India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை நகர் பகுதியில் பகல் நேங்களில் வெயில் வாட்டி வந்த நிலையில் இன்று (ஆக07) மாலை பிருந்தவானம், திலகர்திடல், திருக்கோகரணம், மேட்டுப்பட்டி, மச்சுவாடி போன்ற சுற்று வட்டார பகுதிகளில் இடியுடன கூடிய கனமழை பெய்தது. இந்த மழையினால் சாலையில் மழைநீர் ஆறு போல் ஓடியது. இந்த மழையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ஆலங்குடி ஸ்ரீநாடியம்மன் கோவில் மதுஎடுப்பு திருவிழா இன்று நடைபெற்றது. ஆலங்குடியை சுற்றியுள்ள கிராம பகுதிகளில் இருந்து பெண்கள் அலங்காிக்கப்பட்ட மதுகுடங்களை ஊா்வலமாக எடுத்துவந்தனா். கோவிலை அடைந்தபின் எடுத்துவந்த மதுகுடங்களை சுவாமிக்கு வைத்து வழிபட்டனா். சுவாமி நாடியம்மனுக்கு மஹா தீபாதரனை நடைபெற்றது. பக்தா்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மதுஎடுப்பு திருவிழாவில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கலைஞரின் ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று புதுக்கோட்டை வடக்கு ராஜ வீதியில் உள்ள திமுக அலுவலகத்தில் இருக்கும் கலைஞரின் திருவுருவச் சிலைக்கு முதல் ஆளாக சென்று முதல் மாலையை அணிவித்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர்கவிதைப் பித்தன் கலைஞர் முதலமைச்சராக இருந்த பொழுது சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றியவர்.
புதுக்கோட்டை மாவட்ட இயக்க மேலாண்மை அலகில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் 13 வட்டாரங்களில், திட்டம் தொடர்பான பயிற்சிகள் அளிப்பதற்கு 11 வட்டாரத்திற்கு 2 பேர் வீதமும், ஆவுடையார்கோவில் மற்றும் அரிமளம் வட்டாரத்திற்கு 3 பேர் வீதமும் மொத்தம் 28 வட்டார வள பயிற்றுநர்களை தேர்ந்தெடுப்பதற்கு, தகுதியான விண்ணப்பங்களை வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக மாநிலங்களவை MP M.M.அப்துல்லா இன்று டெல்லி பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டு இருப்பதால் புதுக்கோட்டையில் நடைபெற்ற கலைஞரின் நினைவு தின அனுசரிப்பு கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையில் டெல்லியில் கலைஞர் அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அவர்களின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தார்.
புதுக்கோட்டையைச் சேர்ந்த புகைப்பட கலைஞர் ஒருவர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு முக்கிய இடங்களை பிரத்தியேகமாக ஹெலிகாப்டர் மூலம் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். அதில் மீமிசல் கடற்கரை பகுதிகளை பிரத்யேகமான புகைப்படம் எடுத்து வெளியிட்டுள்ளது. அனைவரிடத்திலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் அதிகபட்சமாக கந்தர்வ கோட்டையில் 103 மி.மீ மழை பெய்துள்ளது. மேலும் ஆதனக்கோட்டை 81 மி.மீ, பெருங்களூர் 80 மி.மீ, கீரனூரில் 44 மி.மீ, ஆவுடையார் கோவில் 27 மி.மீ, ஆயிங்குடி 28 மி.மீ, அறந்தாங்கியில் 39 மி.மீ என மாவட்டம் முழுவதும் 754.80 மிலி மழை பெய்தது. சராசரியாக மாவட்ட முழுவதும் 31.48 மழை பெய்தால் வானிலை அறிக்கை மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் நாளை கறம்பக்குடி ஊராட்சி ஒன்றியம், கணக்கன்காடு பி.ஆர்.எம். திருமண மஹாலில், கணக்கன்காடு, முள்ளன்குறிச்சி, பொன்னன்விடுதி, வட தெரு, வணக்கன்காடு, களபம் ஆகிய பகுதிகளில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். எனவே அப்பகுதி மக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுவாக அளித்து பயன்பெற ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார். ஷேர் செய்யவும்
தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை திருமயம் ஊராட்சியில் சிறப்பாக செயல்படுத்தியமைக்காக திருமயம் ஊராட்சி மன்ற தலைவர் சிக்கந்தருக்கு MGNREGES EXCELLENCY AWARD-2024 வழங்கப்படவுள்ளது. இந்திய அரசியலமைப்பு சங்கம் சார்பில் டெல்லியில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் மத்திய அமைச்சர் சிங் பாகேல் பஞ்சாயத்து ராஜ் விருதை வழங்குகிறார். இந்த விருதை பெறுவதற்கு டெல்லி சென்றார் சிக்கந்தர். SHAREIT
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே உள்ள சித்தன்னவாசல் சுற்றுலாத் தலத்திற்கு நாளை அயலகத் தமிழ் மாணாக்கர்கள் வருகின்றனர். தமிழ் வேர்களைத்தேடி என்ற திட்டத்தின்கீழ் மாவட்ட ஆட்சித்தலைவர் நாளை காலை 11.00 மணியளவில் அவர்களை வரவேற்று தமிழ், தமிழர் வாழ்க்கை முறை, பண்பாடு குறித்து கலந்துரையாட உள்ளார்.
Sorry, no posts matched your criteria.