India's largestHyperlocal short
news App
            Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

அறந்தாங்கி அருகே பெருமருதூர் பகுதியில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெருமருதூர்-ஆவுடையார்கோவில் சாலையில் சென்ற பொழுது மேலே சென்று இருந்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக வைக்கோல் உரசியதில் வைகோல் தீப்பற்றி எரிய லாரியும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை, பழைய கந்தர்வகோட்டை, மங்கலக்கோயில், குன்றாண்டார்கோயில் ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,21) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மக்களே. இலவச தையல் இயந்திரம் வேண்டுமா? தமிழக அரசு, சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின்கீழ், மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தும் விதமாக தையல் இயந்திரம் வழங்கி வருகிறது. இதற்கு விண்ணப்பிக்க எந்த ஒரு கல்வி தகுதியும் இல்லை. இதற்கு அருகிலுள்ள இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்தகவலை LIKE& SHARE பண்ணுங்க.

புதுகை மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு நிதியாண்டில் 42 மருத்துவ முகாம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதுவரை 6 “நலம் காக்கும் ஸ்டாலின்” சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளன. சராசரியாக ஒவ்வொரு முகாமிற்கு 1,400 க்கும் மேற்பட்ட மருத்துவ பயனாளிகள் என மொத்தமாக 8,748 மருத்துவ பயனாளிகள் சிறப்பு மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பயனடைந்துள்ளனர். என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ் இலவச ‘பால் கணக்கெடுப்பு, அக்கவுண்டிங்’ பயிற்சி வழங்கப்படுகிறது.  20 நாட்கள் நடைபெறும் இந்தப் பயிற்சியில் தினசரி பால் கணக்கீடு, கலெக்ஷன், நிர்வாகம் உள்ளிட்டவை சார்ந்த பயிற்சிகள் வழங்கப்படும். இதில் பயிற்சி பெற்றால் ஆவின் நிறுவனத்தில் பணிபுரியும் வாய்ப்பை பெறலாம். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <

புதுக்கோட்டை மக்களே Bank வேலைக்கு போக ஆசை இருக்கா? இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் காலியாகவுள்ள 127 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வந்துள்ளது.
1.துறை: IOB
2.பணி: Specialist Officer
3.கல்வி தகுதி: B.E./B.Tech, MBA, M.Sc,
4.சம்பளம்: 64,820
5.ஆன்லைனில் விண்ணப்பிக்க: Click <
6.வயது வரம்பு: 24 முதல் 40 வரை
7.கடைசி தேதி: 03.10.2025
இந்த தகவலை SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கீழ் வீட்டு வரி, சொத்து வரி, குடிநீர் வரி, வரி நிலுவைத் தொகையை பார்க்க, வரி செலுத்த, வரி செலுத்திய விவரங்களை பார்க்க இனி எங்கும் செல்ல வேண்டாம். https://vptax.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் அனைத்து சேவையையும் பெறலாம். மேலும் விவரங்களுக்கு 98849 24299 அழைக்கலாம். இதனை அனைவருக்கும் Share பண்ணுங்க!

புதுக்கோட்டை மக்களே வரும் 23.09.2025 ஆம் தேதி செவ்வாய் கிழமை நமது புதுக்கோட்டையில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்ட பகுதிகள்!
1.ஆதனக்கோட்டை
2.கந்தர்வ கோட்டை
3.புதுப்பட்டி
4.பழைய கந்தர்வ கோட்டை
5.மலைக்கோயில்
6.குன்றாண்டார்கோயில்
ஆகிய சுற்றுவட்டாரா பகுதிகளில் காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை மின் விநியோகம் இருக்காது!
இந்த தகவலை SHARE பண்ணுங்க!
Sorry, no posts matched your criteria.