India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் நற்பவளக்குடி அருள்மிகு ஸ்ரீ மெய்யர் அய்யனார் திருக்கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கட்டுமான பணியினை சுற்றுச் சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கோவில் நிர்வாகத்துறையினருடன் இன்று ஆய்வு மேற்கொண்டார்.
குளத்தூரை அடுத்த மாத்தூரைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (54). மாத்தூர் பஞ்சாயத்து தலைவராக பதவி வகித்தாலும் தனது தொழிலான பிணம் எரிக்கும் தொழிலை விடாமல் செய்து வருகிறார். சாலையில் இறந்தவர்களையும் தனது சொந்த செலவில் அடக்கம் செய்கிறார். மேலும் மனிதர்கள் மட்டுமல்லாது, சாலையோரம் இறந்து கிடக்கும் நாய், ஆடு, மாடு போன்ற ஜீவராசிகளையும் தானே எடுத்துச் சென்று புதைத்து விடுவார் எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
புதுக்கோட்டை 1974 ல் உருவாக்கப்பட்டு 51வது ஆண்டில் உள்ளது. மாவட்டத்தில் தொடர்ந்து இதுவரை 42 மாவட்ட ஆட்சியர்கள் பணியில் இருந்துள்ளனர். தற்போது 43 ஆவது மாவட்ட ஆட்சியராக அருணா ஐஏஎஸ் நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். கடந்த 5 ஆண்டுகளில் உமாமகேஸ்வரி, கவிதா ராமு, மெர்சி ரம்யா என 3 பெண் மாவட்ட ஆட்சியர்களே பணியாற்றி வந்த நிலையில் தற்போது தொடர்ந்து 4 வது பெண் மாவட்ட ஆட்சியராக அருணா ஐ.ஏ.எஸ் பதவி ஏற்றுள்ளார்.
பொற்பனைக்கோட்டையில் 26 நாட்களாக நடக்கும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை இங்கு இரும்பிலான ஆணிகளே கிடைந்த நிலையில் நேற்று 5 செம்பு ஆணிகள் கிடைத்துள்ளன. மேலும், செம்பில் வார்க்கப்பட்ட அஞ்சனக்கோலும் கிடைத்திருப்பதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தனது X தள பக்கத்தில் பதிவிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
பொற்பனைக்கோட்டையில் நடந்து வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சியில் தற்போது செம்பு ஆணிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை இங்கு இரும்பிலான ஆணிகளே கிடைந்த நிலையில் இன்று 5 செம்பு ஆணிகள் கிடைத்துள்ளது. மேலும், செம்பில் வார்க்கப்பட்ட அஞ்சனக்கோலும் கிடைத்திருப்பதாக அகழ்வாராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
நீலகிரி மாவட்ட ஆட்சியராக இருந்த மு.அருணா சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக நியமணம் செய்யப்பட்டார். இவர் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தின் 43ஆவது ஆட்சித் தலைவராக நேற்று பொறுப்பேற்றார். இந்நிலையில் அவரை இன்று(ஜூலை 20) மாநகராட்சி மேயர் திலகவதி செந்தில் மற்றும் துணை மேயர் மு. லியாகத் அலி ஆகியோர் மரியாதை நிமித்தமாக சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினர்.
கடந்த மாதம் நிறைவேற்றப்பட்ட சட்டசபை கூட்டத் தொடரில் புதுக்கோட்டை நகராட்சியை மாநகராட்சியாக தரன் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 14 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்பட்டது. இந்த 14 சட்ட மசோதாக்களுக்கும் கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். இந்நிலையில் புதுக்கோட்டை நகராட்சிய இனிமேல் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் திருட்டுப்போன, தொலைந்து போன செல்போன்கள் தொடர்பாக சைபட் கிரைம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதில் கடந்த 2 மாதங்களில் காணாமல் போன ரூ.25,65,000 மதிப்புள்ள 171 செல்போன்கள் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட செல்போன்களை உரிமையாளர்களிடம் நேற்று போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே ஒப்படைத்தார். கடந்த ஆண்டு 283 செல்போன் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் ரெங்கம்மால் சத்திரத்தில் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பாக புதிதாக கட்டப்பட்டு வரும் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தின் தரம் குறித்து இன்று புதுக்கோட்டை எம்எல்ஏ முத்துராஜா ஆய்வு மேற்கொண்டார். அரசு குறிப்பிட்டுள்ள காலக்கெடுக்குள் கட்டிடப் பணிகளை முடிக்கவும், கட்டிடத்தின் தரம் மற்றும் முறையாக பராமரிக்கப்பட வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளைத் தோ்வு செய்யும் பணிகளை, ரேஷன் கடை ஊழியர்கள் கடந்தாண்டு மேற்கொண்டனர். ஜூலை.23, ஆகஸ்ட்.4 ஆகிய விடுமுறை தினங்களில் பணிகளை மேற்கொண்டதால், அதனை ஈடுசெய்யும் வகையில் நாளை (சனிக்கிழமை) விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. இதனால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் நாளை ரேஷன் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.