Pudukkottai

News November 24, 2024

புதுக்கோட்டையில் நாளை மின்தடை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கீழ்கண்ட துணை மின் நிலையங்களில் நாளை (நவ.25) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி ஆதனக்கோட்டை, கந்தர்வகோட்டை எக்ஸ்பிரஸ், ஆதனக்கோட்டை முழுப் பகுதியும், புதுப்பட்டி முழுப் பகுதியும், பழையகோட்டை முழு பகுதி மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

News November 24, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு

image

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!

News November 23, 2024

அரசு பேருந்து – இருசக்கர வாகனம் மோதி விபத்து இளைஞர் பலி

image

திருமயம் அருகே உள்ள காட்டுபாவா பள்ளிவாசலில் புதுக்கோட்டைக்கு சென்று கொண்டிருந்த அரசு பேருந்து, எதிரே இருசக்கர வாகனத்தில் புதுக்கோட்டையில் இருந்து வந்து கொண்டிருந்த ஷாஜகான் என்ற இளைஞர் மீது மோதியதில் ஷாஜகான் சம்பவ இடத்திலேயே பலியானார். தகவலின் பேரில் விரைந்து வந்த திருமயம் காவல்துறையினர் விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 23, 2024

முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வழக்கு ஒத்திவைப்பு

image

விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் சி.விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்தபோது ரூ.35.79 கோடிக்கு சொத்து சேர்த்ததாக ஊழல் மற்றும் கண்காணிப்பு போலீசாரால் தொடரப்பட்ட வழக்கு நேற்று மாவட்ட சார்பு நீதிமன்ற நீதிபதி ஆர்.கிரிஜா ராணி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இருதரப்பிலும் வழக்குரைஞர்கள் இன்று ஆஜராகி வாதாடிய நிலையில் நீதிபதி வழக்கு விசாரணையை டிசம்பர் 18 க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

News November 23, 2024

அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும், கிராம சபை கூட்டங்கள் இன்று காலை 11 மணிக்கு நடைபெறவுள்ளன. இக்கிராம சபை கூட்டங்களில், கிராம ஊராட்சியில் சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை சிறப்பித்தல், மகளிர் சுயஉதவிக் குழுக்களை கவுரவித்தல், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவாதிக்கப்படவுள்ளன. பொதுமக்கள் இதில் கலந்து கொண்டு பயனடையுங்கள். ஷேர் செய்யுங்கள்

News November 23, 2024

புதுகை: ஆட்சியர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு

image

புதுகை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று காலை 11.00 மணியளவில் வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். வாராப்பூர் ஊராட்சி பொதுமக்கள் அப்பகுதியில் தேவையான அடிப்படை பிரச்சனைகள் குறித்து கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News November 22, 2024

புதுகை: ஆட்சியர் கிராம சபை கூட்டத்தில் பங்கேற்பு

image

புதுகை மாவட்ட ஆட்சித்தலைவர்  23.11.2024 சனிக்கிழமையன்று காலை 11.00 மணியளவில், ஒன்றியம், வாராப்பூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். வாராப்பூர் ஊராட்சி பொதுமக்கள் அப்பகுதியில் தேவையான அடிப்படை பிரச்சனைகள் குறித்து கலந்து கொள்ள மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

News November 22, 2024

புதுக்கோட்டையில் இன்று வேலைவாய்ப்பு முகாம்

image

புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. இதில் தகுதியுடைய 18 முதல் 35 வயதிற்குட்பட்ட வேலைதேடும் படித்த இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தின் வாயிலாக பதிவு செய்து பயன்பெறலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

News November 22, 2024

சிறுமிக்கு தாலி கட்டி பாலியல் வன்கொடுமை

image

விராலிமலை பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியிடம் அதே பகுதியை சேர்ந்த கரிகாலன் யுவபிரசாந்த் (21) என்பவர் பழகி தனது வீட்டிற்கு அழைத்து சென்று தாலிகட்டி, பின்னர் சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் யுவபிரசாந்த் மீது இலுப்பூர் மகளீர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News November 21, 2024

டெங்கு காய்ச்சலால் 7 பேர் அனுமதி

image

புதுக்கோட்டை மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வரும் நிலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி கிடக்கும் நிலையில் இன்று புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 7 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.  டெங்கு காய்ச்சலால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் அதற்கான நடவடிக்கையை எடுத்து வருவதோடு பொதுமக்கள் நோயை தடுக்க ஒத்துழைப்பு நல்குமாறு தெரிவித்துள்ளது. 

error: Content is protected !!