Pudukkottai

News October 8, 2025

புதுக்கோட்டை: மின் தடையா? ஒரு Phone Call போதும்!

image

புதுக்கோட்டை மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News October 8, 2025

புதுக்கோட்டை: ரயில்வேயில் கொட்டிக் கிடக்கும் வேலை

image

இந்திய ரயில்வேயில் பல்வேறு பிரிவுகளில் 5,800 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. சம்பளம்: ரூ.25,500 – ரூ.35,400
3. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
4. வயது வரம்பு: 18-35 (SC/ST-40, OBC-38)
5.ஆரம்ப தேதி: 21.10.2025
6.கடைசி தேதி: 20.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>CLICK HERE<<>> . இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.

News October 8, 2025

புதுக்கோட்டை: மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் தமிழக அரசால் அறிவிக்கப்பட்டுள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். மேலும் அனைத்து அசல் சான்றுகளுடன் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பத்தை பெறலாம் என தெரிவித்துள்ளார். இத்தகவலை ஷேர் பண்ணுங்க.

News October 8, 2025

புதுக்கோட்டை: இனி வங்கி செல்ல தேவையில்லை!

image

உங்களது வங்கி கணக்கின் ACCOUNT BALANCE, STATEMENT, LOAN உள்ளிட்ட சேவைகளை வாட்ஸ்ஆப் வழியாக பெற முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா? SBI (90226-90226), கனரா வங்கி (90760-30001), இந்தியன் வங்கி (8754424242), இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (96777-11234) இதில் உங்களது வங்கியின் எண்ணை போனில் SAVE செய்து, ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், தகவல்கள் அனைத்தும் வாட்ஸ்ஆப் வாயிலாக அனுப்பி வைக்கப்படும். SHARE NOW!

News October 8, 2025

புதுக்கோட்டை: வழிகேட்ட முதியவருக்கு நேர்ந்த கொடுமை

image

தஞ்சை, நீடாமங்கலத்தைச் சேர்ந்த பிரபாகரன் (62) என்பவர் ஆதனக்கோட்டை அருகே உள்ள பெரம்பூர் வீரமாகாளியம்மன் கோயிலுக்கு வந்துள்ளார். அப்போது ஆதனக்கோட்டை அருகே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் கோயிலுக்கு வழி கேட்டபோது அந்த நபர் பிரபாகரனிடம் 5 பவுன் செயின், செல்போனை பறித்து கொண்டு தப்பிச் சென்றுவிட்டார். ஆதனக்கோட்டை இன்ஸ்பெக்டர் வெண்ணிலா தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு அந்த மர்ம நபரை தேடி வருகிறார்.

News October 8, 2025

புதுக்கோட்டை: வேன் மோதி விவசாயி பரிதாப பலி

image

ஆலங்குடி அடுத்த மூக்கம்பட்டியைச் சேர்ந்தவர் சங்கர் (45). விவசாயியான இவர் தனது மகளின் பூப்புனித நீராட்டு விழாவிற்கு பொருட்கள் வாங்க பைக்கில் புதுக்கோட்டை சென்றுள்ளார். அப்போது செம்பட்டிவிடுதி அருகே சென்ற போது அந்த வழியே அந்த சரக்கு வேன் பைக் மீது மோதியது. இதில் படுகாயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து செம்பட்டிவிடுதி போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

News October 8, 2025

புதுக்கோட்டை: மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

image

புதுகை புத்தகத் திருவிழாவின் ஒரு பகுதியாக வரும் 12-ம் தேதி புதுக்கோட்டை நகர் மன்றத்தில் சதுரங்க போட்டி நடைபெற உள்ளது. இதில் பங்கு பெற விரும்பும் பள்ளி மாணவர்கள் தங்கள் பெயர், வகுப்பு மற்றும் படிக்கும் பள்ளி பற்றிய விபரங்களை anguchess2298@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு (அ) 8608036535 என்ற whatsapp எண்ணுக்கு அனுப்பி 10.10.2025க்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

News October 8, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.07) இரவு 10 மணி முதல் இன்று (அக்.08) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News October 7, 2025

புதுக்கோட்டை: இது உங்க PHONE-ல இருக்கா?

image

ஆதார் முதல் அரசின் அனைத்து சேவைகள் வழங்கும் செயலிகள் போனில் உள்ளதா? இதை பதிவிறக்கம் செய்து அரசு அலுவலகங்களுக்கு இனி அலையாதீங்க
1.UMANG – ஆதார், கேஸ் முன்பதிவு, PF
2.AIS – வருமானவரித்துறை சேவை
3.DIGILOCKER – பிறப்பு, கல்வி சான்றிதழ்கள்
4.POSTINFO – போஸ்ட் ஆபிஸ் சேவை
5.BHIM UPI – பைசா செலவில்லமால் வங்கி பரிவர்த்தனை
6.M.Parivahan – வண்டி ஆவணம், டிரைவிங் லைசன்ஸ்
இதை மற்றவர்களுக்கு SHARE பண்ணுங்க!

News October 7, 2025

புதுகை: மதுபோதையில் தற்கொலை

image

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த மேற்பனை காட்டை சேர்ந்தவர் வல்லரசு (28). இவர் மேற்பனைக்காட்டில் கடந்த ஒரு வருடமாக வெல்டிங் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் நேற்று அவர் அவரது தந்தையுடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மது போதையில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது தந்தை அளித்த புகாரில் கீரமங்கலம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!