பதிவு செய்து பயிற்சியில் கலந்து கொள்ளலாம். 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு இந்த செய்தியை பகிரவும்.

News March 25, 2025

ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தற்கொலை முயற்சி

image

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையைச் சேர்ந்த பொற்செல்வி என்ற பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நேற்று மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். காதல் கணவன் கைவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்த நிலையில் பலமுறை காவல் நிலையத்தில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்பதால் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அவரை மீட்ட போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 24, 2025

கிராம சபைக்கூட்டம் தேதி மாற்றம்.

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உலக தண்ணீர் தினமான 22.03.2025-ஆம் தேதியன்று நடைபெற இருந்த கிராம சபைக்கூட்டம் நிர்வாகக் காரணங்களால் ஒத்தி வைக்கப்பட்டு 29.03.2025 அன்று காலை 11.00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபைக்கூட்டம் நடைபெற உள்ளது. மேற்கண்ட தகவலை மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார்.

News March 24, 2025

புதுக்கோட்டையில் வேலை வாய்ப்பு 

image

புதுகை சித்த மருத்துவமனை அலுவலகத்தில் உதவியாளர் டேட்டா அசிஸ்டன்ட் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்கு IT,B.Tech, BBA,BCA,BSC-IT ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் மார்ச்.31க்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்களை http://pudukkottai.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா தெரிவித்துள்ளார். உங்க நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 23, 2025

அன்னவாசல் ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசலில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவர் பலியானார். புதுக்கோட்டை ராஜ கோபாலபுரத்தை சேர்ந்த முத்து அடைக்கலம் என்பவர் எதிர்வாடியில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது மாடு முட்டியதில் பலத்த காயம் ஏற்பட்டு அன்னவாசல் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

News March 23, 2025

புதுக்கோட்டையில் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்

image

புதுக்கோட்டையில் சுற்றிப் பார்க்க வேண்டிய டாப் 10 இடங்கள்: ▶️சித்தன்னவாசல் (ஓவியங்கள்) ▶️கொடும்பாளூர்(ஐவர் கோயில்) ▶️காட்டு பவா பள்ளிவாசல் ▶️ஆவூர் தேவாலயம் ▶️ஆவுடையார்கோவில் ▶️திருமயம் கோட்டை ▶️மலையடிப்பட்டி (குகைகோயில்- ஓவியங்கள்) ▶️திருக்குன்றக்குடி ▶️ குடிமியான்மலை (குடவரை கோயில்) ▶️ நார்த்தாமலை (கற்கோயில்). உங்கள் நண்பர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 22, 2025

காவலர் முரளி ராஜா புதுகை எஸ்.பி.யிடம் மனு

image

வேங்கை வயல் வழக்கில் சிபிசிஐடி போலீசாரால் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவலர் முரளிராஜா கடந்த ஜனவரி 20ஆம் தேதி முதல் பணிக்கு வராத காரணத்தால் அவரை விட்டோடி என்று மாவட்ட காவல்துறை அறிவித்தது. இந்நிலையில் காவலர் முரளிராஜா புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளரை நேரில் சந்தித்து தனது விளக்கத்தினை அளித்ததோடு தன்னை மீண்டும் பணியில் சேர்த்து பணியாற்ற அனுமதிக்க வேண்டுமென்று மனு அளித்துள்ளார்.

News March 22, 2025

புதுகை: அனைத்துக் கட்சியினருடன் SP ஆட்சியர் ஆலோசனை

image

மாவட்டத்தில் பொதுமக்கள் அதிகமாக கூட கூடிய இடங்களில் பொதுக் கூட்டங்கள் நடத்துவது சம்பந்தமாக அனைத்து கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் ஆட்சியரகத்தில் நடந்தது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருணா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கலந்து கொண்டு ஆலோசனையில் ஈடுபட்டனர் இன்று மாலை ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்வில் அதிமுக, திமுக மற்றும் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

News March 22, 2025

புதுகை மாவட்டத்தில் நாளை கிராம சபை கூட்டம்

image

புதுகை மாவட்டத்தில் நாளை (மார்ச்.23) 489 கிராம ஊராட்சியிலும் கிராம சபை கூட்டம் நடைபெறும். இக்கூட்டத்தில் உலக தண்ணீர் தின கருப்பொருள்களை பற்றி விவாதித்தல், ஊராட்சி நிர்வாகம், பொது நிதி செலவீனம், ஊராட்சி தணிக்கை அறிக்கை, குடிநீர் விநியோகத்தை உறுதி செய்வது குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இதில் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறுமாறு கலெக்டர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார். கிராம மக்களுக்கு SHARE பண்ணுங்க.. 

error: Content is protected !!