Pudukkottai

News October 8, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.07) இரவு 10 மணி முதல் இன்று (அக்.08) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News October 7, 2025

புதுக்கோட்டை: இது உங்க PHONE-ல இருக்கா?

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1.UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF
2.AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 7, 2025

புதுகை: மதுபோதையில் தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேற்பனை காட்டை சேர்ந்தவர் வல்லரசு (28). இவர் மேற்பனைக்காட்டில் கடந்த ஒரு வருடமாக வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் அவரது தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மது போதையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரில் கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 7, 2025

புதுகை: ரூ.300 கேஸ் மானியம் வர இதை செய்யுங்க!

image

புதுகை மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு <>கிளிக் <<>>செய்து மானியத்துக்கு பதிவு செய்யுங்க. உங்க கேஸ் நிறுவனத்தை தேர்ந்தெடுத்து பதிவு செய்யுங்க.. மாதம் ரூ.300 கேஸ் மானியம் உங்க வங்கி கணக்குல.. இதை எல்லோர்க்கும் SHARE பண்ணுங்க..

News October 7, 2025

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

புதுகை மாவட்டத்தில் 11.10.25 காலை 11 மணிக்கு மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சாலைகள் மற்றும் தெருக்கள் பெயர் மாற்றம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல் குறித்து விவாதிக்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News October 7, 2025

புதுகை: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

image

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுகை மாவட்ட மக்கள் 04322-222355 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

News October 7, 2025

புதுகை: தந்தை திட்டியதால் மகன் தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த மங்கனாம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் அவரது தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மது போதையில் மங்கணாம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அவரது தந்தை அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 7, 2025

புதுகை: காளை முட்டி சிறுவன் பரிதாப பலி!

image

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன் (17), இவர் தனது நண்பர்களுடன் ஜல்லிக்கட்டு காளை வாங்குவதற்காக ராஜாளிபட்டி அருகே பாப்பாபட்டியில் பரமசிவம் என்பவரின் ஜல்லிக்கட்டு காளையை பார்க்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜல்லிக்கட்டு கானை பிரவீனை முட்டி தள்ளியது. இதில் படுகாயமடைந்த பிரவீனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

News October 7, 2025

புதுகை: மதுக்கடைகளை மூட உத்தரவு

image

ஆலங்குடி, வடகாட்டில் முன்னாள் அமைச்சர் வெங்கடாஜலத்தின் 15வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாளை ஆலங்குடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மதுக்கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு ஆலங்குடி, புதுக்கோட்டை விடுதி, எம்.ராசியாமங்கலம், பாண்டிகுளம், கொத்தமங்கலம், ஆவணம், புள்ளான்விடுதி ஆகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் இயங்காது என எஸ்பி அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.

News October 7, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.06) இரவு 10 மணி முதல் இன்று (அக்.07) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!