India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் அருணா தலைமையில் பொதுமக்கள் குறைத்தீர்நாள் கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. வருவாய்த்துறை, பேரிடர் மேலாண்மை துறை, ஊரவ வளர்ச்சித் துறை சார்ந்த துறைகளின் நடைபெறும் மக்கள் குறைதீர்ப்பு முகாமில் பொதுமக்கள் கலந்து கொண்ட சிறப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக நீதிக்கான பணிகளை மேற்கொண்டோர், தமிழக அரசு வழங்கும் தந்தை பெரியார் விருதுக்கான பரிந்துரை விண்ணப்பங்களை டிசம்பர் 20 ஆம் தேதிக்குள் தாங்கள் செய்த சமூக நீதிக்கான சாதனைகள், முழுமுகவரி, தொடர்பு எண் ஆகியவற்றுடன் ஆட்சியரக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்கலாம் என கலெக்டர் மு.அருணா கேட்டுக்கொண்டுள்ளார்.

திருச்சி புதுக்கோட்டை மாவட்ட எல்லையான குமாரமங்கலம் எம்ஐஈடி கல்லூரி பின்புறம் உள்ள ரயில்வே ட்ராக்கில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இன்று (நவ30) காலையில் சென்ற ரயிலில் அடிபட்டு வந்தார் காவிநிற வேட்டியும் கருப்பு கலர் துண்டும் அணிந்திருந்தார் இதை அறிந்த ரயில்வே காவல்துறையினர் இவரது உடலை மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பொதுப்பெயர் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில், முதல் கட்டமாக 1000 முதல்வர் மருந்தகம் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி புதுக்கோட்டையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் இணையதள முகவரியில் வரும் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.30) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே மக்கள் அனைவரும் எச்சரிக்கையுடன் இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்டில் தெரிவிக்கவும்

காரையூர் அருகே உள்ள காயம்பட்டியை சேர்ந்த பெண்ணிடம், கடந்த சில நாட்களாக செல்போனில் தொடர்பு கொண்டு அடையாளம் தெரியாத மர்ம நபர் ஆபாசமாகவும், தகாத முறையில் பேசியுள்ளார். பின்னர் இதுகுறித்து அவர் காரையூர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் காரையூர் போலீசார் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த வீரன்னான் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோட்டைப் பட்டினம் சகோதரபுரம் கிராமத்தில் சகாயராணி என்பவர் கடந்த 10 வருடங்களாக விண்மீன் மகளிர் சுய உதவி குழு தலைவியாக இருந்து வந்துள்ளார். இவர் சகோதரபுரம் மற்றும் சதாம் நகர் பகுதியைச் சேர்ந்த சுமார் 80 பெண்களிடம், ஏல சீட்டு மீனவர் பெண்கள் குழு, தீபாவளி பண்டு,தனிநபர் க ஆகியவற்றில் 59,16,000 ரூபாய் பெற்றுக்கொண்டு கடந்த ஒரு மாத காலமாக காணவில்லை என புகார் அளித்துள்ளனர்.

புதுக்கோட்டை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் டிச.6 ஆம் தேதி ஓய்வூதியர்கள் குறை கேட்புக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பங்கேற்று குறைகளை தெரிவிக்க விரும்பும் அனைத்துத்துறை ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் குறைகளை முழுமையான விவரங்களுடன் இரட்டைப் பிரதிகள் எழுதி டிச.2க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இன்று (நவ.29) கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா? கமெண்ட் செய்யவும்

அறந்தாங்கி அரசு கலை அறிவியல் தமிழ் துறை தலைவர் காளிதாஸ் தலைமையில் கொண்ட குழுவினர் ஆட்டாங்குடி தண்டனை கண்மாயில் சோழர்கால சிவன் கோயில் ஒன்றை கண்டுபிடித்தனர் மண்ணில் புதைந்த நிலையில் சிவலிங்கம் காணப்பட்டது “ஸ் வஸ்தி ஸ்ரீ குலோத்துங்க சோழதேவற்கு யாண்டு 45 வது மரமடக்கி சதுர் வேதி மங்கலத்து” கி.பி.1115 ஆண்டில் கோவில் கட்டப்பட்டது என்று தெரிவித்தார். மேலும் அதில் நந்தியம் பெருமாள் இருப்பதும் தெரியவந்தது.
Sorry, no posts matched your criteria.