Pudukkottai

News April 3, 2024

புதுகை: நூறு சதவிகித வாக்குப் பதிவு

image

“புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவுக்கான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திருநங்கை வாக்காளர்களின் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி தொடங்கி வைத்தாா். இதில் வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

News April 2, 2024

புதுக்கோட்டை அருகே தேர்தல் புறக்கணிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரிமளம் ஒன்றியம், கல்லூர் ஊராட்சி, சுதந்திரமும் கிராம மக்கள் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். கிராம பகுதிகளில் பல வகையான அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், பேனர் வைத்து தேர்தலில் மக்கள் வாக்களிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

News April 2, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து;மரணம் 

image

கும்பக்குடியை சேர்ந்தவர் அன்புராஜ் இவர் தனியார் நர்சிங் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார். இந்தநிலையில் நேற்று நர்சிங் பள்ளியில் இருந்து திருச்சி- புதுக்கோட்டை சாலையில் உள்ள கடைக்கு டீ குடிக்க சைக்கிளில் சாலையை கடக்க முயன்றபோது சேலத்தில் இருந்து காரைக்குடியை நோக்கி
சரவணன் என்பவர் ஓட்டி சென்ற சரக்கு வேன் எதிர்பாராத விதமாக அன்புராஜ் மீது மோதியது. இதில் அன்புராஜ் பலியானார்.

News April 2, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து; தலை நசுங்கி மரணம்

image

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே சாலை விபத்தில் நேற்று ஒருவர் பலி அரிமளத்தில் மொபட் மற்றும் இருசக்கர வாகனம் மோதிக்கொண்ட விபத்தில் மொபட்டில் வந்த சத்திரம் பகுதியைச் சேர்ந்த சங்கர் (45). இவர் வாகன விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக தலை நசுங்கி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 2, 2024

புதுக்கோட்டை அருகே புனித செபஸ்தியார் தேர்த் திருவிழா!

image

கந்தர்வகோட்டை அருகே மங்கனூர் புனித செபஸ்தியார் ஆலய தேர்த் திருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தின் தேர்த் திருவிழா ஆண்டு தோறும் ஏப்ரல் மாதத்தில் 5 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டு விழாவின் தொடக்கமாக திருச்சிலுவை கொடியானது ஆலயத்தை சுற்றி முக்கிய வீதிகள் வழியாக இசை முழக்கத்துடன் எடுத்து வரப்பட்டு கொடியேற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து இன்று இரவு தேர்ப்பவனி நடைபெறுகிறது.

News April 1, 2024

சுயேட்சை வேட்பாளர் வாக்கு சேகரிப்பு

image

திருச்சி பாராளுமன்ற சுயேட்சை வேட்பாளரான S. தாமோதரன் இன்று புதுக்கோட்டை லட்சுமி நகரில் உள்ள அலுவலகத்தில் கேஸ் ஸ்டவ் சின்னத்தினை பொறுப்பாளர்கள் முன்னிலையில் அறிமுகப்படுத்தி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பெண்களுக்கும், இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்புகளை உருவாக்கி, இயற்கை வளங்கள் பாதுகாத்து காக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். இதில் தொகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

News April 1, 2024

புதுக்கோட்டையில் 11 பேர் கைது

image

புதுக்கோட்டை கணேஷ் நகர் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது மச்சுவாடி பகுதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து கும்பலாக சூதாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது .போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது அங்கு சூதாடிக் கொண்டிருந்த 11 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து ரூ.27 ஆயிரத்து 500 சீட்டுக்கட்டுகள் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது

News April 1, 2024

புதுக்கோட்டையில் காவல்துறை அணிவகுப்பு!

image

புதுக்கோட்டை பேருந்து நிலையத்தில் நேற்று நடைபெற்ற காவல்துறை அணிவகுப்பை நகரக்காவல் துணைக்கண்காணிப்பாளர் ராகவி தலைமை வகித்து தொடங்கி வைத்தார். மேலராஜவீதி வழியாக வந்த இந்த அணிவகுப்பு ஊர்வலம் நகர்மன்றத்தில் நிறைவடைந்தது. இதில் நகரக்காவல் நிலைய காவலர்கள், ஆயுதப்படை காவலர்கள் இதில் பங்கேற்றனர். இதே போல அறந்தாங்கியிலும் நேற்று காவல்துறை அணிவகுப்பு நடைபெற்றது.

News March 31, 2024

புதுகை: வியாபாரிக்கு கத்திக்குத்து.. 2 பேர் கைது! 

image

புதுகை அருகே சிதம்பரவிடுதி சேர்ந்தவர் கண்ணன் காய்கறி வியாபாரி. இவர் மோட்டார் சைக்கிளில் வந்தபோது, மர்ம நபர்கள் இருவர் முன் விரோதத்தில் வேறு ஒருவரை கத்தியால் குத்துவதற்கு பதிலாக அவ்வழியாக இருட்டில் வந்த கண்ணனை கத்தியால் குத்தியதில் அவர், படுகாயம் அடைந்தார். இதனையடுத்து போலீசார் கத்தியால் குத்திய ரமணன், மற்றும் ராஜீவ் ஆகிய இருவரையம் நேற்று போலீசார் கைது செய்தனர்.

News March 31, 2024

புதுகை: ஶ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழா

image

புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ 4ம் வீதி தென்புறம் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை விழாவை முன்னிட்டு இன்று (மார்ச்.31) நடைபெற்ற அன்னதான நிகழ்வினை புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா துவக்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாக்கத் அலி, நகர்மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.

error: Content is protected !!