Pudukkottai

News January 14, 2025

இளம் நெறிஞர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் ஆட்சியர்

image

மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகில் பணியாற்ற நெறிஞர் பதவிக்கு பணியிடம் நிரப்பப்பட உள்ளதால், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா இன்று இரவு ஆட்சியரகத்தில் இருந்து தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் மாதம் 50,000 தொகுப்பு ஊதியம் பெறலாம் எனவும் தகுதியானவர்கள் புள்ளியியல் துறை அலுவலகத்தில் 27.1.25 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 13, 2025

புதுகை: குறைந்த வாடகையில் அறுவடை இயந்திரங்கள் 

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வேளாண் துறை சார்பாக குறைந்த விலையில் அறுவடை இயந்திரங்கள் வழங்கப்படுவதாகவும், விவசாயிகள் இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் உழவன் செயலி மூலமாக பதிவு செய்து அறுவடை இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 13, 2025

ஆட்சியர் அறிவிப்பு வெளியீடு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டு தினங்களில் மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் கடைகள், மதுபான கூடங்கள் அந்நிய மற்றும் உள்நாட்டு தயாரிப்பு விற்பனை செய்யும் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் இன்று மாலை ஆட்சியரகத்தில் இருந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 13, 2025

புதுக்கோட்டையில் அருளும் நாகநாதசுவாமி

image

புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் எனும் கிராமத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயில் ராகு, கேது தோஷம் நீங்க வழிபடும் பிரசித்தி பெற்ற தலமாகும். இக்கோயிலானது கிபி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் என்று கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள சுனையில் பங்குனி இறுதியில் (அ) சித்திரை தொடக்கத்தில் ஒலி கேட்பதாகக் கூறப்படுகிறது. உங்கள் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களை கமெண்ட் செய்யுங்கள். SHARE NOW.

News January 12, 2025

கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 4 நபர் கைது

image

கோட்டைப்பட்டினம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 70 லட்சம் மதிப்புடைய 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அது சம்பந்தமாக லாரியின் உரிமையாளர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு காவல்துறை விசாரணையின் பின்பு 4 நபர் காவல் துறையினர் கைது செய்து இன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

News January 12, 2025

புதுக்கோட்டைக்கு மழை எச்சரிக்கை

image

தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று (ஜன.12) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!

News January 12, 2025

புகையில்லா போகி கொண்டாட ஆட்சியர் அறிவுறுத்தல்

image

புதுகை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 13ஆம் தேதி போகிப் பண்டிகையன்று வீட்டின் முன் தேவையில்லாத பிளாஸ்டிக், துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர், டியூப், காகிதம் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். ஆகவே அவற்றைத் தவிர்த்து புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தியுள்ளார்.

News January 11, 2025

புதுக்கோட்டைக்கு கனமழை எச்சரிக்கை

image

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.11) கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பயிர்கள் அறுவடைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு விவசாயிகளை சற்று கலக்கம் அடைய செய்துள்ளது. SHARE NOW!

News January 11, 2025

திருநங்கைகளுக்கான முன்மாதிரி விருது 

image

திருநங்கைகள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி திருநங்கையர் தினத்தன்று திருநங்கையில் ரூபாய் ஒரு லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன்படி சாதனை புரிந்த திருநங்கைகள் இவ்விருதத்திற்கான விண்ணப்பிக்கலாம்.

News January 11, 2025

கந்தர்வகோட்டை: நேருக்கு நேர் மோதி விபத்து 

image

கந்தர்வகோட்டையை சேர்ந்த அஜித்குமார் (23), கடந்த 9ஆம் தேதி இரவு பைக்கில் குல்துர் நாயக்கர்பட்டி பஜாரில் இருந்து தனது வீட்டுக்கு சென்ற போது நடு பட்டியை சேர்ந்த சரவணன் (28) ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியதில் அஜித் குமார் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர், அஜித்குமார் நேற்று கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.

error: Content is protected !!