India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டையில் வரும் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை மீன்களின் இனப்பெருக்கத்திற்காக மீன்பிடி தடைக்காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, தமிழகம் முழுவதும் 20,000 விசைப்படகுகள் நிறுத்தி வைக்கப்படும். இந்த காலத்தில், மீனவ குடும்பங்களுக்கு நிவாரணமாக மாதம் ரூ.8,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் புதுக்கோட்டை மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
புதுக்கோட்டையில் மீன்பிடி தடைக்காலம் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தொடங்குகிறது. வ. விரிகுடா, பாக் நீர்ச்சந்தி, மன்னார் வளைகுடா இணையும் பகுதிகளில் வாழும் கடல்வாழ் உயிரினங்களின் இனப்பெருக்க காலம் ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில் நடைபெறுவதால், இக்காலகட்டத்தில் விசைப்படகுகள், இழுவைப் படகுகள் மூலம் இங்கு மீன்பிடிக்க செல்ல தடை விதிக்கப்படுகிறது. எனவே மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்கவும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களில் ரேஷன் அட்டை திருத்த முகாம் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம், சேர்த்தல், முகவரி மாற்றம், மொபைல் நம்பர் அப்டேட் போன்ற அப்டேட்களை இலவசமாக செய்து கொள்ளலாம் கட்டணம் இல்லை. ரேஷன் கார்ட் வைத்திருக்கும் அனைவருக்கும் SHARE செய்து உதவவும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 10.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எங்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளனர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 281 அங்கன்வாடி பணியாளர், 5 குறு அங்கன்வாடி பணியாளர் மற்றும் 196 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக நியமனம் செய்யப்பட உள்ளன. இதற்கான விண்ணப்பங்களை www.icds.tn.gov.in என்கின்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா தகவல் தெரிவித்துள்ளார். பிறரும் பயன்பெற SHARE செய்து உதவுங்கள்..
இந்திய ராணுவத்தில் நடப்பாண்டிற்குரிய அக்னிவீர் ஜெனரல் டியூட்டி, டெக்னிக்கல், அலுவலக உதவியாளர் மற்றும் ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பணிகளுக்கு அதிகாரப்பூர்வ <
புதுக்கோட்டை மக்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய அரசு உதவி எண்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் – 04322-221695, பேரிடர் கால உதவி -1077, குழந்தைகள் பாதுகாப்பு – 1098, பாலியல் துன்புறுத்தல் உதவி – 1091, காவல் துறை துணை கண்கானிப்பாளர் – 04322-222236, விபத்து அவசர வாகன உதவி – 102. இந்த தகவலை பிறரும் தெரிந்து கொள்ள SHARE செய்யவும்
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் 30 FIELD SALES EXECUTIVE பணிக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 19 வயது முதல் 51 வயது வரை உள்ள ஆண்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.15,000 – 25,000 வழங்கப்படும். விருப்பம் உள்ளவர்கள் இந்த லிங்க்கை <
புதுக்கோட்டையில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியர் அலுவலகத்திலும் குடும்ப அட்டை சம்பந்தப்பட்ட குறை தீர்ப்பு முகாம் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் குடும்ப அட்டைதாரர்கள் பங்கேற்று குறைகள் பெயர் நீக்கம், பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 08.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ள மாவட்ட கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.