Pudukkottai

News May 7, 2025

புதுகை: 10th பாஸ் போதும்.. அரசு வேலை ரெடி

image

மத்திய அரசின் ஜிஎஸ்டி & சுங்க வரித்துறையில் காலியாக உள்ள Seaman, Greaser, Tradesman போன்ற 14 குரூப்-சி காலிபணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு ஊதியமாக ரூ.18000 முதல் ரூ.56900 வரை வழங்கப்படும். 10 th, ஐ.டி.ஐ முடித்த 18 – 25 வயதுக்குட்பட்ட நபர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவலுக்கு <>www.cbic.gov.in<<>> என்ற இணையத்தை பார்க்கவும். வேலை தேடும் நபர்களுக்கு இதை SHARE செய்யவும்!

News May 7, 2025

புதுகை: தரமற்ற உணவு குறித்து இனி எளிதாக புகார் அளிக்கலாம்

image

உணவகம், பேக்கரிகளில் உள்ள தரமற்ற உணவு குறித்து மக்கள் புகார் அளிக்க ‘TN FOOD SAFETY CONSUMER’ எனும் செயலியை அரசு வெளியிட்டுள்ளது. இந்த செயலியின் மூலமாக கலப்படம், தரமற்ற உணவு குறித்து டைப் ஏதும் செய்யமால் மிக எளிதாக நீங்கள் புகார் அளிக்கலாம். புகார் அளித்த 24 முதல் 48 மணி நேரத்தில் உணவு பாதுகாப்பு துறை மூலமாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இந்த தகவலை உங்க நண்பர்களுக்கு SHARE செய்யவும் !

News May 7, 2025

புதுக்கோட்டை: கருக்கலைப்பு மாத்திரை விற்ற கடைக்கு சீல்

image

ஹரியானாவில் இருந்து மணமேல்குடியிலுள்ள தனியார் மருந்துக் கடைக்கு 100 கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளதாக புதுகை மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேற்று அங்கு விரைந்த அதிகாரிகள் அந்த மருந்துக் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருந்துக் கடைக்கு சீல் வைத்தனர்.

News May 7, 2025

புதுக்கோட்டை: கருக்கலைப்பு மாத்திரை விற்ற கடைக்கு சீல்

image

ஹரியானாவில் இருந்து மணமேல்குடியிலுள்ள தனியார் மருந்துக் கடைக்கு 100 கருக்கலைப்பு மாத்திரைகள் வாங்கப்பட்டுள்ளதாக புதுகை மண்டல மருந்துக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து நேற்று அங்கு விரைந்த அதிகாரிகள் அந்த மருந்துக் கடையில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், சட்டவிரோதமாக கருக்கலைப்பு மாத்திரைகளை விற்பனை செய்தது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மருந்துக் கடைக்கு சீல் வைத்தனர்.

News May 7, 2025

புதுகை மாவட்ட காவல்துறை இரவு நேர ரோந்து பணி

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 30.04.2025 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள். பொதுமக்கள் இரவு நேர அவசர உதவிக்காக இரவு பணியில் இருக்கும் காவலர்களை தொடர்பு கொள்ளலாம் என புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது

News May 7, 2025

சித்தி மகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை

image

புதுக்கோட்டை பொன் நகரில் கடந்த 2021 ஆம் ஆண்டு 1 1/4 பவுன் தங்க நகைக்காக சொந்த சித்தி மகளான லோகப்பிரியா என்ற இளம் பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்தியும் இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்த பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் லட்சுமணன் என்ற சுரேஷுக்கு (32) தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

News May 7, 2025

சித்தி மகளை கொலை செய்தவருக்கு தூக்கு தண்டனை

image

புதுக்கோட்டை பொன் நகரில் கடந்த 2021 ஆம் ஆண்டு 1 1/4 பவுன் தங்க நகைக்காக சொந்த சித்தி மகளான லோகப்பிரியா என்ற இளம் பெண்ணை கொடூரமாக கத்தியால் குத்தியும் இரும்பு ராடால் தாக்கியும் கொலை செய்த பெருந்துறை கிராமத்தைச் சேர்ந்த அவரது அண்ணன் லட்சுமணன் என்ற சுரேஷுக்கு (32) தூக்கு தண்டனை விதித்து புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

News May 7, 2025

புதுக்கோட்டை: ரூ.48,000 சம்பளத்தில் BANK வேலை

image

மத்திய பொதுத்துறை நிறுவனமான யூனியன் வங்கியில் உதவி மேனேஜர் பதவிக்கான 500 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஏதேனும் பட்டப்படிப்புடன் கூடிய CA/CS/CMA முடித்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். மாத ஊதியமாக ரூ.48,480 முதல் ரூ.85,920 வரை வழங்கப்படும். 22 முதல் 30 வயதுக்குட்பட்டவர்கள் www.unionbankofindia.co.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம். பேங்க் வேலை தேடும் உங்க நண்பருக்கு SHARE செய்யவும்.

News May 7, 2025

மூடாத போர்கள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம்

image

இந்திய உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறு மற்றும் குழாய் கிணறுகளில் சிறு குழந்தைகள் விழுவதால் ஏற்படும் அபாயகரமான விபத்துகளை தடுப்பதற்காக கைவிடப்பட்ட ஆழ்துளை கிணறுகளை களிமண், மணலால் மூட வேண்டும். மூடாத போர்கள் குறித்த விவரங்களை பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம் என்று புதுகை மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News May 7, 2025

பயன்பாட்டில்லாத ஆழ்துளை கிணறுகள் ஆட்சியர் எச்சரிக்கை

image

புதுகை மாவட்டத்தில் ஆழ்துளை கிணறு அமைப்பதற்கு 15 நாட்கள் முன்பாக மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி ஊராட்சி நிர்வாகம், நீர்வளத்துறை, பொது சுகாதாரம் துறையில் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவிக்க வேண்டும். கிணற்றை சுற்றி இரும்பு தகட்டால் மூடவேண்டும், உரிமையாளர் முழு முகவரி இருத்தல் வேண்டும், பாதுகாப்பு தடுப்பு வேலி போட வேண்டும் என்றும் ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!