Pudukkottai

News January 25, 2025

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை

image

மாவட்டத்தில் படித்து வேலையில்லாத இளைஞர்களுக்காக அரசால் வழங்கப்படும் 10 ஆம் வகுப்பில் தோல்வியுற்றவர்களுக்கு மாதம் ரூ 200 ம், தேர்ச்சியுற்றவர்களுக்கு ரூ 300 ம், 12 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு மாதம் ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது. இதற்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 5 ஆண்டுகளுக்கு மேல் காத்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News January 25, 2025

அறந்தாங்கி மின்சாரம் பாய்ந்து பள்ளி மாணவன் பலி

image

பத்திரக்கோட்டை பகுதியை சேர்ந்த சக்தி சோமையா 14 இவன் காரைக்குடி பொய்யா வயல் அரசு பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் பள்ளிக்கு வந்த சக்தி சோமையா கம்ப்யூட்டர் வகுப்புக்கான பள்ளியில் இருந்த கணினி சுவிட்சை போட்டுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி உயிரிழந்தார்.  இதுகுறித்து தந்தை கைலாசம் கொடுத்த புகாரின் பேரில் சாக்கோட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 25, 2025

புதுகையில் இன்று குறைதீர் கூட்டம்

image

புதுகை மாவட்டம் முழுவதும் ரேஷன் கடை தொடர்பான குறைதீர்க்கும் நாள் முகாம் இன்று காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அந்தந்த தாசில்தார் அலுவலகங்களில் நடைபெற உள்ளது. பொதுமக்கள் சென்று குடும்ப அட்டைகள் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம், புதிய குடும்ப அட்டை நகல், செல்போன் எண் மாற்றம் ஆகியவை செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News January 24, 2025

வேங்கை வயல் விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் மூன்று பேருக்கு தொடர்புள்ளதாக தமிழக அரசு நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. இதில் முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவரின் கணவரை பழி வாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதில் சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

News January 24, 2025

ஜகபர் அலி கொலை; விசாரணை அதிகாரி நியமனம்

image

புதுக்கோட்டை, திருமயம் அருகே வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி சட்டவிரோத கனிம கொள்ளைக்கு எதிராக போராடியதால் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை ஜன.22 அன்று சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, விசாரணை அதிகாரியாக புவனேஷ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பாக ஏற்கெனவே 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், நேற்று குவாரி உரிமையாளர் ராமையா காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

News January 24, 2025

2ஆவது குரு ஸ்தலத்தை பற்றிய சிறப்பு பார்வை

image

ஆலங்குடி, சுந்தரபாண்டிய மன்னரால் கட்டப்பட்ட தமிழகத்தில் 2ஆவது குரு ஸ்தலமாக நாமபுரீஸ்வரர் கோயில் விளங்குகிறது. அங்கு வீற்றிருக்கும் குரு தட்சிணாமூர்த்தி பகவானை வாரந்தோறும் வியாழக்கிழமை தொடர்ந்து 9 முறை தங்கள் ஜாதகத்தை வைத்து பூஜித்து கோயில் உள்பிரகாரத்தில் 27 முறை சுற்றி வந்து வழிபாடு செய்தால், ஜாதக ரீதியான தோஷங்கள், திருமண தடைகள், பண கஷ்டம் நீங்குவதாகக் கூறப்படுகிறது. SHARE NOW!

News January 24, 2025

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

image

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 24.01.2025 வெள்ளிக்கிழமையன்று காலை 10:30 மணியளவில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் 24.01.2025 வெள்ளிக்கிழமையன்று காலை 10:30 மணியளவில், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது.

News January 23, 2025

இளைஞர்களுக்கு உதவித்தொகை  ஆட்சியர் அறிவிப்பு 

image

மாவட்டத்தில் படித்து வேலை இல்லா இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் தகுதியான நபர்கள் உதவித்தொகை பெறலாம் எனவும் இதனால் வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவுகள் எந்தவித தேக்க நிலையும் இருக்காது எனவும் இந்த உதவித்தொகை வருடம் முழுவதும் வழங்கப்படுவதாகவும் தகுதியானவர்கள் புதுக்கோட்டை மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் அருணா இன்று மாலை அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

News January 23, 2025

விபத்தில் சிக்கிய பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த மு.அமைச்சர்

image

புலிப்பட்டியை சேர்ந்த முத்தமிழ் செல்வி என்ற ஒரு பெண் தனது மகனுடன் இருசக்கர வாகனத்தில் இலுப்பூரில் இருந்து பிலிப்பட்டிக்கு சென்றுகொண்டறிந்தார். அப்போது தனது இருசக்கர வாகனத்தில் புடவை சிக்கி நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது அந்த வழியாக சென்ற மு. அமைச்சர் விஜயபாஸ்கர் அதனை கண்டதும் 108 ஆம்புலன்ஸ் அழைத்து முதலுதவி சிகிச்சை அளித்து இலுப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

News January 23, 2025

குவாரி உரிமையாளர் காவல் நிலையத்தில் சரண்

image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் சமூக ஆர்வலர் ஜகுபர் அலி லாரி ஏற்றி கொல்லப்பட்ட வழக்கில் தலைமறைவாகியிருந்த குவாரி உரிமையாளர் ராமையா புதுக்கோட்டை நமனமுத்திரம் காவல் நிலையத்தில் சரணடைந்தார். திருமயத்தில் சட்ட விரோதமாக கல்குவாரிகள் இயங்குவதாக தொடர்ந்து புகார் அளித்த ஜகுபர் அலியை லாரி ஏற்றி கொன்ற வழக்கில் தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர் ராமையா இன்று காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

error: Content is protected !!