India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுகை மாவட்டத்தில் கால்நடை வளர்ப்பு மற்றும் தொழில் முனைவோருக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்படி, நாட்டுக்கோழி பண்ணை, ஆட்டுப் பண்ணை, பன்றி வளர்ப்பு பண்ணை ஆகியவற்றை அமைக்க ரூ.10 முதல் ரூ.50 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மேலும் வைக்கோல், ஊறுகாய்ப்புல், தீவன சேமிப்பு வசதி பண்ணையம் அமைக்க மானியம் வழங்கப்படுகிறது. விருப்பம் உள்ளவர்கள் இங்கே <
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (05.04.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை, விராலிமலை அருகில் இந்த மெய்கண்ணுடையாள் அம்மன் கோயில் உள்ளது. இந்த அம்மனை ஊரின் காவல் தெய்வம் என கூறுகின்றனர். துன்பம் கொடுப்பவர்களையும், சொத்துக்களை அபகரித்தவர்களையும் தண்டிக்கும் சக்தி கொண்டவள் இந்த அம்மன். இங்கு நீராடி ஈரத் துணியுடன் அம்மன் முன் நின்று தங்கள் குறைகளைச் சொல்லி மனதார வேண்டினால் அதற்கான தீர்வு கிடைக்கும் என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதை பகிரவும்
புதுக்கோட்டையில், உதவிஇயக்குநர் பயன்படுத்திய பழைய நான்கு சக்கர வாகனம் வரும் 15 ஆம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள உதவி இயக்குநர் (ஊராட்சி) அலுவலகத்தில் பொது ஏலம் விடப்பட உள்ளது. ஏலம் எடுக்க விரும்புவோர் வரும் 11, 12 ஆகிய இரு தினங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாவட்ட ஆட்சியர் அலுவலக உதவி இயக்குநர் அலுவலகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனத்தினை பார்வையிடலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மின்நுகர்வோர் சிறப்பு குறைதீர் கூட்டம் இன்று காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. அதில் மின் மீட்டர்கள், குறைந்த மின்னழுத்தம், சேதமடைந்த மின் கம்பங்கள் மாற்றுதல் உள்ளிட்ட அனைத்து மின்சாரம் தொடர்பான புகார்களைத் தெரிவிக்கலாம். மாவட்டத்தில் உள்ள அனைத்து மின்வாரிய இயக்கம் மற்றும் பராமரிப்பு செயற்பொறியாளர்கள் அலுவலகங்களிம் சிறப்பு முகாம் நடைபெறும். (SHARE பண்ணுங்க)
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் டாஸ்மாக் அருகே முருகேஷ் (20) என்ற வாலிபர் நேற்று இரவு வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து மழையூரில் அவரின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இந்நிலையில் அரிவாள் வெட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது குறித்து மழையூர் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே உள்ள செவலூர் கிராமத்தில் ஸ்ரீ ஆரணவல்லி சமேத ஸ்ரீ பூமிநாதர் திருக்கோயில் உள்ளது. சொந்த வீடு அமைய வேண்டிக் கொள்வோர், இங்கு வந்து சுவாமிக்கு பூஜை செய்து வைக்கப்பட்ட செங்கற்களை வாங்கிச் செல்கிறார்கள். அந்த செங்கலை வீட்டு பூஜையறையில் வைத்து, தொடர்ந்து பூமி நாதரை எண்ணி வழிபட்டு வந்தால், கூடிய விரைவிலேயே சொந்தமாக வீடு அமையும் என்பது நம்பிக்கை. SHARE பண்ணுங்க..
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வணிக மேம்பாட்டு நிர்வாகி(Business Development Executive) பணிக்கான 20 இடங்களை நிரப்ப தமிழ்நாடு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை வாயிலாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு ரூ.25,000 வரையில் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தகுதியுடையவர்கள் <
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 03.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டையில் இன்று 03-04-2025 இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட /மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ)100 ஐ டயல் அப் செய்யலாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.