India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை மக்களே, உங்க ஆண்டு வருமானம் 10 லட்சம் கீழ் இருந்தும் கேஸ் மானியம் வரலையா? எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியலையா? முதலில் Aadhaar எண்ணை உங்கள் பேங்க் கணக்கு மற்றும் கேஸ் கணக்குடன் இணைக்க வேண்டும். இங்கு <

புதுகை மாவட்டத்தில் 11.10.25 காலை 11 மணிக்கு மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சிகளும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சாலைகள் மற்றும் தெருக்கள் பெயர் மாற்றம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல் குறித்து விவாதிக்கப்படும் என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

சான்றிதழ்கள் வழங்குவது, நிலம் தொடர்பான புகார்களை பெறுவது, பட்டா, சிட்டா, அடங்கல் சான்றிதழ் வழங்குவது உள்ளிட்டவை வட்டாட்சியரின் (தாசில்தார்) முக்கிய பணிகளாகும். இவற்றை முறையாக செய்யமால் தாசில்தாரோ அல்லது அலுவலக ஊழியர் யாரவது உங்களிடம் லஞ்சம் கேட்டால், புதுகை மாவட்ட மக்கள் 04322-222355 என்ற எண்ணை தொடர்பு கொண்டு தயங்காமல் புகாரளிக்கலாம். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE செய்து உதவுங்க!

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த மங்கனாம்பட்டியை சேர்ந்தவர் மணிகண்டன் (27). இவர் அவரது தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மது போதையில் மங்கணாம்பட்டியில் உள்ள அவரது இல்லத்தில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து புதுக்கோட்டை காவல் நிலையத்தில் அவரது தந்தை அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் பிரவீன் (17), இவர் தனது நண்பர்களுடன் ஜல்லிக்கட்டு காளை வாங்குவதற்காக ராஜாளிபட்டி அருகே பாப்பாபட்டியில் பரமசிவம் என்பவரின் ஜல்லிக்கட்டு காளையை பார்க்க சென்றுள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஜல்லிக்கட்டு கானை பிரவீனை முட்டி தள்ளியது. இதில் படுகாயமடைந்த பிரவீனை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

ஆலங்குடி, வடகாட்டில் முன்னாள் அமைச்சர் வெங்கடாஜலத்தின் 15வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு நாளை ஆலங்குடி சுற்றுவட்டார பகுதியில் உள்ள மதுக்கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படாதவாறு ஆலங்குடி, புதுக்கோட்டை விடுதி, எம்.ராசியாமங்கலம், பாண்டிகுளம், கொத்தமங்கலம், ஆவணம், புள்ளான்விடுதி ஆகிய பகுதிகளில் உள்ள மதுக்கடைகள் இயங்காது என எஸ்பி அபிஷேக் குப்தா தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.06) இரவு 10 மணி முதல் இன்று (அக்.07) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

தற்போதைய டிஜிட்டல் யுகத்தில், செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. இத்தகைய சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800-419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

புதுகை மக்களே முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், ஒரு குடும்பம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு பெறலாம். காப்பீட்டு அட்டை பெற, உங்கள் பகுதியில் நடைபெறும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் குடும்ப உறுப்பினர்களின் விபரங்களோடு பதிவு செய்யலாம் (அ) ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கும் மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில் பதிவு செய்து பெறலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க.

மத்திய அரசின் BEL நிறுவனத்தில் உள்ள 610 Trainee Engineer காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு B.E/ B.Tech முடித்த 21-28 வயதுடையவர்கள் விண்ணப்பிக்கலாம். மாத சம்பளமாக ரூ.30,000 முதல் ரூ.40,000 வரை வழங்கப்படும். விருப்பமுள்ளவர்கள் <
Sorry, no posts matched your criteria.