India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.04) இரவு 10 மணி முதல் இன்று (அக்.05) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

அன்னவாசல் அருகே குளவாய்பட்டி குளக்கரை பகுதியில் அன்னவாசல் போலீசார் இன்று (அக்.04) ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டிப்பர் லாரியை சோதனை செய்த போது அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து டிப்பர் லாரியை பறிமுதல் செய்த போலீசார், பின்னங்குடிப்பட்டி மூர்த்தி, அன்னவாசல் மேட்டு தெருவை சேர்ந்த வேல்முருகன் ஆகிய இருவர் மீது வழக்குபதிவு செய்தனர்.

புதுகை மக்களே.. ஆட்சேபனை இல்லாத அரசு புறம்போக்கு நிலம், அரசு நன்செய் & புன்செய், பாறை, கரடு, கிராமநத்தம், உரிமையாளர் அடையாளம் காணப்படாத நிலத்தில் வசிப்போர் இலவச பட்டா பெறலாம். இதற்கு ஆண்டிற்கு 3 லட்சத்திற்கு கீழ் வருமானம் இருப்பின் கிராம நிர்வாக அலுவலரிடம் உரிய ஆவணங்களோடு விண்ணப்பத்தை அளிக்கலாம். இந்த சிறப்பு திட்டம் டிசம்பர் 2025 வரை மட்டுமே அமலில் இருக்கும். இதனை LIKE செய்து SHARE பண்ணுங்க!

நிலம் இல்லாத பெண்களுக்காவே ‘நன்னிலம் மகளிர் நில உடைமை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதில் பெண்கள் நிலம் வாங்க 50% மானியம் அல்லது அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் தமிழக அரசால் வழங்கப்படும். இதற்கு 100 சதவீதம் முத்திரைத்தாள் மற்றும் பதிவுக் கட்டணத்தில் விலக்களிக்கப்படுகிறது. விவரங்களுக்கு www.tahdco.com இணையதளத்தில் பார்க்கலாம் அல்லது புதுக்கோட்டை மாவட்ட தாட்கோ மேலாளரை அணுகவும். ஷேர் பண்ணுங்க

ஆவுடையார் கோவில் தாலுக்கா கரூரில் அறந்தாங்கி அரசு கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறை தலைவர் காளிதாஸ் குழுவினர் ஆய்வு மேற்கொண்டதில் 1800 ஆண்டுகள் பழமை வாய்ந்த அமர்ந்த நிலையில் புத்தர் சிலை கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் இது இலங்கை அனுராதபுரம், மகமெவுனா பூங்கா, பூவரசங்குளம் அபயக்கிரி விவாகரை போன்ற இடங்களில் உள்ள சிலை போல் ஒத்துள்ளது என்றும் இதில் செதுக்கப்பட்டுள்ள படைப்பு தத்துரூபமாக உள்ளதும் என்றனர்.

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளர் லட்சுமி (33) வீட்டில் துணிகளை அயன் செய்து கொண்டிருந்ததார். இந்நிலையில் திடீரென மின்சாரம் தாக்கியதில் லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதைடுத்து அவரது உடல் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் உடலுக்கு ஒரு ஆய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் புதுக்கோட்டை மாவட்ட காவல்துறையினரிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுகை மாவட்டத்தில் வயது முதிர்ந்தோர், மாற்றுத்திறனாளி இல்லத்திற்கு சென்று அரிசி சர்க்கரை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம் மாவட்டத்தில் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தி வருகிறது. மாவட்டத்தில் உள்ள 1060 நியாய விலை கடைகளை சேர்ந்த 27, 650 குடும்ப அட்டைகளுக்கு வரும் 5,6 தேதிகளில் இல்லம் தேடி ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

பொதுத்துறை நிறுவனமான இந்தியன் வங்கியில் 171 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: மத்திய அரசு
2. காலியிடங்கள்: 171
3. சம்பளம்: ரூ.64,000 – ரூ120000
4.. கல்வித் தகுதி: B.E / B.Tech /
5. கடைசி தேதி: 13.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<

திருமயம் அருகே உள்ள லேனா விளக்கு விநாயகர் கோவில் அருகே நாகராஜ் (20),முத்து மணி(31),பாண்டி அழகு (26) ஆகிய மூவரும் நேற்று (அக்.3) கஞ்சா பொருள் விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதனையடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த நமண சமுத்திரம் போலீசார் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்து 320 கிராம் மதிப்புள்ள கஞ்சா பொருள், ரூ.3300, ஆண்ட்ராய்டு மொபைல் 2-யும் பறிமுதல் செய்தனர்.

ஆலங்குடி வ.உ.சி.தெருவில் புதிதாக வீடு கட்டும் பணியில் கட்டிட மேஸ்திரி ரவிக்குமார்(42) ஈடுபட்டிருந்தார். வீட்டின் மேல் தளத்தில் சென்ட்ரிங் கம்பிகளை தூக்கிய போது அருகில் இருந்த ஒயர் மின்சார கம்பியில் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து ரவிக்குமார் படுகாயம் அடைந்தார். இதையடுத்து சகதொழிலாளர்கள் புதுகை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Sorry, no posts matched your criteria.