India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை வருமான வரித்துறை அலுவலகம் சார்பில் நேற்று வருமானவரி விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இதில் வருமானவரி அலுவலர்கள் பி.சதீஷ்குமார், ஆர்.சுரேஷ்குமார் கலந்து கொண்டு முன்கூட்டியே வருமானவரி செலுத்துவதன் அவசியம், சலுகைகள் குறித்தும், இணையவழியில் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வது குறித்தும் விளக்கி கூறினர். இதில் வர்த்தக சங்க நிர்வாகிகள், வருமானவரித் துறையினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உரங்களை அதிக
விலைக்கு விற்றால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என வேளாண்மை இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் மொத்த விற்பனையாளர்கள் வெளி மாவட்டங்களுக்கு உரங்களை ஏற்றுமதி செய்யக்கூடாது என தெரிவித்தார்
திருச்சி மாவட்டம், மணப்பாறை
கே. உடையார்பட்டியை சேர்ந்தவர் அருள்ராஜ். இவர் விராலிமலை- மதுரை சாலை காணியாளம்பட்டி பிரிவு அருகே இரும்பு கட்டில், பீரோ தயாரிக்கும் தனியா தொழிற்சாலையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி பணியின் போது திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சகத்தொழிலாளர்கள் அவரை மீட்டு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த நிலையில் 12-ந்தேதி உயிரிழந்தார்
தமிழ்நாட்டில் எந்த சக்தியும் கலவரத்தைத் தூண்டுவதற்கு அனுமதிக்க மாட்டோம் என்றாா் மாநில சட்டத்துறை அமைச்சா் எஸ். ரகுபதி.
புதுக்கோட்டையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா்
காவிரி- குண்டாறு இணைப்புக் கால்வாய்த் திட்டத்துக்கு நிலமெடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. பல கிராமங்களில் பிரச்னைகள் வருவதால் மக்களை சமாதானப்படுத்தி, நிலமெடுக்கும் பணிகள் படிப்படியாக நடைபெற்று வருகின்றன.
புதுகை சட்டமன்ற தொகுதி கவிநாடு மேற்கு கவிநாடு கம்மாயில் சமூக ஆர்வலர்கள் ஏற்பாடு செய்த சீமைக்கருவேல மரங்களை அகற்றி மரக்கன்றுகள் நடும் விழாவிற்கு சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி மற்றும் சுற்றுசூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் தலைமை வகிக்க ஆட்சியர் மெர்சி ரம்யா முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட திராவிட முன்னேற்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கீரமங்கலம், துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுவதால் கீரமங்கலம், மேற்பனைக்காடு,சேந்தன்குடி, குளமங்கலம், வேம்பங்குடி. கொடிக்கரம்பை,காசிம்புதுப்பேட்டை, எல்.என்.புரம், செரியலூர், பனங்குளம், நகரம், ஆவணத்தான்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல்
மாலை 4 மணி வரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது
புதுகை எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவன கட்செவி அஞ்சல்(வாட்ஸ் ஆப்) குழு மூலம் ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்புச் சான்றிதழ் பயிற்சி தொடக்கவிழா நேற்று நடந்தது. இதில் ஆராய்ச்சி நிறுவன முதன்மை விஞ்ஞானி ஆர்.ராஜ்குமார் தலைமை வகித்தார். முன்னதாக ஓய்வு பெற்ற வேளாண் இணை இயக்குநர் எம்.பெரியசாமி பயிற்சியை தொடங்கி வைத்தார். கள ஆர்வலர் டி.விமலா வரவேற்றார். தொழில்நுட்ப அலுவலர் பிரிட்டோ நன்றி கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், ஊரகப் பகுதிகளில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. உடன் உதவி இயக்குநர் சீனிவாசன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
புதுக்கோட்டை நரிமேட்டிலுள்ள அன்னை சத்யா நினைவு அரசு குழந்தைகள் இல்லத்திலிருந்து குற்ற வழக்குகளில் தொடர்புடைய மூன்று சிறுமிகள் கடந்த மாதம் தப்பியோடினர். இதில் போலீசார் விசாரணை நடத்தி திருச்சி மற்றும் மதுரையிலிருந்து 2 சிறுமிகளை மீட்டு இல்லத்தில் சேர்த்தனர். இந்நிலையில் திருக்கோகர்ணம் போலிஸார் மற்றொரு சிறுமியையும் சென்னையிலிருந்து மீட்டு அன்னை சத்யா அரசு குழந்தைகள் இல்லத்தில் நேற்று சேர்த்தனர்.
புதுக்கோட்டை ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாமை
நேற்று ஆட்சியர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்து பேசியது- ‘மாவட்டத்தில் 13 ஒன்றியங்களில், 19 பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டு ஆதார் பதிவு மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இச்சேவை முற்றிலும் இலவசமாக வழங்கப்படுகிறது’ என்றார்.
Sorry, no posts matched your criteria.