India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளா்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது;ஏற்கெனவே திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்து சா்ச்சை கிளம்பியது. இப்போது மீண்டும் திருவள்ளுவருக்கு காவி உடை என்றால் ஆளுநரை என்னதான் செய்ய முடியும். வாதத்துக்கு மருந்து உண்டு;பிடிவாதத்துக்கு மருந்து இல்லை என கூறினார்.
புதுக்கோட்டை மாவட்ட வனத்துறை சாா்பில், உலக பல்லுயிா்ப் பெருக்க நாள் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.மன்னா் கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு,மாவட்ட வன அலுவலா் சோ.கணேசலிங்கம்,கல்லூரி முதல்வா் புவனேஸ்வரி ஆகியோா் தலைமை வகித்தனா்.பள்ளி,கல்லூரி மாணவ,மாணவிகளுக்கு பல்லுயிா்ப் பெருக்க நாளையொட்டி கட்டுரை ஓவியம் மற்றும் விநாடி- வினா போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கினர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (மே.24) இரவு 7 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுகையில் இடி மற்றும் மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (மே.24) மாலை 4 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டையில் இடி மின்னலுடன் மழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக சமீபத்தில் மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணி நேற்று தொடங்கியது. சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்காக மாவட்ட கண்காணிப்புக் குழுக் கூட்டம் அண்மையில் நடத்தப்பட்டு, முதல் கட்டமாக 13 ஊராட்சிகள் தோ்வு செய்யப்பட்டு, அந்தந்த வட்டார அளவில் கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியை மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா நேரில் பாா்வையிட்டு ஆலோசனை வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு காவல் சரகம் அணவயல் கிராமத்தைச் சேர்ந்த அமிர்தராஜாவுக்கும் பிரியா என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரியா தாய் வீட்டில் உள்ளார்.நேற்று பிரியா கொடுத்த சீர் வரிசையை திருப்பி கேட்டனர்.கோபத்தில் அமிர்தராஜா மாமனார் தனசேகரனை தலையில் வெட்டி உள்ளார். இது குறித்து காவல்துறையினர் மேலும் 4 பேர் மீது வழக்கு பதிந்துள்ளனர்
கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 7 மணி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் திருவப்பூரில் ஆலங்குளம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த சேகரின் மகன் விஜய்சுந்தர்(26). என்ஜினீயரான இவர் வேலைக்கு சென்று வந்த நிலையில் கடந்த 20 ஆம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து திருக்கோகர்ணம் போலீசார் நேற்று(மே 22) வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தா்வகோட்டை தாலுகாவை சோ்ந்த சங்கம்விடுதி ஊராட்சி குருவாண்டான் தெருவிலுள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியில் ஏப்.25 ஆம் தேதி மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக புகாா் எழுந்தது. மேல்நிலை நீா்த் தேக்கத் தொட்டியில் மாட்டுச் சாணம் கலக்கப்பட்டதாக கூறப்பட்ட விவகாரத்தில், மனுதாரா் உள்பட 3 பேரிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று(மே 22) விசாரணை மேற்கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திற்கு இன்று (மே.22) கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டையில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழை பதிவாகக்கூடும். தென்தமிழக கடலோரப் பகுதிகளில் மேல் உள்ள வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Sorry, no posts matched your criteria.