India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கோட்டைப்பட்டினம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 70 லட்சம் மதிப்புடைய 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அது சம்பந்தமாக லாரியின் உரிமையாளர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு காவல்துறை விசாரணையின் பின்பு 4 நபர் காவல் துறையினர் கைது செய்து இன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று (ஜன.12) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!
புதுகை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 13ஆம் தேதி போகிப் பண்டிகையன்று வீட்டின் முன் தேவையில்லாத பிளாஸ்டிக், துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர், டியூப், காகிதம் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். ஆகவே அவற்றைத் தவிர்த்து புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தியுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் இன்று பல்வேறு மாவட்டங்களுக்கு மழை முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.11) கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பா பயிர்கள் அறுவடைக்கு இன்னும் ஓரிரு நாட்களே உள்ள நிலையில் இந்த அறிவிப்பு விவசாயிகளை சற்று கலக்கம் அடைய செய்துள்ளது. SHARE NOW!
திருநங்கைகள் சந்திக்கும் எதிர்ப்புகளை மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவிக்கும் வகையில் 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி திருநங்கையர் தினத்தன்று திருநங்கையில் ரூபாய் ஒரு லட்சம் காசோலை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அதன்படி சாதனை புரிந்த திருநங்கைகள் இவ்விருதத்திற்கான விண்ணப்பிக்கலாம்.
கந்தர்வகோட்டையை சேர்ந்த அஜித்குமார் (23), கடந்த 9ஆம் தேதி இரவு பைக்கில் குல்துர் நாயக்கர்பட்டி பஜாரில் இருந்து தனது வீட்டுக்கு சென்ற போது நடு பட்டியை சேர்ந்த சரவணன் (28) ஓட்டி வந்த பைக் நேருக்கு நேர் மோதியதில் அஜித் குமார் மற்றும் சரவணன் ஆகிய இருவரும் படுகாயமடைந்தனர். பின்னர், அஜித்குமார் நேற்று கொடுத்த புகாரின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் விசாரணை நடத்தினர்.
கோட்டைப்பட்டினம் கிழக்கு கடற்கரை சாலையில் லாரியில் கடத்தி வரப்பட்ட 300 கிலோ கஞ்சா பிடிபட்டது. காரைக்கால் இருந்து தூத்துக்குடிக்கு கண்டெய்னர் லாரியில் கடத்திடப்பட்ட 300 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காவல்துறை விசாரணை முடிந்த பின்பு முழுமையான விவரம் தெரிய வரும்.
புதுகை மாவட்ட திருநங்கைகளுக்கு சொந்த முயற்சியில் படித்து தனித்திறமைகளை வளர்த்துக் கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கைகளை கௌரவப்படுத்தும் வகையில் 2025ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி திருநங்கையர் தினத்தன்று முன்மாதிரி விருது (1லட்சம் ரூபாய்) வழங்கப்படுகிறது. அதன்படி சாதனை புரிந்தவர்கள் https://awards.tn.gov.in ஜன.31ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அருணா கேட்டுக் கொண்டுள்ளார்.
அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வருமானத்திற்கு அதிகமான சொத்துகளை சேர்த்ததாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. ஆனால் விஜயபாஸ்கர் ஆஜராகவில்லை, வழக்கு நடைபெற்று வரும் மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதி விடுமுறை சென்றுள்ளதால் வரும் 24ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வட்டம் மும்பாலை கிராமத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமிற்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்து பேசும்போது ‘பொதுமக்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களின் நிலவரம் குறித்து கண்காணிப்பதற்காக மாவட்ட ஆட்சியரகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் நியமிக்கப்பட்டு அவ்வப்போது கண்காணிக்கப்பட்டு வருவதாக’ மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்தார்.
Sorry, no posts matched your criteria.