India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆலங்குடி அருகே செம்பட்டிவிடுதி பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (58). இவர் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சிறுமி அவரது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் ஆலங்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அப்புகாரின் பேரில் நேற்று அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ராஜேந்திரனை கைது செய்தனர்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி பணி, ரயில்வே பணி ஆகிய போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்ச்சி வழங்கப்பட உள்ளது. இதற்கான நுழைவுத் தேர்வு நேற்று புதுக்கோட்டையில் 2 மையங்களில் நடைபெற்றது. இதில் தேர்வு எழுத 344 பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 227 பேர் தேர்வு எழுதினர். 117 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதில் தேர்ச்சி பெறுபவர்களுக்கு போட்டிதேர்வுக்கான இலவச பயிற்ச்சி அளிக்கப்பட உள்ளது.
புதுக்கோட்டை வம்பன் காட்டுபகுதியில் பிரபல ரவுடி துரை என்பவர் காவல்துறை நடத்திய என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டார். உடற்கூறாய்விற்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதில் நீதி விசாரணை வேண்டும் என துரையின் உறவினர்கள் கோரிக்கை விடுத்தனர். இந்த என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்க கோட்டாட்சியர் ஐஸ்வர்யாவை நியமித்து ஆட்சியர் மெர்சி ரம்யா உத்தரவிட்டுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2024 – 25 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடு அறிக்கையில் அனைத்து முன்னாள் படைவீரர்களுக்கும் வீட்டுவரித் தொகையினை நீட்டிப்பு செய்ய அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் படைவீரர்கள் செலுத்திய வீட்டு வரித் தொகையினை மீளப்பெற வீட்டுவரி செலுத்திய 6 மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
அன்னவாசல் அருகே வயலோகம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு படிக்கும் மாணவ- மாணவிகள் 15க்கும் மேற்பட்டவர்கள் ஒரே நேரத்தில் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் வயலோகத்தில் இன்று சித்தமருத்துவ முகாம் நடந்தது. இதில் குடுமியான்மலை சித்த மருத்துவர் அமுதமீனா கலந்துகொண்டு மாணவ மாணவிகள், பொதுமக்கள் என பலருக்கு சிகிச்சை அளித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள தமிழ் ஆர்வலர்கள் 2024ம் ஆண்டுக்கான தமிழ்ச் செம்மல் விருது பெற தமிழ் வளர்ச்சித் துறையின் இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து நிரப்பி மாவட்ட தமிழ் வளர்ச்சி உதவி இயக்குநர் அலுவலகத்தில் ஆகஸ்ட் 5ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04322- 228840 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என ஆட்சியர் மெர்சி ரம்யா செய்தி குறிப்பில் கூறியுள்ளார்.
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அமைச்சராக இருந்த போது அவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலிஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நேற்று நீதிபதி சுபத்ரா தேவி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 2 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் இன்று(ஜூலை.13) ரேஷன் கார்டு குறைதீர் முகாம் நடைபெறுகிறது. காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறும் இம்முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், நியாய விலைக்கடை தொடர்பான குறைகள் குறித்து மனு அளிக்காலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் நாளை பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் , இன்று மாலை பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்தது. அதனை தொடர்ந்து புதுக்கோட்டை முதன்மை கல்வி அலுவலர் புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளித்து உத்தரவு பிறப்பித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு இசைப்பள்ளியில் நாட்டுப்புற கலை பயிற்சி வகுப்புகள் நாளை 13ம் தேதி முதல் தொடங்கப்படுகிறது. இப்பயிற்சியில் நாடகம், கிராமியப் பாட்டு, கரகாட்டம், தப்பாட்டம் ஆகிய கலைகளில் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேரலாம். ஓராண்டு பயிற்சிக்குப் பின்னர் அரசுத் தேர்வு நடத்தப்பட்டு பல்கலைக்கழகம் மூலம் சான்றிதழ் வழங்கப்படும் என ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.