India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 3073 Sub-Inspector பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. காலியிடங்கள் : 3073
3. கல்வித் தகுதி: டிகிரி
4.சம்பளம்.ரூ.35,400 – ரூ.1,12,400
5. வயது: 20-25 (SC/ST-30, OBC-28)
6. கடைசி நாள் :16.10.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <
இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

புதுக்கோட்டை, திருமயம் அடுத்த திராவிடங்கியில் குளத்தின் அருகில் பழமையான கல்வெட்டு கண்பிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டின் காலம் 1328ஆம் ஆண்டு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் உய்ய வந்தான் திருநோக்கு அழகிய தொண்டமானார் இவ்வூரை திருப்பெருந்துறை ஆளுடைய பரம சுவாமிக்கு திருவிடையாட்டமாக அளித்துள்ள செய்தி தெரியவருகிறது என புதுகையைச் சேர்ந்த கல்வெட்டு ஆய்வாளர் காளிதாஸ் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (செப்.28) டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வுகள் 37 மையங்களில் நடைபெற்றது. இத்தேர்வை எழுத 10,947 பேருக்கு நுழைவு சீட்டுகள் அனுப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வை 8,621 பேர் மட்டுமே தேர்வு எழுதியதாகவும், மீதம் 2,326 பேர் தேர்வில் எழுத வரவில்லை என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. இத்தேர்வு 5 பறக்கும் படைகளால் கண்காணிக்கப்பட்டது.

புதுகையில் நாளை (செப்.,30) உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெறும் இடங்கள்: புதுகை திருக்கட்டளை பகுதி மக்களுக்கு திருக்கட்டளை சமுதாயக் கூடத்திலும், கீரனூர் பேரூராட்சி 14-வது வார்டு பகுதி மக்களுக்கு OSP மஹாலிலும், அறந்தாங்கி ஒன்றிய பகுதி பொதுமக்களுக்கு பெரியாளுர் தமிழ் திருமண மண்டபத்திலும், திருமயம், அன்னவாசல், கறம்பக்குடி பகுதிகளிலும் முகாம் நடைபெற உள்ளதாக கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் 8-வது புதுக்கோட்டை புத்தகத் திருவிழாவினை முன்னிட்டு விழிப்புணர்வு பிரச்சாரம் வாகனத்தினை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை (செப்.29) காலை 10:15 மணியளவில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.28) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் பரமந்தூர் கல்லனேந்தல் கல்லூரி அருகே இன்று மதியம் சாலையோர பள்ளத்தில் கார் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்தவித அசம்பாவிதமும் நடக்காமல் உயிர் தப்பினர். இதே இடத்தில் தெடர்ச்சியாக விபத்துகள் நடந்து கொண்டே உள்ளது. இந்த இடத்தில் முறையான அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என இப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சென்னை, விழுப்புரம் , கடலூர், கும்பகோணம் போன்ற 6 மண்டலங்களில் 1,588 பயிற்சிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பொறியியல் பட்டதாரிகளுக்கு மாதம் ரூ.9,000 & டிப்ளமோவுக்கு மாதம் ரூ.8,000 உதவித்தொகை வழங்கப்படும். இதற்கு கலை, அறிவியல், வணிகப் பிரிவுகளில் பட்டப்படிப்பு முடித்தவர்களும் <

மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) மூலம் காலியாக உள்ள 7565 Constable (Executive) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.
1. வகை: மத்திய அரசு வேலை
2. காலியிடங்கள் : 7565
3. கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு
4. வயது: 18-25 (SC/ST-30, OBC-28)
5. கடைசி நாள் : 21.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: CLICK <
இந்த தகவலை ஷேர் பண்ணுங்க!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துநர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருட்களை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க
Sorry, no posts matched your criteria.