Pudukkottai

News March 17, 2025

பிளஸ் 2 போதும்: APP டெவலப்பர் ஆகலாம்

image

புதுக்கோட்டையில் தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மொபைல் ஆப் டெவலப்பர் பயிற்சி வழங்கப்பட உள்ளது. இதற்கு 12ஆம் வகுப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும், இப்பயிற்சிக்கு பின்னர் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் ஏற்படுத்தி தரப்படும் என்றும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சியில் சேர விருப்பமுள்ளவர்கள் <>இதை க்ளிக்<<>> செய்து மார்ச் 24ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதை SHARE பண்ணுங்க.

News March 17, 2025

குடிமைப்பணிகள் தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள்

image

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான தொகுதி 1 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் வரும் மார்ச் 18ஆம் தேதி காலை 11 மணிக்கு தொடங்கப்பட உள்ளது. இதுகுறித்து மேலும் விபரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தை நேரிலோ அல்லது 04322 222287 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

News March 16, 2025

ஜெயலலிதா ஆட்சி மறுபடியும் ஆட்சி வரவேண்டும் அதிமுக எல்லோரும் ஒன்றுபட வேண்டு

image

டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஜெயலலிதாவின் ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைய வேண்டும் என்றால் அதிமுக ஒன்று பட வேண்டும். அதை அதிமுகவில் உள்ள 90 சதவீத நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விரும்புகின்றனர்.  தொண்டர்கள் விழித்துக் கொள்ள வேண்டும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அனைவரும் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்து திமுகவை வீழ்த்த வேண்டும்”  என கூறினார்

News March 16, 2025

சீறிப்பாய்ந்த EX மினிஸ்டர் காளை

image

விராலிமலை சட்டமன்ற தொகுதி பெரிய குரும்பப்பட்டி ஸ்ரீ காயாம்பு அய்யனார் கோவில் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்வில் சின்ன கொம்பன், வெள்ளைக்கொம்பன் மற்றும் செவலைக்கொம்பன் ஆகியவை சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது.

News March 16, 2025

புதுகை விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

image

புதுகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மார்ச்.21ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10:30 மணி அளவில் ஆட்சியர் கூட்டரங்கில் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. அங்கு விவசாயிகள் நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் இடுபொருள் இருப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை தெரிந் வ்ப்து கொள்ள கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News March 16, 2025

புதுக்கோட்டை: ராணுவத்தில் சேர வாய்ப்பு

image

இந்திய ராணுவத்தில் நடப்பாண்டுக்குரிய ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்நிலையில் அக்னி வீரர் ஜெனரல் டியூட்டி, அக்னி வீரர் டெக்னிக்கல், அக்னி வீரர் அலுவலக உதவியாளர்/ ஸ்டோர் கீப்பர் டெக்னிக்கல் ஆகிய பிரிவுகளுக்கு <>இங்கே க்ளிக்<<>> செய்து விண்ணப்பிக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஏப்.10ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். உங்கள் பகுதி இளைஞர்களுக்கு SHARE பண்ணுங்க..

News March 16, 2025

40 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய வழக்கில் தீர்ப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் மூட்டம்பட்டியில் 1984-85ஆம் ஆண்டில் குளத்தில் கலிங்கு அமைத்ததில் ரூ.1.51 லட்சம் கையாடல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதியப்பட்டது. இதில் பொதுப்பணி துறையில் பணியாற்றிய பிரபாகரன், தங்கரத்தினம் இருவரும் இறந்து விட்டதால் உயிருடன் உள்ள நடராஜனுக்கு (83) இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

News March 15, 2025

தக்காளி விலை வீழ்ச்சி கிலோ 7-க்கு விற்பனை

image

முக்கண்ணாமலைப்பட்டி வார சந்தையில் தக்காளி கிலோ 
ரூ 7-க்கும் 3-கிலோ ரூ.20க்கும் விற்பனையானது கடந்த சில மாதங்களாக தக்காளி கிலோ 40 வரை விற்பனையானது தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது.
மேலும் நாட்டு கத்திரிக்காய்-60 வெண்டைக்காய்-30, பீர்க்கங்காய்-40, புடலங்காய்-30, மிளகாய்-30, முள்ளங்கி-20, சவ்சவ்-20, முட்டைகோஸ்-20, கோவக்காய்-30, பீட்ரூட்-30, கேரட்-40, உருளைக்கிழங்கு-40, பாவற்காய்-40, விற்பனையானது

News March 15, 2025

40 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய வழக்கில் தீர்ப்பு

image

புதுக்கோட்டை மாவட்டம் மூட்டம்பட்டியில் 1984-85ஆம் ஆண்டில் குளத்தில் கலிங்க் வெட்டியதில் ரூ.1.51 லட்சம் கையாடல் செய்ததாக லஞ்ச ஒழிப்பு போலீசாரால் வழக்கு பதியப்பட்டது. இதில் பொதுப்பணி துறையில் பணியாற்றிய பிரபாகரன், தங்கரத்தினம் இருவரும் இறந்து விட்டதால் உயிருடன் உள்ள நடராஜனுக்கு (83) இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.5,000 அபராதமும் விதித்து புதுக்கோட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

News March 15, 2025

தொகுதி மறு சீரமைப்பு கூட்டாட்சி :  சிதம்பரம் கேள்வி

image

ஆலங்குடியில் காங்கிரஸ் கட்சி கூட்டத்திற்கு பின் எம்பி ப.சிதம்பரம் கூறியதாவது, தொகுதி மறுசீரமைப்பு செய்தால் தமிழகத்துக்கு 39 இடங்களில் 8 இடங்கள் குறைக்கப்பட்டு 31ஆக மாறும். அதனால் ஓரிரு தொகுதிகள் கொண்ட மாநிலங்களுக்கு மக்களவையில் எப்படி மரியாதை இல்லையோ அது போன்ற நிலை நமக்கு ஏற்படும். தமிழகம் உள்பட தென் மாநிலங்களின் குரல் மக்களவையில் ஒடுக்கப்படும். அது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது” என்றார்.

error: Content is protected !!