Pudukkottai

News May 30, 2024

புதுக்கோட்டை:குடிநீர் குழாயில் உடைப்பு;மேயர் ஆய்வு

image

புதுக்கோட்டை மாநகராட்சி மச்சுவாடி தரை நீர்தேக்க தொட்டிக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டதை சரி செய்யும் பணியினை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் நேற்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, பணியை விரைந்து முடிக்குமாறு கேட்டுக் கொண்டார். இதில் மாமன்ற உறுப்பினர்கள் செந்தாமரை பாலு, பால்ராஜ் பொறியாளர் முகமது இப்ராகிம் உடனிருந்தனர்.

News May 29, 2024

குளிக்க சென்ற மாணவர் நீரில் மூழ்கி பலி!

image

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை செட்டியார் குளத்தில் நேற்று மதியம் திருச்சி தனியார் கல்லூரியில் 2 ஆம் ஆண்டு படித்து வரும் கல்லாக்கோட்டை பீர்முகமது மகன் நவ்பல் (19) குளிப்பதற்காக சென்றார். நீச்சல் தெரியாத அவர் திடீரென்று நீரில் மூழ்கினார். இதுகுறித்து தகவலின் பேரில் கந்தர்வகோட்டை போலீசார் உயிரிழந்த நவ்பல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 29, 2024

புதுக்கோட்டை அருகே 5 பேர் கைது

image

அன்னவாசல் மேட்டுத்தெருவில் பொது இடத்தில் நேற்று சூதாட்டம் விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் சத்யாதேவி உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது அப்பகுதியில் சூதாட்டம் விளையாடி கொண்டிருந்த மேட்டுத்தெருவை சேர்ந்த குமார், நேரு, தேவா, மற்றும் இந்திரா காலணியை சேர்ந்த சக்கரவர்த்தி, மாணிக்கம் ஆகிய 5- பேரை போலீசார் கைது செய்தனர்

News May 29, 2024

புதுக்கோட்டை: துறை அலுவலர்களுடனான கூட்டம்!

image

புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்தில் நேற்று நடைபெற்ற அனைத்து துறை அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமை வகித்தார்.அப்போது அவர் மாவட்டத்திலுள்ள 497 ஊராட்சிகளிலும் 18 முக்கிய அரசுத்துறைகள் ஒன்றிணைந்து மக்களின் அடிப்படைதேவைகளான குடிநீர்,சாலை,மின்சாரம் மற்றும் சுகாதாரப்பணிகளை தேக்கமின்றி நிறைவேற்ற வேண்டும் என்றார்.இதில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்

News May 28, 2024

புதுகையில் வளர்ச்சி குறியீடுகள் குறித்த கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், ஊராட்சிகளில் பல்வேறு வளர்ச்சி குறியீடுகள் தொடர்பாக, அனைத்துத்துறை
அரசு அலுவலர்களுடனான கலந்தாய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சிரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு திட்ட இயக்குநர் செந்தில்வடிவு, உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

News May 28, 2024

புதுகையில் பள்ளி திறப்பதற்கான கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி திறப்பதற்கான முன்னேற்பாடு குறித்த தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம், முதன்மைக்கல்வி அலுவலகத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மா.மஞ்சுளா தலைமையில் இன்று நடந்தது. இதில் வருகிற ஜூன் 6-ந் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதையொட்டி பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல் முறைகளை பின்பற்றி அதற்கான முன்னேற்பாடு பணிகளை அனைத்து தலைமை ஆசிரியர்களும் சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.

News May 28, 2024

புதுக்கோட்டை அற்புதமான சித்தன்னவாசல் ஓவியங்கள்!

image

புதுக்கோட்டையில் சித்தன்னவாசல் என்ற கிராமத்தில் உள்ளது பிரபல குகை ஓவியங்கள். சமணர் காலத்து ஓவியங்களான இவை கி.பி 7-8 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. குன்றுகளால் சூழப்பட்ட சித்தன்னவாசல் ஓவியங்கள், சமணர்களால் மூலிகையால் தயாரிக்கப்பட்ட வர்ணங்களை கொண்டு வரையப்பட்டவை. இதன் அருகிலேயே சமணர் படுக்கைகள், மற்றும் தமிழ் கல்வெட்டுகளும் காணப்படுகின்றன.1990களில் இது செயற்கை வண்ணத்தால் புதுப்பிக்கப்பட்டது.

News May 28, 2024

புதுகை அருகே 80 சவரன் திருட்டு!

image

புதுக்கோட்டையில் மாலையீடு தேவாலயத்தின் பாதிரியாராக ஜான்தேவசகாயம் என்பவர் இருந்து வருகிறார். இவரது மனைவி அரசு உதவி பெறும் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர்கள் வெளியூரில் இருந்து இன்று காலை வீடு திரும்பிய நிலையில், மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 80 சவரன் நகைகள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.இது குறித்து புதுக்கோட்டை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

News May 28, 2024

புதுகை மயான பகுதியை சீரமைக்கும் பணி ஆய்வு

image

புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட நகராட்சி பகுதி போஸ் நகர் திருக்கட்டளை சாலையில் அமைந்துள்ள பூத உடல் நல்லடக்கம் செய்யும் மயான பகுதியை சீரமைக்கும் பணி துவங்கியுள்ளது. இந்த பணிகளை புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா மற்றும் புதுகை நகராட்சி தலைவர் திலகவதி செந்தில் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த நிகழ்வில் நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

News May 28, 2024

புதுக்கோட்டை அருகே நண்டு விலை குறைவு

image

கடல் உணவில் நண்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவாக உள்ளது. இந்நிலையில், மணமேல்குடி மீன் மார்க்கெட்டில் கடந்த 2 மாதமாக ஒரு கிலோ நண்டு ரூ.500-க்கு விற்கப்பட்டு வந்தது. இந்நிலையில் நாட்டுப்படகு மீனவர் வலையில் சிறிய நண்டு பெரிய நண்டு என ஏராளமான நண்டுகள் கிடைப்பதால் மார்கெட்டில் நேற்று நண்டு ஒரு கிலோ ரூ.350க்கு விற்பனையானது.இதனால் நண்டு அதிகமான
நண்டுகளை வாங்கி செல்கின்றனர்.

error: Content is protected !!