Pudukkottai

News June 9, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

புதுக்கோட்டை வண்டிப்பேட்டையை சேர்ந்தவர் சரவணன். இவர் நேற்று தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது கலியமூர்த்தி என்பவர் தனது மோட்டார் சைக்கிளில் ரைஸ்மில் பஸ்நிறுத்தம் அருகே வந்த போது 2 மோட்டார் சைக்கிள்களும் நேருக்கு நேர் மோதியது. இதில் கலியமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். சரவணன் படுகாயமடைந்தார். இதுகுறித்து செம்பட்டிவிடுதி
போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News June 8, 2024

புதுகை: கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா விடுத்துள்ள அறிவிப்பில் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தேசிய கால்நடை நோய்த்தடுப்பு திட்டத்தின்கீழ் 5 வது சுற்று கோமாரி நோய் தடுப்பூசி 10.06.2024 முதல் 10.07.2024 வரை அனைத்து கிராமங்களிலும் போடப்பட உள்ளதால் கால்நடை வளர்ப்போர் முகாம் நடைபெறும். இடங்களுக்கு தவறாமல் தங்கள் கால்நடைகளை கொண்டு வந்து தடுப்பூசி போட்டு பயன் பெறலாம். என அந்த அறிவிப்பில் கூறியுள்ளார்.

News June 8, 2024

புதுகையில் அடுத்த 2 மணி நேரத்தில் மழை

image

இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், “தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன்படி, புதுகை உள்ளிட்ட 18 மாவட்டங்களுக்கு இன்று இரவு 7 மணி வரையும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

News June 8, 2024

புதுகை: சீமைக் கருவேல மரங்களை அகற்ற முடிவு!

image

புதுக்கோட்டை, காரைக்குடி நெடுஞ்சாலையிலுள்ள கவிநாடு கண்மாயில் மாவட்ட சீமைக் கருவேல மரங்களை அகற்றும் தொடர் நடவடிக்கையின் ஒரு பகுதியாக 548 சீமைக் கருவேல மரங்களை அகற்ற ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் நேற்று நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதில் மாவட்ட கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல், வருவாய் அலுவலர் ஆர்.ரம்யாதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

News June 8, 2024

புதுக்கோட்டை:ஊர் காவல் படையில் சேர விண்ணப்பிக்கலாம்

image

கடற்கரையோர காவல் நிலைய ஊர் காவல் படை பணிகளுக்கு மீனவ இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது இதற்கான விண்ணப்பங்களை வருகின்ற 10ம் தேதி முதல் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்திலிருந்து அருகே உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வருகின்ற 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதிக்குள் காலை 10 மணி முதல் 5 மணி வரை கல்விச் சான்றிதழ்கள் அசல் மட்டும் நகலுடன் நேரில் வருமாறு புதுக்கோட்டை எஸ்பி செய்தி வெளியீடு.

News June 8, 2024

புதுக்கோட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் முடிந்து தேர்தல் நடத்தை விதிகள் திரும்ப பெறப்பட்டுள்ளன. எனவே மாவட்டத்தில் அனைத்து அரசு நிகழ்ச்சிகள், குறைகேட்பு கூட்டங்கள் வழக்கம்போல நடைபெறும். வருகின்ற திங்கள்கிழமை (ஜூன் 10) முதல் மக்கள் குறைகேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் நேரடியாக ஆட்சியரை சந்தித்து தங்கள் குறைகளை தெரிவிக்கலாம். இவ்வாறு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

புதுக்கோட்டை அலுவலகத்தில் சந்திப்பு கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் விதிமுறைகள் தளர்ந்து அரசு அதிகாரிகளால் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறக்கப்பட்ட நிலையில், புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா பொதுமக்கள் மற்றும் திமுக நிர்வாகிகளை சந்தித்து கூட்டம் நடத்தினர்.

News June 7, 2024

புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

image

புதுகையில் சுற்றுச்சூழல் தினத்தையொட்டி தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எம்எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், அறிவியல் இயக்கத்தின் துணைத்தலைவர் சதாசிவம் தலைமையில், நேற்று விழிப்புணர்வு பிரச்சாரத்தில், நகராட்சி 26 வது வார்டு பகுதியில் வீடு வீடாக சென்று துண்டு பிரசுரங்கள் வழங்கினர். கருத்தரங்கில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கத்தின் தலைவர் தனபதி , முதன்மை விஞ்ஞானி ராஜ்குமார் ஆகியோர் பேசினர்.

News June 7, 2024

புதுக்கோட்டை அருகே மக்கள் தொடர்பு முகாம்

image

புதுக்கோட்டை வருவாய்க் கோட்டம், திருமயம் வட்டம், கோட்டூர் சரகம் லெம்பலக்குடி
கிராமத்தில் வரும் 12 ஆம் தேதி புதன்கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் மக்கள் தொடர்பு முகாம் நடக்கிறது. இதனால் 7 ஆம் தேதி இன்று முதல் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான முன் மனுக்களை லெம்பலக்குடி கிராம சேவை மையத்தில் அளித்து பயன்பெறலாம். இத்தகவலை ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News June 7, 2024

புதுக்கோட்டையில் ஆலோசனை கூட்டம்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்படும் தொகுதி IV தேர்வு நடைபெற உள்ளதை முன்னிட்டு, அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது.
உடன் மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி அவர்கள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!