India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மோகனசுந்தரம் என்பவரின் அவசர சிகிச்சைக்காக, O பாசிட்டிவ் இரத்தம் செப்டம்பர் 22 அவசரமாக தேவைப்பட்ட நிலையில், குருதிக்கூட்டின் அமைப்பிற்கு தொடர்பு கொண்ட மருத்துவர்கள் உடனடியாக வருகை தந்த மஜிமா குறித்த நேரத்தில் O+ குருதிக்கொடை அளித்து பேருதவி புரிந்துள்ளார். இதனால் மருத்துவர்கள் ரத்தம் அளித்தவருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,22) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

புதுக்கோட்டை மக்களே இன்று (செப்.22) இரவு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாகவே மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் கனமழை கொட்டித்தீர்த்தது வருகிறது. மேலும், இன்று இரவு புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. பொதுமக்கள் சற்று எச்சரிக்கையோடு இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. குடை முக்கியம் மக்களே.!

இலுப்பூரில் உள்ள தனியார் விவசாய கல்லூரியில் இலுப்பூர் புதுதெருவைச் சேர்ந்த தர்மராஜ் என்பவர் சூப்பர்வைசராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் கல்லூரியில் உள்ள கிணற்றை ஆழப்படுத்தும் பணியை ஆய்வு செய்வதற்காக கிணற்றின் அருகே சென்ற தர்மராஜ் எட்டிப் பார்த்தபோது கால் தவறி நீர் இல்லாத கிணற்றில் விழுந்து பாறையில் அடிபட்டு உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே செம்பட்டிவிடுதி போலீஸார் துவார் பகுதியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியாக சென்ற சுமை தூக்கும் ஜீப்பை சோதனையிட்டதில் அதில் அனுமதியின்றி மணல் அள்ளிவந்தது தெரிந்தது. அதைத் தொடர்ந்து வாகனத்தில் இருந்த ராமகிருஷ்ணன்(48), புருஷோத்தமன்(29) ஆகிய 2 பேரை கைதுசெய்த போலீஸார் ஜீப்பை பறிமுதல் செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வங்கி பணியாளர் தேர்வாணையம் (IBPS) மூலம் வங்கிகளில் காலியாக உள்ள 13,217 Manager, Assistant Manager உள்ளிட்ட பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இதில் தமிழ்நாட்டில் மட்டும் 688 காலிப்பணியிடங்கள் உள்ளன. இப்பணிக்கு ரூ.35,000 முதல் 80,000 வரை சம்பளம் வழங்கப்படும். ஏதேனும் டிகிரி முடித்தவர்கள் வரும் செப்.28-க்குள், https://www.ibps.in/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். SHARE பண்ணுங்க

புதுகை மக்களே, உங்களை முன்னறிவிப்பின்றி வேலையை விட்டு நீக்கினாலோ அல்லது சரியான சம்பளம் வழங்காவிட்டாலோ தொழிலாளர் நலவாரியத்தில் நீங்கள் புகார் அளிக்கலாம். அதன்படி, வீட்டு வேலை செய்பவர்கள் நலவாரியம் – 04428110147, கட்டுமான தொழிலாளர் நலவாரியம் – 044-28264950, 044-28264951, 04428254952, உடலுழைப்பு தொழிலாளர் நலவாரியம் – 044-28110147. இந்த தகவலை மற்றவர்களுக்கும் ஷேர் செய்து தெரியப்படுத்துங்க!

அறந்தாங்கி அருகே பெருமருதூர் பகுதியில் இருந்து வைக்கோல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் பெருமருதூர்-ஆவுடையார்கோவில் சாலையில் சென்ற பொழுது மேலே சென்று இருந்த மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக வைக்கோல் உரசியதில் வைகோல் தீப்பற்றி எரிய லாரியும் தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த ஆவுடையார்கோவில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை, பழைய கந்தர்வகோட்டை, மங்கலக்கோயில், குன்றாண்டார்கோயில் ஆகிய துணைமின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்சாரம் ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அனைவர்க்கும் ஷேர் பண்ணுங்க

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,21) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல் போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிவித்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.