Pudukkottai

News April 18, 2024

காவல்துறையினருக்கு தபால் வாக்கு பதிவு இன்று செலுத்தினர்

image

சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் நாளை ஏப்ரல் 19 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்குப் செலுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் பொன்னமராவதி சேர்ந்த காவல்துறையினர் வாக்குச்சாவடி மையங்களில் நடக்கும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக அரசு மற்றும் காவல்துறையினர் தபால் வாக்குகள் செலுத்தப்பட்டது. அதில் காவல் துறையினர் தபால் ஓட்டு மூலம் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.

News April 18, 2024

புதுகை:ஒரே நாளில் ரூ.3 கோடி வரைக்கும் மதுபானங்கள் விற்பனை

image

நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்றுமுதல் தொடர்ந்து 3 நாட்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் 129 டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்பட்டு மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.இதேபோல ஓட்டல் பார்களும் இயங்கவில்லை. இந்த நிலையில தொடர் விடுமுறையின் காரணமாக மதுப்பிரியர்கள் பலர் தங்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில் ரூ.3 கோடி வரைக்கும் மதுபானங்கள் விற்பனையானது.

News April 17, 2024

புதுகையில் விழிப்புணர்வு

image

புதுக்கோட்டை அருகே சிப்காட் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழாவையொட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விழாவில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து விழிப்புணர்வு வழங்கினர்.

News April 17, 2024

 புதுக்கோட்டையில் இன்று பிரசாரம் நிறைவு

image

புதுக்கோட்டைக்கென தனியே தொகுதி இல்லாததால், முக்கியத் தலைவா்களின் பிரசாரம் இன்றி, குறிப்பிட்ட சில தலைவா்களின் பிரசாரத்துடன் புதன்கிழமை மாலையுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைகிறது.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ‘இந்தியா’ கூட்டணியின் மதிமுக வேட்பாளா் துரை வைகோவுக்காக அவரது தந்தையும் மதிமுக பொதுச் செயலருமான வைகோ கந்தா்வகோட்டை மற்றும் புதுக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்டாா்.

News April 17, 2024

 புதுக்கோட்டையில் இன்று பிரசாரம் நிறைவு

image

புதுக்கோட்டைக்கென தனியே தொகுதி இல்லாததால், முக்கியத் தலைவா்களின் பிரசாரம் இன்றி, குறிப்பிட்ட சில தலைவா்களின் பிரசாரத்துடன் புதன்கிழமை மாலையுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைகிறது.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ‘இந்தியா’ கூட்டணியின் மதிமுக வேட்பாளா் துரை வைகோவுக்காக அவரது தந்தையும் மதிமுக பொதுச் செயலருமான வைகோ கந்தா்வகோட்டை மற்றும் புதுக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்டாா்.

News April 17, 2024

புதுக்கோட்டை:குலுக்கல் முறையில் தேர்தெடுக்கும் பணி ஆய்வு

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று வாக்குச்சாவடி மையங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ள காவல்துறை பணியாளர்களை, கணினி குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கும் பணியினை இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர் (காவல்) தசத்ய வீர கட்டாரா , கரூர் பாராளுமன்ற தொகுதி திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதி தேர்தல் பார்வையாளர்
அமித் குமார் விஸ்வகர்மா
ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்

News April 16, 2024

புதுக்கோட்டை: சிக்கிய பண நோட்டுகள்

image

புதுக்கோட்டை உதவி கூட்டுறவு அலுவலர் பூங்காவனம் தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை சோதனையிட்ட போது, ரூ.75 ஆயிரத்து 880 இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. கார் டிரைவர் மேல்நிலைப்பட்டியை சேர்ந்த செல் வத்திடம் விசாரித்த போது, அந்த கார் அரிமளம் ஒன்றிய திமுக செயலாளர் இளையராஜா என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது.

News April 16, 2024

வடை சுட்ட புதுக்கோட்டை எம்எல்ஏ!

image

புதுகை மாநகர் பகுதிகளில் பல்வேறு வார்டுகளில் திமுக தலைமையான இந்தியா கூட்டணி திருச்சி பாராளுமன்ற வேட்பாளர் துரை வைகோவிற்கு இன்று (ஏப்ரல் 16)தீப்பெட்டி சின்னத்தில் புதுகை எம்எல்ஏ டாக்டர்.வை.முத்துராஜா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்.
அப்போது ஒரு தேநீர் கடையில் வடை சுட்டு நூதன முறையில் தீப்பெட்டி சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்.இந்த நிகழ்வில் திமுக கூட்டணி கட்சியினர் ,பொதுமக்கள் உடனிருந்தனர்.

News April 16, 2024

புதுக்கோட்டை:அதிமுகவினர் வாக்குகள் சேகரிப்பு!

image

சிவகங்கை எம்பி தொகுதி வேட்பாளர் அ.சேவியர்தாஸை ஆதரித்து திருமயம் பேரவைத் தொகுதியில் நேற்று பொன்னமராவதி ஒன்றியம் வேகுப்பட்டி ஊராட்சியில் அதிமுக மாணவரணி இணைச்செயலாளர் பெரி. முத்து தலைமையில் அதிமுகவினர் தீவிர வாக்குச்சேகரிப்பில் ஈடுபட்டனர். அப்போது எம்ஜிஆர் போன்று வேடமணிந்த ஒருவரை உடன் அழைத்து சென்றனர். இதில் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

News April 16, 2024

புதுக்கோட்டையில் வாரச்சந்தைகள் மாற்றம்

image

புதுக்கோட்டை வாரச்சந்தை தேதி மாற்றம் செய்யப்பட்டதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற 19-04-2024 வெள்ளிக்கிழமை அன்று
தமிழகத்தில் மக்களவை பொது தேர்தல் நடைபெறுவதை
முன்னிட்டு புதுக்கோட்டை நகராட்சி வாரச்சந்தை, ஆட்டு
சந்தை, பசு மாடு சந்தை, காய்கறி, மீன் சந்தை
18-04-2024 வியாழக்கிழமை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

error: Content is protected !!