Pudukkottai

News March 30, 2025

ஆவுடையார்கோவில் ஆசிரியருக்கு திண்டுக்கல் விழாவில் விருது

image

ஆவுடையார்கோவில் ஒன்றியம் வேல்வரை நடுநிலைப் பள்ளியின் இடைநிலை ஆசிரியர் முருகன். இவரது கல்வி சேவையை பாராட்டி திண்டுக்கல்லில் உள்ள லீலா கலை மற்றும் விளையாட்டு குழுமத்தின் சார்பில் கல்வி சுடர் விருது நேற்று வழங்கப்பட்டது. விருது ஆசிரியர் சேவையை பாராட்டி மாநில அளவில் ஜேஆர்சி மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்ச்செல்வன் பரிந்துரையின் பெயரில் வழங்கப்பட்டது.

News March 30, 2025

கல்லுக்குத்தாம்பட்டியில் கிராம சபை கூட்டத்தில் ஆட்சியர் உரை

image

விராலிமலை ஊராட்சி ஒன்றியம், இராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம்பட்டியில், உலக தண்ணீர் தினத்தையொட்டி நேற்று (29.03.2025) நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்துகொண்டு உரையாற்றினார். உடன், மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன் அவர்கள், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) சா.மோகனசுந்தரம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளார்.

News March 29, 2025

புதுக்கோட்டை மாவட்ட இரவு நேர ரோந்து காவல் பணி

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (29.03.2025) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெற்றால் இந்த என்களுக்கு தொடர்புகொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.

News March 29, 2025

பயிர் விளைச்சலில் வெற்றி பெற்ற விவசாயிகளுக்கு பரிசுத்தொகை 

image

விராலிமலை ஊராட்சி ஒன்றியம், இராஜகிரி ஊராட்சி, கல்லுக்குத்தாம்பட்டியில், உலக தண்ணீர் தினத்தையொட்டி இன்று (29.03.2025) நடைபெற்ற சிறப்பு கிராமசபைக் கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் மு.அருணா கலந்துகொண்டார். இதில், வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான பயிர் விளைச்சல் போட்டியில் வெற்றிபெற்ற விவசாயிகளுக்கு பரிசு தொகையினை வழங்கினார்.

News March 29, 2025

புதுக்கோட்டை கடைசி மன்னரான ராஜராஜகோபால தொண்டைமான்

image

புதுக்கோட்டை சமஸ்தானத்தின், கடைசி மன்னர் ஸ்ரீபிரகதாம்பாதாஸ் ராஜகோபால தொண்டைமான் ஆவார். தொண்டைமான் பரம்பரையின் 9ஆவது மன்னராக 6 வயதில் பிரிட்டிஷ் அரசால் 1928இல் அரசராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னரான ராஜகோபால தொண்டைமான், 1928 முதல் 1948 வரை மன்னராக இருந்தார். 1948 மார்ச் 3ஆம் தேதி சமஸ்தானம் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. தெரியாதவர்களுக்கு SHARE பண்ணுங்க.

News March 29, 2025

சனி தோஷம் நீக்கும் எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோயில்

image

அறந்தாங்கியிலிருந்து 5 கி.மீ தூரத்திலுள்ளது எட்டியத்தளி அகஸ்தீஸ்வரர் கோயில். இது, சனி மற்றும் ராகு தோஷத்தை ஒரு சேர நீக்கும் தலம். இந்த கோயிலுக்கு சென்று வழிபட்டால், சனி தோஷமும், ராகு தோஷமும் நீங்கும். மேலும் ஜாதகத்தில் களத்தரன், செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் இங்கு வழிபட்டால் குறைகள் நீங்கி திருமண பாக்கியம் கிட்டும். இதை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க.

News March 29, 2025

புதுக்கோட்டையில் நீச்சல் கற்றுக் கொள்ள ஆசையா?

image

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில், புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டு அரங்கில் நீச்சல் பயிற்சி முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாம் 12 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. மேலும் விவரங்களுக்கு விளையாட்டு அரங்கை தொடர்பு கொள்ள கலெக்டர் அருணா அறிவுறுத்தியுள்ளார். உங்க வீட்டு குட்டீஸை சேர்த்து நீச்சல் கற்றுக் கொள்ள உதவுங்கள். நீச்சல் தெரியாத உங்கள் நண்பர்களுக்கு SHARE செய்து உதவுங்கள்.

News March 28, 2025

புதுக்கோட்டையில் சக்தி வாய்ந்த அம்மன்

image

புதுக்கோட்டை திருக்கோகர்ணம் பகுதியில் அமைந்துள்ள அரைக்காசு அம்மன் கோயில் மிக வாய்ந்த கோயில். இங்கு உள்ள அம்மனை வழிபட்டால், தொலைந்த பொருட்கள் மீண்டும் கை தேடி வரும் என்பது நம்பிக்கை. இது புதுக்கோட்டை சமஸ்தானத்தின் குலதெய்வமாக உள்ளது. இந்த கோயிலில் நீங்க வழிபாடு செய்து இருக்கீங்களா? இதை உங்க குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் SHARE பண்ணுங்க.

News March 28, 2025

உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அழைப்பு

image

ஆதிதிராவிடர் மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி புதுக்கோட்டை மாவட்ட முதன்மை கல்வி அலுவலக அருகில் உள்ள கூட்டரங்கில் நாளை 29ஆம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. அரசு பள்ளி தனியார் பள்ளி அரசு உதவி பெறும் பள்ளி 2025ஆம் ஆண்டு பயின்று வரும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்.

News March 28, 2025

புதுக்கோட்டை முத்துமாரியம்மன் கோயில் தோன்றிய வரலாறு

image

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் ஒரு பூசாரி மீது அருள் வந்து திருவப்பூர் கவிநாட்டுக் கண்மாய் கோட்டைக்கரையில் ஒரு ஈச்சந்தூரடியில் ஸ்ரீமுத்துமாரியம்மன் மண்ணில் புதைந்திருப்பதாகவும், அதனை தோண்டி எடுத்து பிரதிஷ்டை செய்து வழிபடுமாறு அருள்வாக்கு கூறியது. அதன்படி ஸ்ரீமுத்துமாரியம்மன் தோண்டி எடுக்கப்பட்டு இப்பொழுது ஆலயம் இருக்கும் இடத்தில் பச்சைக் கூடாரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டு வந்தனர்.SHARE பண்ணுங்க.

error: Content is protected !!