Pudukkottai

News April 9, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 வழக்குகள் பதிவு

image

மக்களவைத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்ட மாா்ச் 16 முதலே தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. 18 பறக்கும் படைகள், 18 நிலையான கண்காணிப்புக் குழுக்கள், 6 விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மாவட்டத்திலுள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் சுழற்சி அடிப்படையில் பணியில் உள்ளனா். தோ்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து இதுவரை 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தோ்தல் அலுவலர் கூறினார்.

News April 9, 2024

குடிநீா் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

image

புதுக்கோட்டை நகரில் 15 நாள்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படுவதை கண்டித்து திருக்கோகர்ணம் பகுதியில் பொதுமக்கள் காலிக் குடங்களுடன் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.புதுக்கோட்டை நகராட்சியில் சில நாட்களுக்கு ஒருமுறை குடிநீா் விநியோகம் செய்யப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் எழுந்து வருகின்றன. தற்போது இந்தப் பிரச்னை பல இடங்களில் ஏற்படுகிறது.

News April 8, 2024

புதுக்கோட்டை அருகே வாலிபரின் விபரீத செயல் 

image

சிங்கம்புணரி அருகே முறையூரை சேர்ந்தவர் கருப்பையா. கொத்தனாரான இவர், நேற்று விஷம் குடித்து புதுக்கோட்டை மாவட்டம், கல்லூரில் ராமையா என்பவர் தோட்டத்தில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் கொண்டுசெல்லும் வழியிலேயே கருப்பையா பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை

News April 8, 2024

புதுக்கோட்டை அருகே சரமாரி கத்திக்குத்து 

image

பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் எல்லைக்கோட்டை இன்று இளைஞருக்கு கத்திக்குத்து. இந்த கத்திக்குத்து சம்பவத்தில் உலகம்பட்டியை சேர்ந்த தீவுராஜ் (19) என்ற இளைஞர் காயமடைந்துள்ளார். அவரை மீட்டு அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மதுரையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News April 8, 2024

புதுக்கோட்டை:அலுவலர்களுக்கு தேர்தல் பணிப்பயிற்சி !

image

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடிகளில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான முதல்கட்ட தேர்தல் பணிப் பயிற்சியை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேற்று தொடங்கி வைத்தார். இதில் திருச்சி மாவட்ட வருவாய் அலுவலர் ர.ராஜலெட்சுமி, ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) எஸ்.வெங்கடாசலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் தங்கள் அஞ்சல் வாக்குகளை வாக்குப்பெட்டியில் செலுத்தினர்.

News April 7, 2024

புதுக்கோட்டை மாவட்டத்திற்கு மழையா?

image

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இந்நிலையில் நாளை 08.04.24 மற்றும் நாளை மறுநாள் 09.04.24 தென் தமிழக மாவட்டங்கள், வட தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

News April 7, 2024

புதுகை: தாயை அரிவாளால் தாக்கிய மகன் மீது வழக்கு

image

புதுகை, போசம்பட்டியை சேர்ந்தவர் மீனா இவரது மகன் வினோத்குமார் ஆகியோருக்கு இடையே நிலப்பிரச்சினை தொடர்பாக முன் விரோதம் இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த வினோத்குமார் மீனாவை அரிவாளால் தாக்கியதாக மீனா கே.புதுப்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வினோத்குமார் மீது
வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

News April 7, 2024

புதுகையில் வெடிகுண்டு சோதனை

image

மக்களவைத் தேர்தலையொட்டி பாதுகாப்பு பணிகளுக்காக ஏற்கெனவே மத்திய ஆயுதக் காவல் படை போலீஸாா் புதுக்கோட்டை வந்து பாதுகாப்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இதேபோல வெடிகுண்டு கண்டறியும் மற்றும் செயலிழக்கச் செய்யும் பிரிவு போலீஸாா் புதுக்கோட்டை வந்துள்ளனா். புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் மற்றும் ரயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்களில் அவா்கள் திடீா் சோதனை மேற்கொண்டனா்.

News April 7, 2024

புதுக்கோட்டை கோட்டை மாரியம்மன் திருவிழா

image

புதுக்கோட்டை போஸ் நகர் அருள் பாலஸ்ரீ கோட்டை மாரி அம்மன் திருவிழாவை முன்னிட்டு இன்று முகூர்த்தக்கால் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது.இவ்விழா வருகின்ற தமிழ் புத்தாண்டை முன்னிட்டு விழா நடைபெற உள்ளதால் இவ்விழாவில் 31 வது வார்டு கவுன்சிலர் சுமதி பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் காலையில் 5: 30 மணியளவில் முகூர்த்த பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

News April 7, 2024

விராலிமலை அருகே சாலை விபத்து: ஒருவர் பலி!

image

மதுரையைச் சேர்ந்த காஞ்சனா(60). இவர் தனது மகன் தினேஷ் உடன் நேற்று காரில் செங்கல்பட்டு சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தார். விராலிமலை அருகே வந்தபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை நடுவே தடுப்பு கட்டையில் மோதி பலத்த காயமடைந்த காஞ்சனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். தினேஷ் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து விராலிமலை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!