India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வந்தன. இந்நிலையில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதில் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. முறிந்த மரங்களை ஊராட்சி நிர்வாகங்கள் விரைந்து செயல்பட்டு அகற்றியதால் பொதுமக்கள் நன்றி கூறினார்கள். மேலும் தொடர்ந்து பெய்த இந்த மழையினால் கண்மாய்களில் நீர் நிரம்ப தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் பகுதியில் கடந்த சில நாட்களாக லேசான மழை பெய்து வந்தன. இந்நிலையில் நேற்று மாலை சூறைக்காற்றுடன் மிதமான மழை பெய்தது. இதில் ஒரு சில இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன. முறிந்த மரங்களை ஊராட்சி நிர்வாகங்கள் விரைந்து செயல்பட்டு அகற்றியதால் பொதுமக்கள் நன்றி கூறினார்கள். மேலும் தொடர்ந்து பெய்த இந்த மழையினால் கண்மாய்களில் நீர் நிரம்ப தொடங்கியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மே.20) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, விராலிமலை பகுதியில் 10 செ.மீட்டரும், இலுப்பூர், காரையூர் ஆகிய பகுதிகளில் 8 செ.மீட்டரும் அன்னவாசல், குடிமியான்மலை ஆகிய பகுதிகளில் 7 செ.மீட்டரும் ஆயிங்குடி, உடையாளிப்பட்டி ஆகிய பகுதிகளில் 5 செ.மீட்டரும் ஆலங்குடியில் 4 செ.மீட்டரும் மழைப்பொழிவு பதிவானது.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு சொந்தமான ஹிட்டாச்சி வாகனத்தினை பழுதுபார்க்கும் பணியினை பார்வையிட்டார். மாநகராட்சி துணை மேயர் மு.லியாகத் அலி அவர்கள் இந்நிலையில் ஒப்பந்ததாரர் விஜய் முருகேஷ் வெங்கடேஷ் ,மேஸ்திரி ஆறுமுகம் ஆகியோர் உடன் இருந்தனர். ஹிட்டாச்சி சரியான பின்பு தான் மாநகராட்சியில் உள்ள வரத்து வாரிகள் சரி செய்ய முடியும் என்பது குறிப்பிடதக்கது.
பொன்னமராவதி தாலுகா திருக்களம்பூரைச் சேர்ந்த ராஜா என்பவரது மனைவி துர்க்கா தேவி (35). சம்பவத்தன்று திருக்களம்பூரில் ஒரு நிச்சயதார்த்த விழாவிற்கு சென்ற போது எதிர்பாராவிதமாக அவரின் சேலை அங்கிருந்த ஜெனரேட்டரில் சிக்கியதில் உள்ளிழுக்கப்பட்டு அதே இடத்தில் உயிரிழந்தார். தகவலறிந்த பொன்னமராவதி போலிஸார் துர்க்காவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இறந்த துர்க்கா தேவிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக திருத்தி அமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது.இதில் ஊரகப் பகுதிகள் பேரூராட்சிகள் நகராட்சி பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் கூட்ட அரங்கில் சீமை கருவேல மரங்களை அகற்றுவது தொடர்பாக திருத்தி அமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது.இதில் ஊரகப் பகுதிகள் பேரூராட்சிகள் நகராட்சி பகுதிகள் மற்றும் நெடுஞ்சாலை பகுதியில் உள்ள சீமை கருவேல மரங்களை உடனடியாக வெட்டி அப்புறப்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (மே.21) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுகையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கி.மீ முதல் 40 கி.மீ வரை) கனமழை பதிவாகக் கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (மே.19) மழைப்பொழிவான அளவின் விவரத்தை சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, திருமயம் பகுதியில் 8 செ.மீட்டரும், பொன் அமராவதி, கரம்பக்குடி, அன்னவாசல், பெருங்களூர், வம்பன் ஆகிய பகுதிகளில் 2செ.மீட்டரும் மழைப்பதிவாகியிருந்தது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (மே.20) மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கனமழைக்கு வாய்ப்புள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
Sorry, no posts matched your criteria.