Pudukkottai

News October 10, 2025

புதுக்கோட்டை மக்களுக்கு கலெக்டரின் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 489 கிராம ஊராட்சியிலும் நாளை (அக்.,11) காலை 11 மணிக்கு கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. இதில் சாலைகள் மற்றும் தெரு பெயர் மாற்றம், கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சி தணிக்கை அறிக்கை ஊரகப் பகுதிகளில் மழைநீர் சேமிப்பு அமைப்புகளை ஏற்படுத்துதல் குறித்து விவாதிக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

News October 10, 2025

புதுக்கோட்டை:  இரவு நேர ரோந்து காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் (அக்.9) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை
இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனைமற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

News October 9, 2025

புதுகை: இதை USE பண்றீங்களா? கவனம்!

image

புதுகை மக்களே இன்றைய டிஜிட்டல் காலத்தில் செல்போன் எண் மூலமாக மேற்கொள்ளப்படும் UPI பண பரிவர்த்தனைகள் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்த சூழலில் உங்களது செல்போனில் இருந்து யாருக்காவது தவறுதலாக பணத்தை அனுப்பிவிட்டால் பதற வேண்டாம். Google Pay (1800 419-0157), PhonePe (080-68727374), Paytm (0120-4456-456) ஆகிய எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால், உங்கள் பணம் மீட்டு தரப்படும். SHARE பண்ணுங்க!

News October 9, 2025

புதுக்கோட்டை: போஸ்ட் ஆபீஸ் வங்கியில் வேலை!

image

இந்திய அஞ்சல் வங்கியில் (IPPB) 348 Executive காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
1. வகை: மத்திய அரசு வேலை
2. கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு டிகிரி
3. வயது வரம்பு: 20-35
4. சம்பளம்: ரூ.30,000
5. கடைசி தேதி: 29.10.2025
6. ஆன்லைனில் விண்ணப்பிக்க: <>இங்கே கிளிக் செய்யவும்<<>>. ஷேர் பண்ணுங்க!

News October 9, 2025

புதுக்கோட்டை: ஊர்க்காவல் படை வேலை அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்ட ஊர்க்காவல் படையில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. விருப்பமுள்ளவர்கள் அக்.8 முதல் 13-ம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்விச்சான்றிதழ்களின் அசல் மற்றும் நகலுடன் புதுகை ஊர்க்காவல் படை அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் ஷர்மா தெரிவித்துள்ளார். இத்தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News October 9, 2025

புதுக்கோட்டை: மாதம் ரூ.8000 – ஆட்சியர் அறிவிப்பு

image

தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் அன்னைத் தமிழுக்கு தொண்டாற்றும் அகவை முதிர்ந்த தமிழறிஞர்களுக்கு வழங்கப்படும் மாதாந்தர உதவித்தொகை திட்டத்தின்கீழ், தமிழறிஞர்களுக்கு மாதம் ரூ.7,500 உதவித்தொகையும், ரூ.500 மருத்துவப் படியும் வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை tamilvalarchithurai.org/agavai என்ற இணையத்தில் பதிவேற்றம் செய்ய மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News October 9, 2025

புதுக்கோட்டை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு…

image

புதுக்கோட்டை மாவட்ட மக்களே உங்கள் பகுதி ரேஷன் கடைகளில் பொருட்கள் சரியாக வழங்காமல் இருப்பது, தரமில்லாத பொருட்கள் வழங்குவது, பணியாளர்கள் நேரத்திற்கு வராமல் இருப்பது, பொதுமக்களிடம் முறையாக நடந்துகொள்ளாமல் இருப்பது போன்ற பிரச்சனைகள் உள்ளதா? அப்படியென்றால் உடனே 1967 அல்லது 1800-425-5901 என்ற எண்ணை தொடர்பு கொண்டு உங்களால் புகார் அளிக்க முடியும். இந்த தகவலை மறக்காமல் மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News October 9, 2025

புதுக்கோட்டை: கார் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்

image

புதுக்கோட்டை மாவட்டம் லேனா விளக்கிலிருந்து புதுக்கோட்டைக்கு ராஜலிங்கம் (45) பைக்கில் சென்றுள்ளார். அப்போது, நமணசமுத்திரம் அருகே உள்ள கம்மஞ்செட்டி சத்திரம் சாலையில் அவருக்கு பின்னால் காரை ஓட்டி வந்த திருநாகேஸ்வரன் (31) மோதியதில் ராஜலிங்கத்திற்கு பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது மனைவி அளித்த புகாரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News October 9, 2025

மாற்றுத்திறனாளிகளுக்கு விளையாட்டு போட்டி

image

புதுகை மாவட்ட விளையாட்டு திடலில் வரும் அக்.,15-ம் தேதி உலக மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு விளையாட்டு போட்டி நடைபெற உள்ளது. இதில் வெற்றி பெறுபவர்கள் 27.10.2025 அன்று சென்னையில் நடைபெற உள்ள மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வார்கள். 12 முதல் 17 வயது ஓட்டப்பந்தயம், குண்டறிதல், வட்டுத்தட்டு எரிதல், நாற்காலி ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடைபெற உள்ளது என கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.

News October 8, 2025

புதுக்கோட்டை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (அக்.08) இரவு 10 மணி முதல் இன்று (அக்.09) காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!