India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் காவல் நிலையம் ஆரம்பிக்கப்பட்டு. 100-ஆண்டு முடிவடைந்ததை அடுத்து காவல் நிலையம் நூற்றாண்டு விழாவை கொண்டாட தயாராகிறது இதனையடுத்து காவல் நிலையம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது இந்த நிலையில் அந்த காவல் நிலையத்தின் இன்ஸ்பெக்டர் திருமதி லதா அவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
ஆவுடையார்கோவில், மீமிசல் குமரப்பன் வயல் பகுதியை சேர்ந்த வசந்த் (23), மனோஜ் (20) இருவரும் டூவீலரில் நேற்று அப்பகுதிக்கு சென்றபோது மதுபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் பொன்பேத்தி சாலையில் தடுப்புகட்டையில் டூவீலர் மோதி ஏற்பட்ட விபத்தில் வசந்த் அதே இடத்தில் உயிரிழந்தார். படுகாயமடைந்த மனோஜ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து திருப்புனவாசல் போலீஸார் விசாரிக்கின்றனர்.
புதுகை மாவட்டத்தில் 497 கிராம ஊராட்சிகளில் குடியரசு தினத்தன்று கிராம சபை கூட்டம் வருகிற 26 ஆம் தேதி நடக்கிறது. இதில் கிராம ஊராட்சி செலவினம் குறித்து விவாதித்தல், தணிக்கை அறிக்கை, ஜல் ஜீவன் மிஷன் திட்டம் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளதால், பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சேர்ந்தோர் கலந்து கொண்டு பயன்பெறலாம் என ஆட்சியர் மு.அருணா அழைப்பு விடுத்துள்ளார்.
மாவட்ட சிறப்பு திட்ட செயலாக்க அலகில் பணியாற்ற நெறிஞர் பதவிக்கு பணியிடம் நிரப்பப்பட உள்ளதால், தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அருணா இன்று இரவு ஆட்சியரகத்தில் இருந்து தகவல் வெளியிட்டுள்ளார். மேலும் மாதம் 50,000 தொகுப்பு ஊதியம் பெறலாம் எனவும் தகுதியானவர்கள் புள்ளியியல் துறை அலுவலகத்தில் 27.1.25 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகள் தற்போது சம்பா நெல் அறுவடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக வேளாண் துறை சார்பாக குறைந்த விலையில் அறுவடை இயந்திரங்கள் வழங்கப்படுவதாகவும், விவசாயிகள் இதை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் உழவன் செயலி மூலமாக பதிவு செய்து அறுவடை இயந்திரங்களை பயன்படுத்திக் கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் ஜனவரி மாதத்தில் திருவள்ளுவர் தினம் மற்றும் குடியரசு தினம் ஆகிய இரண்டு தினங்களில் மாவட்டம் முழுவதும் டாஸ்மார்க் கடைகள், மதுபான கூடங்கள் அந்நிய மற்றும் உள்நாட்டு தயாரிப்பு விற்பனை செய்யும் கடைகள் இயங்காது என மாவட்ட ஆட்சியர் இன்று மாலை ஆட்சியரகத்தில் இருந்து அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் எனும் கிராமத்தில் உள்ள நாகநாதசுவாமி கோயில் ராகு, கேது தோஷம் நீங்க வழிபடும் பிரசித்தி பெற்ற தலமாகும். இக்கோயிலானது கிபி 11ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில் என்று கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள சுனையில் பங்குனி இறுதியில் (அ) சித்திரை தொடக்கத்தில் ஒலி கேட்பதாகக் கூறப்படுகிறது. உங்கள் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களை கமெண்ட் செய்யுங்கள். SHARE NOW.
கோட்டைப்பட்டினம் பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னால் ஆந்திராவில் இருந்து கடத்திவரப்பட்ட 70 லட்சம் மதிப்புடைய 340 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. அது சம்பந்தமாக லாரியின் உரிமையாளர் ஓட்டுநர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அதன் பிறகு காவல்துறை விசாரணையின் பின்பு 4 நபர் காவல் துறையினர் கைது செய்து இன்று சிறையில் அடைக்கப்பட்டனர்.
தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை ஆய்வு மையம் மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி திருவாரூர், நாகை, தஞ்சை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை ஆகிய டெல்டா மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று (ஜன.12) கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. SHARE NOW!
புதுகை மாவட்ட ஆட்சியர் அருணா வெளியிட்டுள்ள அறிக்கையில், வருகிற 13ஆம் தேதி போகிப் பண்டிகையன்று வீட்டின் முன் தேவையில்லாத பிளாஸ்டிக், துணிகள், ரப்பர் பொருட்கள், பழைய டயர், டியூப், காகிதம் போன்றவற்றை எரிப்பதால் காற்று மாசுபாடு ஏற்படுவதோடு, நச்சு வாயுக்களால் மூச்சுத்திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்கள் ஏற்படக்கூடும். ஆகவே அவற்றைத் தவிர்த்து புகையில்லா போகி பண்டிகையை கொண்டாட அறிவுறுத்தியுள்ளார்.
Sorry, no posts matched your criteria.