Pudukkottai

News August 12, 2024

ரூ.14.24 லட்சம் நிதி வழங்கிய மாணவர்கள்

image

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புதுக்கோட்டை எஸ்எம்எஸ் பள்ளி மாணவ, மாணவிகள் ரூ.14.24 லட்சம் நிவாரண தொகையை மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் வழங்கினர். மாவட்ட ஆட்சியர் அருணா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், இவர்களை போல் அனைவரும் உதவி செய்ய வேண்டும் என ஆட்சியர் அருணா கேட்டுக்கொண்டார்.

News August 12, 2024

மக்களுடன் முதல்வர் முகாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் வரும் 14ஆம் தேதி மக்களுடன் முதல்வர் முகாம் ஆவுடையார்கோவிலில் அபிராமி மஹால், கறம்பக்குடி ரெகுநாதபுரம், சித்தி விநாயகர் மஹால், விராலிமலை முருகன் கோயில் மஹாலிலும் நடைபெறும் என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். இதில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை மனு அளித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

News August 12, 2024

அமைச்சர்களிடம் வாழ்த்து பெற்ற புதுக்கோட்டை மேயர்

image

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு மற்றும் சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்புச்சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி இருவரையும் இன்று சந்தித்து கொசட் கோட் காண்பித்து புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் துணை மேயர் லியகத் அலி ஆகியோர் வாழ்த்து பெற்றனர்.

News August 12, 2024

ரூ.14.24 லட்சம் நிதி வழங்கிய மாணவர்கள்

image

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புதுக்கோட்டை எஸ்எம்எஸ் பள்ளி மாணவ, மாணவிகள் ரூ.14.24 லட்சம் நிவாரண தொகையை மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் வழங்கினர். மாவட்ட ஆட்சியர் அருணா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், இவர்களை போல் அனைவரும் உதவி செய்ய வேண்டும் என ஆட்சியர் அருணா கேட்டுக்கொண்டார்.

News August 12, 2024

மாற்றுத்திறனாளிகளின் மனுக்களுக்கு உடனடி தீர்வு

image

புதுக்கோட்டை ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். மேலும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார். கூட்டத்தில் மாவட்ட வருவாய் பொறுப்பு ரம்யா தனித்துணை ஆட்சியர் சோபா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

News August 12, 2024

ரூ.14.24 லட்சம் நிதி வழங்கிய மாணவர்கள்

image

வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு புதுக்கோட்டை எஸ்எம்எஸ் பள்ளி மாணவ, மாணவிகள் ரூ.14.24 லட்சம் நிவாரண தொகையை மாவட்ட ஆட்சியர் அருணாவிடம் வழங்கினர். மாவட்ட ஆட்சியர் அருணா மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்து தெரிவித்தார். பின்னர், இவர்களை போல் அனைவரும் உதவி செய்ய வேண்டும் என ஆட்சியர் அருணா கேட்டுக்கொண்டார்.

News August 12, 2024

உதயமானது புதுக்கோட்டை மாநகராட்சி

image

புதுக்கோட்டை நகராட்சி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டதற்கான உத்தரவு ஆணையை முதல்வர் ஸ்டாலின் சற்றுமுன் வெளியிட்டார். புதுகை நகராட்சியுடன் 11 ஊராட்சிகளை இணைத்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. பெருநகரங்களுக்கு இணையான சாலை, குடிநீர், பாதாள சாக்கடை வசதிகளை செய்ய மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

News August 12, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் இந்த பகுதியில் மின்தடை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நார்த்தாமலை, வெள்ளனூர், விராலிமலை உள்ளிட்ட மின்கோட்ட பகுதிகளில் நாளை (ஆக.13) மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இதனால், புதுநகர், வெள்ளனூர், கிளியூர், மேலூர், நக்கீரர்வயல், இரும்பாளி, விராலிமலை, விளத்துப்பட்டி, உப்பிலிகுடி, காவேரி நகர் ,சத்தியமங்கலம் உள்ளிட்ட பிற பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News August 12, 2024

மாநகராட்சியாக உதயமாகும் புதுக்கோட்டை

image

தமிழகத்தில் புதிதாக மேலும் 4 மாநகராட்சிகள் தரம் உயர்த்தப்பட்டு, அதற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி வாயிலாக புதுக்கோட்டை மாவட்டத்தை மாநகராட்சியாக அறிவிக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனவே, திருச்சிராப்பள்ளி மாநகராட்சி துணை ஆணையர் நாராயணன், புதுக்கோட்டை மாநகராட்சியின் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

News August 11, 2024

புதுக்கோட்டையில் மக்களுடன் முதல்வர் முகாம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் “மக்களுடன் முதல்வர்” முகாம் வரும் 13ஆம் தேதி அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், மதியநல்லூர் சமுதாயக் கூடத்தில், கோதண்டராமபுரம், பெருமாநாடு, புதூர், சித்தன்னவாசல், பனம்பட்டி, மதியநல்லூர், ஆரியூர், திருவேங்கைவாசல் ஆகிய ஊராட்சிகளுக்கும் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களது கோரிக்கை தொடர்பாக மனுக்களை அளித்து பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். ஷேர் செய்யவும்

error: Content is protected !!