India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி அடுத்த வீரராகவபுரத்தை சேர்ந்தவர் முனியன் (67). இவர் அவரது வீட்டில் கிரைண்டர் ஸ்விட்சை ஆன் செய்தபோது, துரதிஷ்டவசமாக மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனை அடுத்து அவரது உடல் அறந்தாங்கி மருத்துவமனையில் உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. இதுகுறித்து அவரது மகன் அய்யனார் (40) அளித்த புகாரின் பேரில் நாகுடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

BANK OF BARODA வங்கியில் காலியாக உள்ள ’50’ மேனேஜர், சீனியர் மேனேஜர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பபட உள்ளன. இதற்கு ஏதேனும் ஒரு டிகிரி மற்றும் நிதி சார்ந்த டிப்ளமோ / முதுகலை பட்டம் பெற்ற 25 வயதுக்கு மேற்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு மாத சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,20,940 வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் bankofbaroda.bank.in எனும் இணையதளத்தில் வரும் அக்.30-க்குள் விண்ணப்பிக்க வேண்டும். SHARE IT

புதுகை மாவட்ட தீயணைப்புத்துறை எண்கள்
1) புதுகை- 04322-222399
2) ஆலங்குடி- 04322-251350
3) திருமயம்- 04333-274258
4) கறம்பக்குடி-04322-258101
5) கீரனூர்- 04339-262210
6) இலுப்பூர்- 04339-272433
7) ஆவுடையார்கோவில்- 04371-233441
8) கந்தர்வக்கோட்டை- 04322-275743
9) ஜெகதாப்பட்டினம்- 04322-275743
10) கீரமங்கலம்- 04371 242101
11) பொன்னமராவதி -0433 262088
12) அறந்தாங்கி- 9445086453. SHARE பண்ணுங்க

தென்மேற்கு வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக புதுகை, நாகை, தஞ்சை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் வரும் அக்.20 (இன்று), அக்.21 (செவ்வாய்க்கிழமை), அக்.22 (புதன்கிழமை) ஆகிய 3 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.19) இரவு 10 மணி முதல் இன்று (அக்.20) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மக்களே மழை காலங்களில் உங்கள் குடியிருப்பு பகுதியில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, லைன்மேனைத் தேடி அலைய வேண்டாம். இனிமேல் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், உங்களைத் தேடி லைன்மேன் வருவார். இத்தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு பகுதிகளில் நாளை (அக்.20) இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மின்னல் தாக்கும் நேரங்களில் மக்கள் திறந்தவெளி மற்றும் மரங்களின் கீழ் நிற்காமல் தவிர்ப்பது நல்லது.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம், வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் குடுமியான்மலையில் தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தில், 26 நாட்கள் 25 நபர்களுக்கு தேனீ வளர்ப்பு தொழில்நுட்பங்கள் என்ற தலைப்பில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதில் பங்குபெற விரும்புபவர்கள் அக்.,22 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு வேளாண்மை கல்லூரியை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருவமழை தொடங்கியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் உங்கள் பகுதியில் மழையால் ஏற்படும் பாதிப்புகளான, வெள்ளம், மின்தடை மற்றும் அத்தியாவசியத் தேவைகள் குறித்து தகவல் தெரிவிக்க இந்த எண்ணை Save பண்ணிக்கோங்க. மாநில உதவி எண் – 1070, மாவட்ட உதவி எண்- 1077, அவசர மருத்துவ உதவி – 104 என்ற எண்கள் மழைக்காலங்களில் தேவைப்படலாம். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

புதுக்கோட்டையில் பல பகுதிகளில் நேற்று (அக்.19) புதுக்கோட்டை காவல் துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். புதுகை அடுத்த சோலகம் பட்டியில் மாரியாயி (50), முத்துலட்சுமி (35) நாயக்கம்பட்டியில் சக்திவேல் (50), ரவி (60) தச்சங்குறிச்சியில் அண்ணாமலை (65) என்பவரும் சட்டவிரோத மது விற்பனை செய்தனர். அவர்களை போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 130 மது பாட்டில்களை பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
Sorry, no posts matched your criteria.