Pudukkottai

News May 8, 2024

புதுக்கோட்டை அருகே மாட்டுவண்டி எல்கைப்பந்தயம் .

image

நெடுங்குடியில் மாட்டுவண்டி எல்கைப்பந்தயம் .
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி ரேஸ் நடந்தது. பந்தயத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன . பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.

News May 8, 2024

இனி நீங்களும் ரிப்போர்ட்டர் தான்

image

தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள், கோரிக்கைகளை செய்தியாக பதிவிட்டு நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

News May 7, 2024

புதுகையில் வெப்ப அலை எதிரொலி

image

புதுக்கோட்டை, வெப்ப அலை எதிரொலியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. வெப்பத் தாக்க நோய்களுக்கான 24 மணி நேர தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம். கட்டிட தொழிலாளர்கள் வெயிலில் அதிக நேரம் பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.

News May 7, 2024

புதுக்கோட்டை அருகே அதிரடி ரெய்டு

image

விராலிமலை- மணப்பாறை சாலையில் உள்ள வணிக நிறுவனங்களில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் இணைந்து காலாவதியான பொருள்களை கைப்பற்றி அழித்து அபராதம் விதித்தனர். புகையிலைப் பொருள்கள் குறித்தும் சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கொடும்பாளூர் சுகாதார ஆய்வாளர் மாரிக்கண்ணு, செல்வராஜ், விமல், சதீஷ்குமார், சிவசங்கரன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.

News May 7, 2024

புதுகை மாவட்டத்தில் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம்!

image

புதுகை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம்- ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 96.97 சதவீதம், முழுமையான அரசு உதவிபெறும் பள்ளிகளில் 94.73 சதவீதம், அரசுப் பள்ளிகளில் 91.80 சதவீதம், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் 98.14 சதவீதம், சுயநிதிப் பள்ளிகளில் 96.68 சதவீதம், சுயநிதி(மெட்ரிக்) பள்ளிகளில் 99.14 சதவீதம் பெற்றுள்ளன. மாநில அளவில் புதுகை மாவட்டம் 24 வது இடத்தில் உள்ளது.

News May 7, 2024

புதுக்கோட்டை:9 அரசு பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி!

image

புதுகை மாவட்டத்தில் 9 அரசுப் பள்ளிகள் பிளஸ் 2 தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி,நெடுவாசல் அரசு மேல்நிலைப் பள்ளி,கரூர் அரசு மேல்நிலைப் பள்ளி,அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,மண்ணவேலம்பட்டி அரசு பள்ளி,மருதாந்தலை அரசு பள்ளி,நார்த்தாமலை அரசு மேல்நிலைப் பள்ளி,சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகியன.

News May 6, 2024

புதுக்கோட்டையில் மாணவ, மாணவிகள் 93.79% தேர்ச்சி

image

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மொத்தம் 94.56 % இதில் புதுக்கோட்டையில் பயின்ற மாணவ, மாணவிகள் 93.79% தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுக்கோட்டையில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சியும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.

News May 6, 2024

புதுக்கோட்டை:கத்தியுடன் சுற்றித்திரிந்த வாலிபர் கைது

image

ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாலங்குடி ஐ.டி காலணியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுத்தி சுற்றித்திரிந்தார். இதை பார்த்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்

News May 6, 2024

புதுக்கோட்டை:கோயில்களில் பிரதோஷ வழிபாடு!

image

பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோயில் முன்பு உள்ள நந்திக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான, அபிஷேகங்கள் செய்யப்பட்டு
சிறப்பு அலங்காரம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைப்போன்று வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் , திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

News May 5, 2024

புதுக்கோட்டை: மாதா கோயில் தேர்பவனி!

image

புதுகை, திருக்கோகர்ணம் கோவில்பட்டி அருகே அமைந்துள்ள மாதா ஆலய 21 ஆம் ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன்
முக்கிய நிகழ்வான தேர் பவனி நேற்று இரவு எஸ்எம்எஸ் பங்கு ஆலய வளாகத்திலிருந்து தொடங்கியது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பவனி முக்கிய வீதிகள் வழியாக சென்று புதுகை மாதா ஆலயத்தை சென்றடைந்தது. அங்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!