India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டையில் தமிழ்நாடு
மனநல மருத்துவ சங்கத்தின் சார்பில் நேற்று தொடங்கிய 2 நாள் மனநல மருத்துவ கருத்தரங்கிற்கு மாநிலத்தலைவர் டாக்டர் சி.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். கருத்தரங்க மலரை மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா வெளியிட்டார். இதில் மூத்த மருத்துவர்கள் ராமசுப்பிரமணியன், ஜெயந்தினி , விஜய்சுவாமிநாதன் , அரசு மனநல காப்பகத்தின் இயக்குனர் மலையப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

காரையூர், விளாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(6) நேற்று மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பாம்பு கடித்ததில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு அருகிலிருந்தவர்கள் புதுகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாதேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து காரையூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

காரையூர், விளாக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் மாதேஷ்(6) நேற்று மாலை வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த பாம்பு கடித்ததில் மயக்கமடைந்து கீழே விழுந்தார். அவரை மீட்டு அருகிலிருந்தவர்கள் புதுகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மாதேஷை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர். இது குறித்து காரையூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

அறந்தாங்கியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவர் பெருங்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் சூப்பர்வைசராக உள்ளார். நேற்று நள்ளிரவு அவர் கடையில் இருந்து அறந்தாங்கியில் வசிக்கும் வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் வரும்போது மர்ம நபர்கள் அவரை அரிவாளால் வெட்டியுள்ளனர். படுகாயம் அடைந்த அவர் சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தலினால் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை.மக்களவைத் தேர்தல் முடிவுற்றதால் விராலிமலையில் மெய்க்கண்ணுடையாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 30 ஆம் தேதியும், பொன்னமராவதி வட்டம் முள்ளிப்பட்டியில் மே 10 ஆம் தேதியும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்து அரசானையை அரசு கால்நடை பராமரிப்புத்துறை கூடுதல் செயலர் மங்கத்ராம் சர்மா நேற்று வெளியிட்டுள்ளார்.

ஒட்டன்சத்திரத்தைச் சோ்ந்தவா் எம்.ஜெயக்குமாா். இவா் புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் வாடகை வீட்டில் தங்கி மழையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் முதுநிலை ஆசிரியராக பணிபுரிந்து வந்தாா். இந்நிலையில், கறம்பக்குடியில் உள்ள வாடகை வீட்டில் இருந்தபோது நேற்று திடீரென ஜெயக்குமாருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே சாலையில் சென்ற கார் திடீரென வேகக் கட்டுப்பாட்டை இழந்து கார் மரத்தில் மோதிய விபத்தில் காரை ஓட்டி வந்த டிரைவர் வீரணம்பட்டியில் சேர்ந்த விவேக் குமார் (32). என்பவர் பலியானார். இந்த சம்பவம் குறித்து பனையப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விஜய ரகுநாத சேதுபதி என்பவர் 1687ஆம் ஆண்டு திருமயம் கோட்டையை புதுக்கோட்டையில் நிறுவினார். 40 ஏக்கர் பரப்பளவில் இக்கோட்டை அமைந்துள்ளது. தற்போது இருக்கும் அளவை விட இக்கோட்டை இரு மடங்கு பெரியதாக இருந்திருக்கும் என்று வரலாறு கூறுகிறது. கோட்டையிலிருந்து நுழைவு வாயில் ஒரு கி.மீ தொலைவில் உள்ளது. கோட்டையில் அடிவாரத்தில் சிவன், விஷ்ணு ஆலயங்கள் மற்றும் குலம், மண்டபங்கள் உள்ளன.

புதுக்கோட்டையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கினங்க கோடையில் மக்களின் தாகத்தை தீர்க்க அறுசுவை நிரம்பிய பழங்களுடன் கூடிய நீர், மோர் பந்தலை இன்று முன்னாள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். இதில் திரளான அதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

புதுக்கோட்டையின் தீா்க்கப்படாத நீண்டகாலப் பிரச்னையாகக் கருதப்படும் தைலமரங்களை அகற்ற கோரும் பிரச்னையில், அடுத்தகட்டமாக உச்ச நீதிமன்றத்தை நாடுவதற்கு விவசாயிகள் முடிவு செய்துள்ளனா். இவற்றில் கணிசமான பகுதி புதுக்கோட்டையைச் சோ்ந்தது . 1974-இல் வனத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்த சுமாா் 60 ஆயிரம் ஏக்கா் காப்புக்காடுகள் 99 ஆண்டுகள் ஒப்பந்தமாக வனத்தோட்டக் கழகத்துக்கு வழங்கப்பட்டன.
Sorry, no posts matched your criteria.