Pudukkottai

News May 23, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

News May 23, 2024

புதுக்கோட்டை அருகே என்ஜினியர் தற்கொலை!

image

புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் ஆலங்குளம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த சேகரின் மகன் விஜய்சுந்தர்(26). என்ஜினீயரான இவர் வேலைக்கு சென்று வந்த நிலையில் கடந்த 20 ஆம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் நேற்று(மே 22) வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

News May 23, 2024

மாட்டுச் சாணம் விவகாரம்: 3 பேரிடம் விசாரணை

image

புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை தாலுகாவை சோ்ந்த சங்கம்விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஏப்.25 ஆம் தேதி மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், மனுதாரா் உள்பட 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று(மே 22) விசாரணை மேற்கொண்டனர்.

News May 22, 2024

புதுக்கோட்டை : இன்று கனமழைக்கு வாய்ப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

News May 22, 2024

புதுக்கோட்டை அருகே தேரோட்ட திருவிழா!

image

புதுக்கோட்டை, திருமயம் அருகே நெடுங்குடியிலுள்ள கைலாசநாதர், பிரசன்ன நாயகி அம்மன் கோயிலில் வைகாசித் திருவிழாவை முன்னிட்டு நேற்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக கைலாசநாதர், பிரசன்ன நாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. விழாவில் நெடுங்குடி சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுக்க தேர் முக்கிய வீதிகள் வழியாக சென்று நிலையை அடைந்தது.

News May 22, 2024

புதுக்கோட்டை அருகே மழை; மரங்கள் முறிந்தன

image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வந்தன. இந்நிலையில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதில் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. முறிந்த மரங்களை ஊராட்சி நிர்வாகங்கள் விரைந்து செயல்பட்டு அகற்றியதால் பொதுமக்கள் நன்றி கூறினார்கள். மேலும் தொடர்ந்து பெய்த இந்த மழையினால் கண்மாய்களில் நீர் நிரம்ப தொடங்கியுள்ளது.

News May 22, 2024

புதுக்கோட்டை அருகே மழை; மரங்கள் முறிந்தன

image

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வந்தன. இந்நிலையில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதில் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. முறிந்த மரங்களை ஊராட்சி நிர்வாகங்கள் விரைந்து செயல்பட்டு அகற்றியதால் பொதுமக்கள் நன்றி கூறினார்கள். மேலும் தொடர்ந்து பெய்த இந்த மழையினால் கண்மாய்களில் நீர் நிரம்ப தொடங்கியுள்ளது.

News May 21, 2024

புதுக்கோட்டையில் 10 செ.மீ மழைப்பதிவு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மே.20) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விராலிமலை பகுதியில் 10 செ.மீட்டரும், இலுப்பூர், காரையூர் ஆகிய பகுதிகளில் 8 செ.மீட்டரும் அன்னவாசல், குடிமியான்மலை ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டரும் ஆயிங்குடி, உடையாளிப்பட்டி ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும் ஆலங்குடியில் 4 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.

News May 21, 2024

புதுகை: ஹிட்டாச்சி பழுது பார்ப்பு 

image

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு சொந்தமான ஹிட்டாச்சி வாகனத்தினை பழுதுபார்க்கும் பணியினை பார்வையிட்டார். மாநகராட்சி துணை மேயர் மு.லியாகத் அலி அவர்கள் இந்நிலையில் ஒப்பந்ததாரர் விஜய் முருகேஷ் வெங்கடேஷ் ,மேஸ்திரி ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர். ஹிட்டாச்சி சரியான பின்பு தான் மாநகராட்சியில் உள்ள வரத்து வாரிகள் சரி செய்ய முடியும் என்பது குறிப்பிடதக்கது.

News May 21, 2024

புதுக்கோட்டை அருகே எதிர்பாராத விபத்து; மரணம் 

image

பொன்னமராவதி தாலுகா திருக்களம்பூரைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி துர்க்கா தேவி (35). சம்பவத்தன்று திருக்களம்பூரில் ஒரு நிச்சயதார்த்த விழாவிற்கு சென்ற போது எதிர்பாராவிதமாக அவரின் சேலை அங்கிருந்த ஜெனரேட்டரில் சிக்கியதில் உள்ளிழுக்கப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த பொன்னமராவதி போலிஸார் துர்க்காவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த துர்க்கா தேவிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

error: Content is protected !!