Pudukkottai

News January 9, 2025

4,92,891 குடும்பங்களுக்கு பொங்கல் தொகுப்பு- ஆட்சியர் தகவல்

image

புதுகை மாவட்டத்தில் 4,92,891 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். புதுகை மாவட்டத்தில் 4,91,944 அரிசி அட்டை தாரர்களுக்கும், 947 இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட உள்ளதாகவும், இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை பயனாளிகள் பெற்றுக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 8, 2025

பொங்கல் கரும்பை ஆய்வு செய்த ஆட்சியர்

image

தை திருநாள் பொங்கல் பண்டிகை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இதற்காக பொங்கல் தொகுப்பில் கரும்பும் வழங்கப்பட இருப்பதால், அரசர் குளம் பகுதியில் அரசால் வாங்கப்பட்ட செங்கரும்பு தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். ஆட்சியர் அருணா இந்நிகழ்வில் கூட்டுறவுத் துறையின் உயர் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

News January 8, 2025

மழையூர் : டூவீலர்கள் மோதிக்கொண்டதில் ஒருவர் பலி

image

கறம்பக்குடி அருகே கம்மங்காடு கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன் (60). விவசாயி. இவர் சொந்தவேலை காரணமாக மழையூர் தீத்தாணிப்பட்டிக்கு சென்று விட்டு ஊர் திரும்பி கொண்டிருந்தார். அப்போது பின்னால் வந்த டூவீலர் மோதிய விபத்தில் ராஜேந்திரன் அதே இடத்தில் பலியானார். மற்றொரு டூவீலரில் வந்தவர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து மழையூர் போலீஸார் விசாரிக்கின்றனர்.

News January 8, 2025

தாட்கோ மூலம் பயிற்சி பெற அழைப்பு

image

தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினத்தை சார்ந்தவர்களுக்கு தாட்கோ மூலம் தொழில்நுட்ப பயிற்சியாளர், பிராட்பேண்ட் டெக்னீசியன் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. 12ஆம் வகுப்பு, ஐடிஐ, டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பயிற்சி முடிந்தவுடன் பயிற்சியளிக்கும் நிறுவனத்தின் மூலம் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும். www.tahodco மூலம் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். SHARE பண்ணுங்க.

News January 8, 2025

இந்திய விமானப் படையில் சேர அழைப்பு

image

இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளர், அக்னிவீர் வாயு தேர்வு ஜன.29ஆம் தேதி கேரள மாநிலம் கொச்சி, எர்ணாகுளத்தில் உள்ள மகாராஜாஸ் கல்லூரி மைதானத்தில் நடைபெற உள்ளது. https://agnipathvayu.cdac.in/ என்ற இணையத்தில் ஜன.27ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தினை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார். SHARE IT.

News January 7, 2025

மாவட்ட ஆட்சியர் தலைமையில் மக்கள் தொடர்பு முகாம்

image

மணமேல்குடியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 08.01.2025 புதன்கிழமையன்று காலை 10.00 மணியளவில், புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி வட்டம், மும்பாலை கிராமத்தில், மக்கள் தொடர்பு முகாம் நடைபெற உள்ளது. இதில் அரசியல் கட்சி பிரமுகர்கள், அரசு அலுவலர்கள் கலந்து கொள்ள உள்ளனர் பொதுமக்கள் பயன்பெறுமாறு அறிவிக்கப்படுகிறது.

News January 7, 2025

அறந்தாங்கி அருகே 5 பேர் கைது

image

அறந்தாங்கி சன்னதி வயலில் ஒரு சிலர் சீட்டாட்டம் விளையாடுவதாக அறந்தாங்கி காவல் ஆய்வாளர் சூரிய பிரகாஸ்-க்கு தகவல் கிடைத்தது.  நேற்று மாலை அங்கு சென்ற போலீசார் விநாயகர் கோவில் பகுதியில் பணம் வைத்து சூதாடிய பன்னீர்செல்வம், ஜான் பாண்டியன், சாதிக் பாஷா, கமலதாஸ், ஷர்புதீன், ஆகியோரை கைது செய்தனர். பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டனர்.

News January 7, 2025

HMPV முன்னெச்சரிக்கை நடவடிக்கை தேவை

image

சீனாவில் அதிகம் பரவிவரும் HMPV வைரஸ் தமிழ்நாட்டிலும் இருவருக்கு உறுதியாகி உள்ளது. தமிழக அரசு உடனடியாக முறையான வழிகாட்டு நெறிமுறைகள் முன்னெச்சரிக்கை எடுக்க வேண்டுகிறது. பொங்கல் பண்டிகை வர உள்ளதால் மக்கள் அதிகம் கூடும் வாய்ப்பு இருப்பதால் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் டிவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

News January 6, 2025

இறுதி வாக்காளர் பட்டியல் இன்று கலெக்டர் வெளியீடு

image

இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுத்தலின்படி வாக்காளர் பட்டியலில் சுருக்க முறை திருத்த பணிகள் கடந்த ஆண்டில் நடைபெற்று வந்தன. இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீக்க திருத்த மேற்கொள்ள வாக்காளர்கள் விண்ணப்பித்து வந்தனர். மேலும் சிறப்பு முகாம்களும் நடைபெற்று வந்தன. இந்நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் இன்று காலை 10 மணிக்கு கலெக்டர் அருணா கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிடுகிறார்.

News January 5, 2025

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,07,350 டோக்கன் வழங்கல்

image

மாவட்டத்தில் கூட்டுறவு துறை மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று பொங்கல் தொகுப்பு பெற டோக்கன் வழங்கப்பட்டது. மாவட்டம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை இன்று ஒரே நாளில் 1,07,350 டோக்கன் வழங்கப்பட்டது. கூட்டுறவுத்துறை மூலமாக வழங்கப்படும் இந்த பணி வரும் 8ம் தேதி மாலை 6 மணி வரை நடைபெறும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. 9ம் தேதி முதல் பொங்கல் தொப்பு வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!