India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்று வரும் கழிவுநீர் வாய்க்கால் சீரமைக்கும் பணியினை நேரில் சென்று நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் இன்று பார்வையிட்டார். இந்த நிகழ்வில் நகராட்சி பொறியாளர் முகமது இப்ராஹிம் மற்றும் ஒப்பந்தக்காரர் வாஹித் அலி மற்றும் பலர் உடன் இருந்தனர்.
நெடுங்குடியில் மாட்டுவண்டி எல்கைப்பந்தயம் .
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே உள்ள நெடுங்குடி பெரியநாயகி அம்மன் கோயில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி ரேஸ் நடந்தது. பந்தயத்தில் சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, மதுரை, தஞ்சாவூர், ராமநாதபுரம், தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து மாட்டு வண்டிகள் பங்கேற்றன . பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடத்தப்பட்டது.
தமிழில் முன்னணி Short News செயலியான Way2News-ல் உங்களை சுற்றி நடக்கும் நிகழ்வுகள், சம்பவங்கள், கோரிக்கைகளை செய்தியாக பதிவிட்டு நீங்களும் செய்தியாளராக மாறுங்கள். ஆர்வம் உள்ளவர்கள் 9642422022, என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளவும். செய்தியாளராக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
புதுக்கோட்டை, வெப்ப அலை எதிரொலியாக புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. வெப்பத் தாக்க நோய்களுக்கான 24 மணி நேர தீவிர சிகிச்சை பிரிவு தொடக்கம். கட்டிட தொழிலாளர்கள் வெயிலில் அதிக நேரம் பணியாற்றுவதை தவிர்க்க வேண்டும் என்று மருத்துவமனை முதல்வர் தெரிவித்துள்ளார்.
விராலிமலை- மணப்பாறை சாலையில் உள்ள வணிக நிறுவனங்களில் நேற்று உணவு பாதுகாப்புத்துறை மற்றும் சுகாதாரத்துறை அலுவலர்கள் இணைந்து காலாவதியான பொருள்களை கைப்பற்றி அழித்து அபராதம் விதித்தனர். புகையிலைப் பொருள்கள் குறித்தும் சோதனை மேற்கொண்டனர். இந்த ஆய்வில் கொடும்பாளூர் சுகாதார ஆய்வாளர் மாரிக்கண்ணு, செல்வராஜ், விமல், சதீஷ்குமார், சிவசங்கரன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.
புதுகை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் பள்ளிகள் தேர்ச்சி சதவீதம்- ஆதிதிராவிடர் நலப்பள்ளியில் 96.97 சதவீதம், முழுமையான அரசு உதவிபெறும் பள்ளிகளில் 94.73 சதவீதம், அரசுப் பள்ளிகளில் 91.80 சதவீதம், பகுதி அரசு உதவி பெறும் பள்ளிகளில் 98.14 சதவீதம், சுயநிதிப் பள்ளிகளில் 96.68 சதவீதம், சுயநிதி(மெட்ரிக்) பள்ளிகளில் 99.14 சதவீதம் பெற்றுள்ளன. மாநில அளவில் புதுகை மாவட்டம் 24 வது இடத்தில் உள்ளது.
புதுகை மாவட்டத்தில் 9 அரசுப் பள்ளிகள் பிளஸ் 2 தேர்வில் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.கீரமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,மாங்காடு அரசு மேல்நிலைப் பள்ளி,நெடுவாசல் அரசு மேல்நிலைப் பள்ளி,கரூர் அரசு மேல்நிலைப் பள்ளி,அரிமளம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி,மண்ணவேலம்பட்டி அரசு பள்ளி,மருதாந்தலை அரசு பள்ளி,நார்த்தாமலை அரசு மேல்நிலைப் பள்ளி,சந்தைப்பேட்டை அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி ஆகியன.
தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று வெளியானது இந்த ஆண்டு மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மொத்தம் 94.56 % இதில் புதுக்கோட்டையில் பயின்ற மாணவ, மாணவிகள் 93.79% தேர்ச்சி பெற்றுள்ளனர். புதுக்கோட்டையில் அரசு பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் அதிக தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்தாண்டும் மாணவிகளே அதிகம் தேர்ச்சியும் அதிக மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.
ஆலங்குடி அருகே உள்ள கல்லாலங்குடி பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கல்லாலங்குடி ஐ.டி காலணியை சேர்ந்த ஸ்ரீதர் என்பவர் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் சுத்தி சுற்றித்திரிந்தார். இதை பார்த்த போலீசார் அவரை மடக்கி பிடித்து கைது செய்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
பொன்னமராவதி ஆவுடையநாயகி சமேத சோழீஸ்வரர் கோயிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. முன்னதாக கோயில் முன்பு உள்ள நந்திக்கு பால், பழம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான, அபிஷேகங்கள் செய்யப்பட்டு
சிறப்பு அலங்காரம், ஆராதனை மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதைப்போன்று வேந்தன்பட்டி நெய்நந்தீஸ்வரர் , திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர் கோயில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
Sorry, no posts matched your criteria.